தொகுப்பு

Archive for the ‘Uncategorized’ Category

வாய்க்கப் பெற்றவர்கள்!

corruption

முன்பெல்லாம் ஊரிலும் சரி, பொதுத் தளங்களிலும் சரி, கட்சிக்காரர்கள் குறைவாக இருப்பார்கள்! பொதுமக்கள் அதிகமாக இருப்பார்கள்! அவர்களுக்கும் சில சார்பு நிலை இருந்தாலும், அவை முழுக்க தேர்தல் சமயத்தில் மட்டுமே வெளிப்படும்!

இப்பொழுதோ நிலைமை தலைகீழ்! அரசியல்வாதிகளை விட இவர்கள் எந்நேரமும் அரசியல் பேசுகிறார்கள்.

ஆதாயத்திற்க்காகவோ, ஆதர்சத்திற்காகவோ, ஒரு பெருங் கூட்டமே இன்று, சார்பு நிலையை நோக்கி நகர்ந்து விட்டது! நீதி, நியாயம் எல்லாம் சார்பு நிலைக்கு அப்புறம்தான்!

எஞ்சியிருக்கிற சொச்சமும், தப்பு, தப்பே இல்லை என்கிற மனநிலைக்குதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்பட்டு வருகிறது!

‘அயன் ராண்ட்’ படி, சுய நலம் அப்படி ஒன்றும் தவறான செயல் இல்லைதான்! ஆனால், இங்கு ஒரு பெருங்கூட்டமே, மற்றவர்க்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தம் நலன் முக்கியம் என்ற மனநிலைக்கு மாறிக் கொண்டே வருகின்றது!

வெட்டியாக சம்பளம் வாங்கிக் கொண்டு, அதற்கு ஈடான உழைப்பில் பாதி கூட கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு சற்றும் இல்லை பல அரசு துறைகளில்! கேவலம் தெருவில் சற்றேனும் யார் மேலாவது மோதிவிட்டால், சாரி சொல்லவோ அல்லது அப்படி சொன்ன சாரியை ஏற்கும் பக்குவமோ கூட இல்லை!

ஊரில், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இருக்க, கைப்பற்றிய புறம்போக்கு நிலத்தை பிடுங்காமல் இருக்க, மாட்டிக் கொண்ட வழக்கு, பிரச்சினையில் இருந்து தப்பிக்க, போன்ற காரணங்களுக்காகவே, ஒரு கூட்டம் கட்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது!

வாரம் குறைந்தது இரண்டு, மூன்று முறை தண்ணி அடிப்பவர்கள் கூட விஜயகாந்த் குடிகாரர் என்று நக்கல் அடிக்கிறார்கள்! நடிகை என்பதனாலேயே, குஷ்புவைப் பற்றி வக்கிரமான கமெண்ட்டுகளை பகிர்கிறார்கள்! ஜாலிக்குதான் என்று சொல்லி தொடர்ந்து யாருடனாவது, யாரையாவது இணைத்து எழுதப்படும் கமெண்டுகளுக்கு லைக்கிடுகிறார்கள்!

தன் ஆதர்சத்திற்க்காக, எவ்வளவு வன்மம் கக்க முடியுமோ, அவ்வளவு வன்மமும் கக்கி விட்டு, இனி நாடு எப்படி முன்னேறும் என்று கவலைப் படுகிறார்கள்!

பத்திரிக்கை அலுவலகத்தை எரித்தவர்களும், பேருந்தை எரித்தவர்களும் மோதிக் கொள்கிறார்கள்!

குடி தவறு என்று சொல்லுபவர்கள், குடியிருக்கும் காலணியையே எரிக்கிறார்கள்!

நீதியரசரை மதிக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் வக்கீல்கள், காவல்துறையை உதாசீனப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்!

உண்மையான வாழ்க்கை நெறிமுறை, எங்கள் மதம் என்று சொல்லும் அடிப்படைவாதிகள்தான், இயற்கைச் சீற்றத்திற்கு காரணமே மதக் கோட்பாட்டை மீறியதுதான் என்கிறார்கள்!

சிலை கடத்தியவர்களும், கள்ளச் சாராயம் காய்ச்சியவர்களும், நிலத்தை அபகரித்தவர்களும் கல்வித் தந்தையாய் ஆராதிக்கப்படுகிறார்கள்!

அரசியல்வாதிகளே மோசம் என்று சொல்லிக் கோண்டே, இந்த முறை ஓட்டுக்கு எவ்வளவு என்று பேரம் பேசுகிறார்கள்!

இந்தக் கூட்டத்திற்கு மீண்டும் காமராசரோ, பெரியாரோ, அம்பேத்காரோ கிடைத்து விட முடியுமா என்ன??? சல்மான்கான்களும், சஞ்சய்தத்துகளையும் வெற்றி நாயகர்களாய் வலம் வருவதற்கு ஏற்ற, தகுதி வாய்ந்த கூட்டம் இது!

வாய்க்கப் பெற்றவர்கள் கொஞ்சமேனும், இந்த அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்கிக் கொள்ள உழையுங்கள். வாய்க்கப் பெறாதவர்கள், வாய்க்கப் பெற்றவர்களாய் மாறுவதற்கு உழையுங்கள்!

நாடு நாசமாகப் போனால் நமக்கென்ன! கொஞ்சமேனும் நம் குடும்பம் நன்றாக இருப்பதற்கு பாடுபடுவோம்!

பிரிவுகள்:Uncategorized

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – நிறைவு

முதல் பாகத்திற்குச் செல்ல

சட்டென்று விழுந்தது நெஞ்சம் – சிறுகதை (பாகம் 1)

பாகம் – 2

சரி, இப்ப இந்த விஷயத்தை எப்படி எங்க அப்பாஅம்மாவுக்கு எப்படி போய் சொல்றது என்று முணுமுணுத்துக்கொண்ண்டே திரும்பியவனை நந்தினியின் குரல் தடுத்தது……

முரளி, நீங்க தப்பா நினைச்சுக்காட்டி உங்களை ஒண்ணு கேக்கலாமா?

சொல்லுங்க?

இல்ல, பொண்ணு பாக்கப் போனா என்ன பேசுறதுன்னு யோசிச்சேன்னு சொன்னீங்களே!!! அப்படி என்ன யோசிச்சீங்க???

இந்தக் கேள்வி முரளிக்கும் மெல்லிய ஆர்வத்தை ஏற்படுத்தியது…..ஏன் கேக்கறீங்க?

ஒரு கியுரியாசிட்டிதான், நீங்க வேற யோசிச்சிட்டு வந்தேனு சொன்னீங்களா, அதான்……

அவன் கேள்வியாக நோக்கியதை உணர்ந்ததாலோ என்னமோ மீண்டும் சொன்னாள், என்னைப் பொருத்த வரை நான் ஒண்ணுமே யோசிக்கலீங்க. இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லனுங்கிற ஒரே முடிவுல இருந்ததால வேறெதுவும் யோசிக்கலை!!! அதான் கேக்கறேன்…..

மெல்லிய வெட்கத்துடனும், சிரிப்புடனே முரளி சொன்னான், பெரிசால்லாம் ரொம்ப யோசிக்கலைங்க, அந்தப் பொண்ணுக்கு முழு விருப்பமாங்கிறதை தெரிஞ்சுக்கணும்….அவங்க கேரியர்ல என்ன குறிக்கோள், புத்தகம் படிக்கற பழக்கம் இருக்கா, அவங்களோட விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் என்னென்ன இதெல்லாம்……..என்று இழுத்தவன் சற்றே யோசனையுடன் சொன்னான், அப்புறம், கல்யாணம் உறுதியாயிடுச்சினா என்னை எப்பவும் பேர் சொல்லி, வா, போ ன்னு சொல்லிதான் கூப்பிடணும்னு கேட்டுக்குவேன்……

மெல்லிய சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு இந்தப் பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது……பேர் சொல்லி, வா போ ன்னா????

ஆமாங்க, அலுவலகத்துல யார் யாரையோ ஜூனியர், சீனியர்னு வித்தியாசம் இல்லாம, நட்பா  பழகணுங்கிறதுக்காக எல்லாரும் பேர் சொல்லி கூப்பிட்டுக்கறோம்…..ஆனா வாழ்க்கைல காலம் முழுக்க இன்னொருத்தரோட தோழமையோட பழகவேண்டிய நிலைல, வெறும் வார்த்தைகள்ல மரியாதை வேணாம்னு தோணுது…..

முதன் முதலாக முரளி மீதான சுவராசியம் நந்தினிக்கு அதிகமாகியது…..

முரளியே பேசினான், உண்மையில இந்த பொண்ணு பாக்கறதெல்லாம் எனக்கு கொஞ்சம் வேடிக்கையாத்தாங்க இருக்கு….. பத்து நிமிஷத்துல ஒரு பொண்ணுகிட்ட பேசி என்னத்தைப் புரிஞ்சிக்க முடியும்னு தெரியலை……அதுவும் எந்தப் புக்லியும் வேற இந்த விஷயத்தைப் பத்தி போடுலியா அதான் ஒரே குழப்பமா இருக்கு………

இயல்பாக பேசிக்கொண்டிருந்தவன் மெல்ல ஜாலியாகவும் பேச ஆரம்பித்தது, நந்தினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது……கிண்டலாகவே கேட்டாள், இவ்ளோ நம்பிக்கையில்லைன்னா எதுக்குங்க பொண்ணு பாக்க வரணும்??? பேசாம யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கலாமே!!!!

லவ்வா!!! நானா!!! திகைப்புடனே கேட்டான் முரளி….

ஏன், நீங்க லவ் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? கண்டிப்பா கோ எட் காலேஜ்லதான் படிச்சிருப்பீங்க, இப்ப ஆஃபிஸ்ல, வெளியன்னு ன்னு நீங்க லவ் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருந்துருக்குமே???

தோணலைங்க……

என்ன தோணலை?

இல்லை, இதுவரைக்கும் யார்கிட்டயும் அந்த மாதிரி லவ் பண்ணனும்னு தோணலை!!! காலேஜ்ல, ஆஃபிஸ்லன்னு பொண்ணுங்க நிறைய பேரு இருக்காங்கதான்…..அதுக்காக எல்லார்கிட்டயும் சொல்லிட முடியுமா என்ன?……………அவள் ஜாலியாக பேசினதாலோ என்னமோ முரளியும் கேட்டான், இவ்ளோ பேசுறீங்களே நீங்க ஏன் யாரையும் லவ் பண்ணலை???

இப்போது திகைப்பது அவள் முறையாயிற்று…..நானா?

ஏன், நீங்க லவ் பண்ணக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன? நீங்களும் கண்டிப்பா கோ எட் காலேஜ்லதான் படிச்சிருப்பீங்க, இப்ப ஆஃபிஸ்ல, வெளியன்னு நீங்களும் லவ் பண்றதுக்கு நிறைய சான்ஸ் இருந்துருக்குமே??? அவள் கேட்ட பாணியிலேயே முரளி கேட்டதில் நந்தினிக்கும் சிரிப்பு வந்தது…………சீரியசாத்தாங்க கேக்கறேன், ஒரு வேளை நீங்க லவ் பண்ணியிருந்தா இப்ப நீங்க கவலைப்படாம இருந்திருக்கலாமே!!!

மெல்ல யோசித்தவாறே சொன்னாள், லவ் பண்ணனுமேன்னு பண்ண முடியுமா என்ன???

என்னைப் பொறுத்த வரை லவ்வுங்கிறதை நட்போட அடுத்த கட்டமாத்தான் பார்க்கறேன், முழுசா புரிஞ்சுக்கலைன்னாலும், அட்லீஸ்ட் ஒரு பேசிக் அண்டர்ஸ்டாண்டிங்னாச்சும் வேணும்லியா…….. சோ, அப்படி யாரும், எதுவும் எனக்கும் இதுவரைக்கும் தோணலைங்க……….ரொம்ப சீரியசா பேசுவது போல் உணர்ந்ததாலோ என்னமோ திடீரென்று நிமிர்ந்து கிண்டலாகவேச் சொன்னாள்., நம்மூரில ஒரு பொண்ணே முதல்ல போய் லவ் பண்றேன்னு சொன்னாலே ஏதாவது சொல்லுவாங்க…….தவிர என்கிட்டயும் யாரும் வந்து லவ் பண்றேன்னு சொல்லலீங்க…….

ஓகோ, அப்ப இனிமே யாராவது வந்து சொன்னா யோசிப்பீங்களோ????

தோளைக் குலுக்கியவாறே அலட்சியமாகச் சொன்னாள், ம்ம்ம்ம், இனிமே யாராவது சொன்னா யோசிப்பே…..

இடைமறித்தார் போல் அவன் குரல் கேட்டது., “I Love You”

சில நொடிகள் செயலற்றுப் போனாள், என்ன, என்ன சொன்னீங்க???

அழுத்தமாகவே பதில் சொன்னான் முரளி ”I     Love     You”

என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது, அதையும் மீறி எங்கோ பார்த்தவாறே கேட்டாள், ஏன்???

எனக்கு உங்களைப் புடிச்சுதான் இங்கியே வந்தேன் நந்தினி!!! உங்ககிட்ட பேசினதுக்கப்புறம் இன்னும் அதிகமா எனக்கு புடிச்சிருக்கு!!!! தவிர இதுக்கு மேல நான் யரையாவது பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்றதெல்லாம் வேலைக்காவாதுங்க!!!! கிண்டலாக பேசியவன், அவள் சீரியசாக அவளைப் பார்ப்பதை உணர்ந்ததால், சீரியசாத்தாங்க சொல்றேன்…….நீங்க யாரும் ”I Love You”  சொன்னதில்லைன்னவுடனே, ஏன்னு தெரியலை உடனே சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்………

மவுனத்தை கலைத்தபடி அவனே சொன்னான், இதைவிட வேறென்னங்க எதிர்பார்க்க முடியும் ஒரு பொண்ணுகிட்ட….. உங்க அப்பாஅம்மாவை கடைசி வரை பாத்துக்கணுங்கறதுக்காக கல்யாணத்தை வேணாம்னு சொன்ன அன்பு, என்கிட்ட நேரா சொன்ன தைரியம், வெட்கம் கலந்த கோபம், கிண்டல், காதல்ல இருந்து எல்லா விஷயங்களையும் பேசக் கூடிய தெளிவு இப்படி எத்தனையோ சொல்லலாம்…….

முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்பட்டுவிடாமலேயே நந்தினி கேட்டாள்…பத்து நிமிஷத்துல என்ன புரிஞ்சிக்க முடியும்னு சொன்னீங்க, இப்ப ரொம்பப் புரிஞ்சவர் மாதிரி பேசுறீங்க???

உங்களை முழுசா புரிஞ்சிகிட்டேன்னு நான் சொல்லலைங்க, ஆனா உங்களை என்னால புரிஞ்சிக்க முடியும்னு சொல்றேன்………….பதில் இன்னும் சொல்லலையே???

சி(ப)ல நொடிகள் யோசித்தவள், மெல்லிய குரலில் சொன்னால் ‘ம்’

ஒற்றை எழுத்து அதுவும் ஒரு ஒற்றெழுத்து தன் வாழ்க்கைக்கே பொருள் தரக்கூடும் என்பதை அக்கணம் முரளி உணர்ந்தான்……. மிகுந்த சந்தோஷத்துடனே கேட்டான், எப்படி, ஏன்????

தெரியலீங்க, வரும்போது வேணாம்னு சொல்லத்தான் வந்தேன், ஆனா எனக்காக நீங்க பேசுனது, புரிஞ்சுக்க முயற்சி செஞ்சது, உண்மையா இருந்தது எல்லாம் என்னை யோசிக்க வெச்சுது…………..

சற்றே வெட்கத்துடனும், கிண்டலாகவும் எங்கோ பார்த்தபடியே சொன்னாள், இதைவிட வேறென்னங்க எதிர்ப்பார்க்க முடியும் ஒரு ஆண்கிட்ட…..என்னை விட என் உணர்வுகளை மதிக்கிற நேசம், காலம் முழுக்க நட்பைத் தருவேங்கிற உறுதி, கிண்டலுக்கு நடுவே இருக்கற மென்மை இப்படி எத்தனையோச் சொல்லலாமே…………

முதன்முறையாக வாய்விட்டுச் சிரித்த முரளி கிண்டலாகவே கேட்டான், அப்ப உன் அப்பாஅம்மா நம்ம கூட இருக்க நான் ஒத்துக்குவேங்கற நம்பிக்கை வந்துருச்சா???

சற்றே யோசனையுடன் சொன்னாள், உங்க மேல முழு நம்பிக்கை வந்துருச்சுன்னு சொல்ல முடியாது, ஆனா உங்களை எப்படியும் ஒத்துக்க வைக்க முடியும்னு தோணுது…..

சிரிப்போடவே சொன்னான் முரளி, நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா என்னான்னு எனக்குத் தெரியலை, ஆனா ரொம்ப சுவராசியமா இருக்கும்னு தோணுது!!!

ஏன்?

இப்படி பதிலுக்குப் பதில் பேசுறியே!!!!

நந்தினியும் தைரியாமகச் சொன்னாள், போகப் போகப் பாருங்க, ரொம்பவே பதில் வரும்.
பாருங்களா????

ஒரு கணம் யோசித்த நந்தினியின் முகம் சட்டெனப் பளிச்சிட்டது, புன்னகையுடன் சொன்னாள் போகப் போக பாரு முரளி, ரொம்பவே பதில் வரும்….

சற்றே தலையைச் சாய்த்தவாறே முரளி கேட்டான், அப்ப கல்யாணத்துக்கு ஓகே ன்னு வீட்ல சொல்லிடலாமா???

நந்தினியும் கிண்டலாகத் தலையை சாய்த்தவறேச் சொன்னாள் “சொல்லிடலாமே”

ஏதேது அம்மையார் போற போக்கைப் பாத்தா என்னை விட ஸ்பீடா இருப்பீங்க போலிருக்கே என்று சொல்லிக்கொண்டே திரும்பியவனை நந்தினி கேட்டாள், முரளி நாம வேணா ஒண்ணா சேந்து ஒரு புக்கை போட்டுறலாமா???

எந்த புக்கு!!!!

பொண்ணு பாக்கப்போறப்ப என்ன பேசணும்னு!!!!!

ஹா ஹா ஹா!!!!

பிரிவுகள்:சிறுகதை, Uncategorized குறிச்சொற்கள்: