தொகுப்பு

Posts Tagged ‘வார்த்தைகள்’

வார்த்தைகள்…..

வார்த்தைகளுக்கு இருக்கக் கூடிய சக்தி மிகப் பெரியதுதான். ஆறுதல் தரும் வார்த்தைகளாகட்டும், கோபத்தில் திட்டும் வார்த்தைகளாகட்டும், காதலில் கொஞ்சும் வார்த்தைகளாகட்டும், ஊக்கம் தரும் வார்த்தைகளாகட்டும் ஒரு சில வார்த்தைகள் நம்முள்ளோ () இந்த சமூகத்திலோ ஏற்படுத்தும் மாற்றங்கள் பிரமிக்க வைக்க கூடியவை.

2003 ஆம் வருடத்தில் நான் படித்த () அறிந்த இருவருடைய வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தவை. என்னுள் சில மாற்றங்களை ஏற்படுத்தியவை. ஓரளவு என்னை ஊக்கமூட்டியவை என்று சொல்லலாம்.

உண்மையில் அந்த வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு பிரபலமான வார்த்தைகள் அல்ல. அது ஒன்றும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்க வில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய விளைவுகள் சாதாரணமானதன்று.

முதல் நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டில் தற்போதைய முண்ணனி நடிகையும், அந்த காலகட்டத்தில் அப்போதுதான் பாலிவுட்டில் கால் பதித்திருந்த நடிகையுமான பிரியங்கா சோப்ரா.

என்ன காரணத்திலோ எனக்கு நடிகைகள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. இது காலங் காலமாக சினிமாவில் அவ்ர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் காரணமாக இருக்கலாம் () தொலைகாட்சியில் அவர்கள் கொடுக்கும் பேட்டி காரணமாக இருக்கலாம் (எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த ஒரு நடிகையின் பேட்டியை விரும்பியோ, காத்திருந்தோ பார்த்தது கிடையாது. அந்தளவு உப்பு சப்பில்லாமல் இருக்கும்).

வருடா வருடம் எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை நடத்தும் அவார்டு ஃபார் கார்பரேட் எக்ஸலன்ஸ் (Award for Corporate Excelence)’ என்ற விழாவில் கலந்து கொண்டு பேச பிரியங்கா சோப்ராவிற்கும் அழைப்பு வந்திருந்தது என்று கேள்விப்பட்டவுடன் என்னுள் எழுந்த கேள்வி கார்பரேட் எக்ஸலன்ஸ் அவார்டு ஃபங்சனுக்கும் ஒரு நடிகைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

தவிர இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகைகளின் புத்திசாலித்தனமோ () புரட்சிகர சிந்தனையோ பெரும்பாலும் அவர்களது ஆடைகளிலும், நகைகளிலும், இதர ஃபாஷன் சமாச்சாரங்களிலும் மட்டுமே வெளிப்படும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அழைக்கப் படுவதே நிகழ்ச்சி சற்று கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவே போல் இருக்கும். அவர்களும் அதை செவ்வனே நிறைவேற்றவும் செய்வார்கள். பிரியங்கா சோப்ராவின் அழைப்பிற்கு பின்னும் வேறு காரணங்கள் இருந்திருக்க முடியாது.

ஆனால் பிரியங்கா சோப்ரா பேசிய பேச்சு எனது எண்ணத்தை மாற்றச் செய்தது.

 

அவருடைய பேச்சின் சாரம்சம்,

 

இன்று, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீக்கிரம் எனது படப்பிடிப்பை முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளரிடம் சொன்ன போது அவர் என்ன விசேஷம் என்று கேட்டார், அப்போதுதான் நான் இந்த விழாவைப் பற்றி சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே கேட்டார், உனக்கும் இந்த விழாவிற்கும் என்ன சம்பந்தம்? இல்லை உனக்கும் இந்திய பொருளாதாரத்திற்கும்தான் என்ன சம்பந்தம்?. எனக்கு தெரிந்த ஒரே சம்பந்தம் உன்னுடைய பேரும் P.C., இந்த விழாவை தலைமை தாங்குறவரும் P.C. (.சிதம்பரம்). மற்றபடி வேறு ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.

உண்மைதான், நாங்கள் எல்லாம் சினிமாக் கலைஞர்கள். எங்களுக்கும் கலைக்கும் சம்பந்தம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எங்கள் துறையில் நாங்கள் பல விஷயங்களை சாதித்திருக்கிறோம். உலக சினிமாவிற்கு இணையாக இந்திய சினிமாவையும், அதில் தொழில் நுட்பத்தின் பங்கையும் பெருமளவு வளர்த்திருக்கிறோம். சத்யஜித்ரேயின் மூலமாக உலகிற்கு எங்களது இருப்பை தெரிவித்த நாங்கள், இன்று ஒரு இந்திய சினிமாவை (லகான்) ஆஸ்காருக்கு தகுதி பெறச் செய்திருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்பாக இன்னொரு இந்தியரின் படத்தை 7 ஆஸ்கார் விருதிற்காக தகுதி பெறச் செய்திருக்கிறோம். இப்படி எங்கள் துறையின் வளர்சியை உலகிற்கு கம்பீரமாக அறிவித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கும் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அதிக சம்பந்தம் இல்லைதான்.

இன்று என் முன்னால் அமர்ந்துள்ள பலருடன் எனது பரிச்சயம் நியூஸ் பேப்பரின் மூலம் மட்டுமே. இவ்வளவு ஏன்?இதுவரை இந்த விழாவில் நான் யாருடனும் () என்னுடன் யாரும் கை குலுக்கவோ () பேசவோ இல்லை!

நாங்கள் சினிமாக் கலைஞர்கள். நாங்கள் சாதரண மனிதனின் கனவுகளையும், ஆசைகளையும் திரையில் காண்பிக்கிறோம். எங்களுக்கு அவனது சந்தோசம் மட்டுமே முக்கியம். அவனது கனவுகளை அவனுக்கு திரையில் காண்பிப்பதில் அவனை மகிழ்விக்கிறோம். ஆனால் நீங்கள் அவனது ஆசைகளையும் கனவுகளையும் அவனுக்கு நிஜமாக்கித் தருகிறீர்கள். திரையில் நாங்கள் காட்டும் மாற்றத்தை, நிஜத்தில் செயலாக்குகிறீர்கள். நாங்கள் எங்களது வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் சொல்கிற வேளையில், நீங்கள் இந்தியாவின் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துச் செல்கிறீர்கள். திரையில் வேண்டுமானால் நாங்கள் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் நீங்கள் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்………”

அன்று அந்த பேச்சை முடித்து விட்டு அவர் கீழே இறங்கும் போது அவ்ரை முதல் ஆளாக நின்று எதிர்கொண்டது வேறு யாருமல்ல, .சிதம்பரம்தான், அது மட்டுமல்ல அவர் பின் ஏறக்குறைய எல்லா தொழிலதிபர்களும் வரிசையில் நின்றனர் பிரியங்கா சோப்ராவிடம் கை குலுக்குவதற்கும், அவருடன் பேசுவதற்கும்.

ஒரு கூட்டத்தையே தன் பக்கம் திருப்பும் ஆற்றலும், சொல்லாடலும் அனைவருக்கும் வந்து விடாது!. அதுவும் புத்திசாலிகளும், பொருளாதார வல்லுநர்களும் நிறைந்த அந்த சபையை தன் பக்கம் திருப்பினார் என்றால் அது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.

—————————————————————————­——————————————————————

முதலாமானவரின் விஷயத்தில் அவருடைய வார்த்தைகளுக்கான விளைவுகள் உடனடியாக தெரிந்தன. ஆனால் இரண்டாமவரின் விஷயத்தில் அவருடைய வார்த்தைகளை விட அதில் அடங்கிய செய்தியும், செய்தியைத் தொடர்ந்த நிகழ்சிகளின் விளைவுகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. அதனுடைய விளைவுகள் கூட உடனடியாக தெரியவில்லை, ஜனவரி 10, 2008ல் தான் தெரிந்தது. ஆனால் தெரிந்த போது அதன் சக்தி வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.

அந்த செய்திகளுக்கு சொந்தக்காரர் ஒன்றும் சாதாரணமானவரள்ள! அவர் ஜனவரி மாதத்தில் (2008) உலக அளவில் ஒரே சமயத்தில் 25க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருந்தார், கார்னகி மெடல் ஆஃப் பிலந்த்ராபி அவார்டுக்கு சொந்தக்காரர், 2007 ல் உலகின் மிக முக்கியமான மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 2007ல் இந்தியாவின் மிகப் பெரிய பிசினஸ் acquasition க்கு சொந்தக்காரர், இந்தியா டுடே பத்திரிக்கையின் இந்தியாவின் மிகச் சக்தி வாய்ந்த மனிதர்கள்பட்டியலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்திலும், தொடர்ந்து ஆறு வருடங்களாக முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர் ……

இப்படி ஒரு நீண்ட பட்டியலுக்கு சொந்தக்காரரான அவர், ஜனவரி 10, 2008ல் சொன்ன வார்த்தகள் ‘A Promise is a Promise’.

 

அந்த சரித்திரம் என்ன? அதனை படைக்க அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? ஒரு அசாத்தியம் எப்படி சாத்தியமாகிற்று? மிக விரைவில்!…..