தொகுப்பு

Posts Tagged ‘காமெடி’

அட்டென்ஷன் டூ பீட்டர்ஸ்………..

செப்ரெம்பர் 17, 2009 11 பின்னூட்டங்கள்

இந்த மடலும், மெயிலில் வந்தது..சும்மா சொல்லக் கூடாது அனுபவிச்சு எழுதியிருக்காங்க…………………..

எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
——————————————————————————————————————————————————————————————————————–

எப்ப பாரு, கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாமாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க (இந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்னு பெரிய கம்பெனியில வேலை பாக்குறவனுங்க, பரங்கிமலை ஜோதி, விஜயா தியேட்டரு மாதிரி மொக்கை தியேட்டருல கூட டேகை கழட்ட மாட்டாங்களே அந்த மாதிரி!!!!!) ..
(10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க..(நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது….(பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்களேன்!)

கையேந்தி பவன்ல கூட கிரடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தைப் பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல, டாலர்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது...(அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. கொடுத்த பணம், டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல! இதுல வர்றப்பவே ஹெட்ஃபோனு, டிஷ்யூ பேப்பருல்லாம் சுட்டுட்டு வந்துடறது)

நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடுவாங்க….

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…
எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் துபாய்ல…”, “இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப… ” ன்னு ஆரம்பிப்பாங்க!!

பிரிவுகள்:காமெடி குறிச்சொற்கள்:

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

செப்ரெம்பர் 2, 2009 11 பின்னூட்டங்கள்

முகத்தில் அறைந்தார் போன்றே இருந்தது அந்த உண்மை நிகழ்ந்த போது….நிலையின்மை மட்டுமே நிலையானது என்று நன்கு தெரிந்திருந்தாலும், சில நிதர்சனங்கள் நடந்தேறும் போது தாங்கிக்கக் கூடிய மனநிலையோ, திடமோ ஏனோ நமக்கு வாய்க்கப் பெறுவதில்லை….

யாருக்குத்தான் அதிர்ச்சியாய் இருக்காது அந்த செய்தியைப் பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ???? சன் டிவியின் டாப் டென் நிகழ்ச்சியில் முதலிடத்திலிருந்த மாசிலாமணி திரைப்படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டதாக போன வாரம் கேள்விப்பட்ட போது யாருக்காவது அதிர்ச்சி ஏற்படாதிருக்குமா???? உலகத்தரமான நடிப்பு, இயக்கம் திரைக்கதை என்று பல தரங்கள் இருந்ததனாலேயே அதன் தராதரம் சாதாரண ரசிகர்களுக்கு தெரியாதிருந்தாலும், வழக்கமாக தரமான படங்களை அரவணைத்துச் செல்லும் சன் டிவி, மாசிலாமணியை அரவணைத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லைதான்

மற்ற குப்பை படங்களான நாடோடிகள், பசங்க எல்லாம் தேவையில்லா விளம்பரங்கள், பில்டப்புகள் மூலம் எதிர்ப்பார்ப்பையும் வெற்றியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் மாசிலாமணியோ எந்த வித ஆரவாரமுமின்றி விண்னைத் தொடும் வெற்றியை அடைந்தது.

என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால் சன் டிவி நடுவில் வந்த ஐந்தாம் படை என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஏன் விட்டார்கள் என்பதுதான், இது போன்ற நல்ல தரமான படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குங்க ஆஃபீசர்!!!!……..

ஆனா ஒண்ணு, உலகத் தரமான படங்களை கொடுப்பது மட்டுமல்ல, திருட்டு விசிடியை ஒழிப்பதிலும் சன் டிவியின் பங்கு அளப்பறியதுதாங்க…சும்மாவா!!!! இவிங்க படம்னா திருட்டு விசிடில வாங்கி பாக்குறதுக்கு கூட பயமா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!!

——————————————————————————————————————————————————————————————————————

முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் இந்த பேப்பர்காரங்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடவே முடியாது……..

சினேகாவிற்கு குறுஞ்செய்தி மூலம் தொல்லை கொடுத்த ஆளை எப்புடி மடக்கி புடிச்சாங்க, இதே மாதிரி ரம்பா வீட்டுல தகராறு பண்ண ஆளை எப்புடில்லாம் விரட்டுனாங்க, பிரபுதேவாவுக்கும் நயந்தாராவுக்கும் எப்படி அந்த தெய்வீகக் காதல் மலர்ந்தது, சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் ஏன் விவாகரத்து நடக்குது இப்படி எல்லாத்தையும் விலாவரியா சொல்றதுனாலத்தான் நாட்டுல மக்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ்ன்னு ஒண்ணே இருக்கு!!! இவங்க இல்லாமப்போனா நாட்டுல மக்களுடைய நிலையோ, அரிப்போ என்னவாகியிருக்கும்னே சொல்ல முடியலியே????

இதுல தினத்தந்தில கட்டம் கட்டி சில செய்திகளைப் போடுவாங்க பாருங்க, அந்தச் செய்திகள் ஒவ்வொண்ணும் அப்படியே அரிப்புப் (மன்னிக்கவும்) அறிவுப் பொக்கிஷங்கள்……என்னா இதே மாதிரி அந்த பத்திரிக்கைகாரங்க குடும்பத்துலியும் யாரு யாரோட ஓடிப் போனாங்க, யாருக்கு விவாகரத்து நடந்தது, ஏன் நடக்குதுன்னு போட்டாங்கன்னா இன்னும் இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்

என் சந்தேகம் என்னான்னா, பிரபுதேவா, நயந்தாராவிற்கு இடையே காதல் மலர்ந்தது எப்புடி, அந்தக் காதலோட ஆழம் என்ன, நீளம் என்ன, அகலம் என்னான்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சாங்களே எல்லாஞ் சரிதான்…………ஆனா எங்க ஊர்லல்லாம், புருஷனோ, பொண்டாட்டியோ இருக்கறப்பவே, ஒருத்தர் இன்னொரு ஆளு கூட ஊர் சுத்துனா கள்ளக் காதல்னுதான் சொல்லுவாங்க, ஆனா இவனுங்க என்னான்னா, அம்பிகாவதி அமராவதிக்கப்புறம் இதுதான் தெய்வீகக் காதல்ங்கிற ரேஞ்சுக்கு காமிக்குறானுங்க……….

என்னமோ போங்கப்பா, சினிமாவுல வர்ற காதல் ரேஞ்சுக்குதான் இருக்கு பத்திரிக்கைக்காரங்களோட கவரேஜூம்…..

——————————————————————————————————————————————————————————————————————

நடிகர் விஜய்யோட செலக்‌ஷன் எப்பவுமே பிரமாதமாத்தான் இருக்கும், அவருடைய படங்களும் சரி, அதில் வரும் காட்சிகளும் சரி சிறப்பானதாகவே இருக்கும். அவரது திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது அந்த சந்திப்புக் காட்சியும். போனவாரம் ராகுல் காந்தி சென்னை வந்தப்ப விஜய் போய் அவரைப் பார்த்திட்டு வந்ததுமில்லாம, அந்தக் கட்சியிலியே சேரப்போறதா பேச்சு வந்ததன் மூலம் தனது செலக்‌ஷன் எப்பொழுதும் ‘சோடை போகாதுன்னு இன்னொரு முறை நிரூபிச்சிருக்காரு….

இந்தப் பேச்சு அடங்கி முடியறதுக்குள்ள விஜய்யோட வேட்டைக்காரன் படத்தை சன் டிவியே ரிலீஸ் பண்ணப் போதுன்னு இன்னொரு அறிவிப்பும் வேற வந்திருக்கு!!! சும்மா சொல்லக் கூடாது ரெண்டு மேட்டருமே குட் காம்பினேஷன்!

விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!

————————————————————————————————————————————————————————————

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

இடம்: சத்தியமூர்த்திபவன் வாசல்

ஏங்க, சட்டசபையை ஏதாவது சத்தியமூர்த்திபவனுக்கு மாத்தீட்டாங்களா???

ஏன் கேக்கறீங்க?

இல்லை ஒரே அமளியா இருக்கே, அதான் கேட்டேன்……அதுக்கு ஏன் சார் இப்டி முறைக்கறீங்க?

யோவ், ஏதாவது ஜெயில்ல வருஷக்கணக்கா இருந்துட்டு இப்பதான் ரிலீஸாகி வந்துருக்கீயா?

அய்யோ! எப்டிங்க கண்டுபிடிச்சீங்க?

ம்ம்ம், இப்டி பொது அறிவே இல்லாம இருக்கீயே, அதை வெச்சுதான்!!!. இப்பல்லாம் கட்சி ஆஃபிஸ்ல ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்க, ஜெயிலுக்குப் போக வேண்டியவங்கதான்யா இருக்காங்க, அதான் கேட்டேன்….. முறைக்காதய்யா, நான் விளையாட்டுக்குச் சொன்னேன், ஏன் சத்தியமூர்த்திபவன்ல ஒரு அமளியுமே இல்லைன்னு கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு, நீ என்னான்னா ஏன் ஒரே அமளியா இருக்குனு புதுசா கேக்கறீயே!!! இங்க சண்டை நடக்கறது புதுசா என்ன???

என்ன சார் சொல்றீங்க, சட்டசபைலதான் இப்டி கண்டபடி சண்டை போட்டுக்குவாங்க, அதனாலதான் சட்டசபையை மாத்திட்டாங்களான்னு கேட்டேன், நீங்க என்னான்னா இப்டி சொல்றீங்க…

யோவ், நீ நினைக்கிற மாதிரில்லாம், சட்டசபை முன்னைமாதிரி இல்லை……இப்பல்லாம் சட்டசபையே அதிகமா கூடுறது இல்லை, அப்டியே கூடுனாலும் முக்கியமான பிரச்சனையைப் பத்தியெல்லாம் பேசறது இல்லை, தப்பித்தவறி அதையும் பேசிட்டாங்கனு வையுங்க, கொஞ்ச நேரத்துலியே எதிர்கட்சில்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செஞ்சுருவாங்க, அதுனால இந்த அடிச்சுக்க வேண்டிய வேலை இருக்காது….

என்னங்க இப்டி சொல்லிபுட்டீங்க, நாட்ல இப்ப ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, அதுக்காக விவாதம் பண்றப்ப கூட சண்டை வராதா?

எந்த மாதிரி பிரச்சனையைச் சொல்ற???

ம்ம்ம்ம்ம், இந்த கச்சத்தீவு பிரச்சனை மாதிரின்னு வெச்சுக்குங்களேன்…

சே சே, இந்த மாதிரி அல்ப பிரச்சனைன்னா வெறும் அறிக்கை மட்டும்தான் விட்டுக்குவாங்க….ஒருவேளை கலைஞரை அதிமுககாரங்க திட்டிட்டாலோ, இல்லை ஜெயலலிதாவை திமுககாரங்க திட்டிட்டாலோ, வடக்குப்பட்டி ராமசாமி மாதிரி யாராவது சோனியாகாந்தியை திட்டிட்டாலோதான் சண்டை போட்டுக்குவாங்க, ரோட்லல்லாம் வந்து கூட போரட்டம் பண்ணுவாங்க…

ஓ, அப்புடியா…, பக்கமா ஏதாவது ரோட்ல வந்து போராட்டம் பண்ணாங்களா???

ஓ, இதே காங்கிரசுகாரங்க பண்ணாங்களே!!!

எதுக்குங்க?

அதுவா, இந்த ராகுல்காந்தி பிறந்தாநாளுக்கு, மவுண்ட்ரோடுல இருந்த பேனரை தூக்கினாங்களே அதுக்கு பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே, தெரியாதா???

ஓஹோ, ஏங்க கேக்கறேன்னு கோவிச்சுக்காதீங்க, மவுண்ட்ரோடுல யாருமே பேனர் வைக்கக் கூடாதுன்னு ஏதோ அறிவிப்பு இருக்குன்னு கேள்விப்பட்டேன், அப்டி இருக்கறப்ப இவங்க எதுக்கு பேனர் வெச்சாங்க, தப்பி வெச்சாலும் தூக்கறதுதானே நியாயம்!!!

யோவ், இந்த சட்டம்லாம் மனுஷங்களுக்குதான்!!

என்னாது?

இல்லைப்பா சாதாரண மனுஷங்களுக்குதான்னு சொல்ல வந்தேன்…

சரி, இப்ப எதுக்கு உள்ளாற இந்த மாதிரி அடிச்சுக்குறாங்கன்னு தெரியலியே?

தெரியலீயே, இரு யாராவது வெளிய வந்தா கேக்கலாம்

…………………………..அங்க பாருங்க உள்ளருந்து ஒரு தலைவரு வராரு!!!

தலைவா வணக்கம்….வணக்கம் தலீவா

ஆங், வணக்கம், வணக்கம்…

என்ன தலைவா, உள்ளே ஒரே அடிதடியா இருந்துதே என்னாச்சு?

டேய் உண்மையிலியே நீங்கள்லாம் காங்கிரசு தொண்டங்கதானா?

ஏன் தலைவா இப்புடி கேக்கறீங்க?

பின்னே காரணத்துக்காகத்தான் நாங்கள்லாம் முன்ன அடிச்சுகிட்டமா? இப்ப மட்டும் என்னமோ பெருசா காரணம் கேக்குறீங்க???

இல்ல தலீவா, எதோ ஒரு காண்டை மனசுல வெச்சுகிட்டு அடிச்சுகிட்டாலும், வெளில பத்திரிக்கைல சொல்றதுக்காக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லுவோமல, அதைக் கேட்டேன்…

ஓ அதுவா, முதல்ல இந்த கக்கன் பிறந்த நாளைக்கு ஏன் நிறைய பேரு போலைன்னு சண்டை போட்டுகிட்டோம்…..

ஆமா தலைவா, பக்கமா நம்ம கட்சியோட ஒரு பெரிய புள்ளி அம்மாவோட பிறந்த நாளைக்கு கூட ஒரு எம்எல்ஏ அன்னதானம் அது இதுன்னு அமர்க்களப்படுத்துனாங்க, ஆனா கக்கன் விஷயத்துல சொதப்பிட்டாங்களே… தலைவா, சரி என்ன முடிவு எடுத்தீங்க தலைவா, இந்த பிறந்த நாள் விஷயத்துல?

அதுவா, முதல்ல கக்கன், காமராஜர்லாம் யாருன்னு நம்ம கட்சி தலைவர்கள் எல்லாத்துக்கும் விளக்கவுரை கொடுத்து படிச்சி தெரிஞ்சிக்கச் சொன்னோம், அடுத்த வருஷத்துல இருந்து அவங்களோட பிறந்தநாளை எல்லாம் மிகச் சிறப்பா கொண்டாடுண மாதிரி பேப்பர்ல நியூஸ் வர்றதுக்கு ஏற்பாடுகளை பண்ணனும்னு தீர்மானம் போட்டிருக்கோம், இன்னும் முடிவு பண்ணனும்….

அப்ப அதுக்கு கூட இன்னும் முடிவு பண்ணுலியா தலீவா?

யோவ், இப்பதானே கூட்டமே முடிஞ்சிருக்கு, தீர்மானம் இனிமேதான் டெல்லிக்கு போயி சோனியா அம்மாகிட்ட ஒப்புதல் வாங்கிட்டு வரணும், அதுக்கப்புறம்தான் எல்லாம்..

ஓ ஓ, சரி அதுக்கப்புறம் ஏதோ ரொம்பப் பெரிய கலாட்டாவ இருந்துச்சே அது என்ன தலீவா???

ஓ அதுவா!!! அது மிகப் பெரிய பிரச்சனையாச்சே!!!

அப்டி என்ன தலீவா பிரச்சனை???

டேய், இப்ப நம்ம தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் வந்துது இல்லியா, அப்ப அவரு 2011ல காங்கிரசுதான் தமிழ்நாட்டுல ஆட்சியைப் பிடிக்கணும், அதுக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்ல ஈடுபடுங்கன்னு சொன்னதா ஒரு பேச்சு வந்துச்சு!!!

அப்டியா, உண்மையிலியே சொன்னாரா தலீவா?

அதெல்லாம் தெரியாது, அப்டி சொன்னாருன்னு ஒரு பேச்சு அவ்வளவுதான்…

சரி…

இல்ல பேச்சு வந்ததில்லியா, அப்டி 2011 ல காங்கிரசு ஆட்சியைப் புடிச்சா, யாரு முதலமைச்சரு, யாரு யாருக்கு எந்த துறைன்னுதான் சண்டை…….ஏண்டா மூஞ்சை, மூஞ்சை பாத்துக்கறீங்க? ஒவ்வொரு க்ரூப்பும், அவங்கதான் முதலமைச்சரு, அவங்க சொல்ற ஆளுக்குதான் முக்கிய மந்திரி பதவின்னு அடிச்சுகிட்டாங்க, அதான் ஒரே அடிதடி…

சூப்பரு தலீவா, கடைசியா முடிவு என்னாச்சி தலீவா???

எல்லா க்ரூப்பும் நாளைக்கே டெல்லிக்கு போயி சோனியாம்மாவை சந்திச்சு, இவங்க இவங்களுக்குதான் பதவில இருக்கணும்னு வேண்டுகோள் வைக்கப் போறாங்க…….டேய், டேய், இவன் ஏண்டா ஓடுறான்???

தெரியலியே தலீவா, இப்பதான் ஜெயில்ல இருந்து வந்தேன்னான்!!! ைருங்க புடிச்சிட்டு வந்துடறேன்………யோவ், எதுக்குய்யா ஓடுற? நில்ல்லுய்யா!!!……………………..யோவ் எவ்ளோ தூரம் தொரத்திட்டு வர்றது, எதுக்குய்யா இப்டி ஓடுற???

தெய்வமே, சாமி சாமியா இருப்பீங்க….நான் திருப்பி ஜெயில்லுக்கே கூட போயிடுறேன்…இந்தக் கொடுமையெல்லாம் பாக்க என்னால முடியாது, என்னை விட்டுருங்கய்யா….

யோவ், பதறாதய்யா, நான் என்ன உன்னை புடிக்கவா உன்னை தொரத்துனேன், அந்தாளு சொன்னதைக் கேட்டுட்டு, நானே உன்னை புடிக்குற சாக்குல பிச்சுகிட்டு வந்திருக்கேன்…….இங்க பாரு திருப்பி ஜெயிலுக்கே போகணும்னு அவசரப்பட்டு முடிவெடுத்துடாத, மனுஷனுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கை, என்ன, கம்முனு வீட்டுக்கு போ………………….