தொகுப்பு

Archive for ஜனவரி, 2010

தமிழ்ப் பட(ங்களின்)த்தின் அராஜகம் – திரைப் பார்வை

முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க விரும்பினால் அதைப் பற்றிய விமர்சனத்தை வலைப்பதிவுல படிச்சிட்டு அதுக்கப்புறம் போய் பார்ப்பதுதான் வழக்கம். ஆனா, இப்பவோ, ஒரு படம் பாக்க நினைச்சிட்டா அதுவரைக்கும் வலைப்பதிவுக்குள்ள எட்டிபாக்காம இருக்கனும் போல இருக்கு!!! ஜேம்ஸ்பாண்ட் படத்துல இன்விசிபிள் காரை பாண்ட் ஓட்டுற மாதிரி காட்டுன உடனே பலரும் சைண்ட்டிஸ்ட்டை விட டைரக்டர்ஸ் பயங்கரமா யோசிக்கிறாங்க, கண்டு பிடிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது!!! அதே மாதிரிதான் நம்ம ஊர்லியும், இப்பல்லாம் நம்ம டைரக்டர்சை விட வலைப்பதிவர்கள் பயங்கரமா சிந்திக்கிறாங்க. டைரக்டருக்கு கூட தெரியாத புதுப் புது கோணங்கள், கான்செப்ட்டெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் படம் உண்மையிலியே நல்லாயிருக்கான்னு தெரிஞ்சிக்க ரெண்டு மூணு விமர்சனம் மட்டும் படிச்சிட்டு படத்துக்கு போனோம்னா தீந்தோம், எந்த படத்தைப் பாத்துட்டிருக்கோங்கிற சந்தேகமே வந்துடுது சமயங்கள்ல….

டேய், தமிழ்ப் படத்தைப் பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு எதுக்குடா இதெல்லாம் இப்ப சொல்றன்னு கேக்கறீங்களா??? நம்மூரு ஹீரோ பில்டப் படங்கள் பெரும்பாலும் இப்படித்தானே இருக்கும். சொல்ல வந்த்தை வுட்டுட்டு சம்பந்தமே இல்லாம் பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பாங்கள்ல…அதை நக்கல் பண்ணி வந்திருக்கிற படம்தான் இந்த தமிழ்ப் படம். ஒரு லொல்லு சபாவையே ஹை லெவல்ல எடுத்துருக்காங்க. படம் எடுக்க சொன்னா அராஜகம் பண்ணியிருக்காங்க…

ஏற்கனவே பாடல்களும், ட்ரெய்லரும், விளம்பரங்களும் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தாலும் மனதில் இருந்த ஒரே சந்தேகம், படத்தின் ஃப்ளோ எப்படி கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதுதான். ஆனால் மிக கவனமாகவும், அருமையாகவும் படத்தை நடத்திச் செல்கிறார்கள். வரிசையாக கலாய்ப்பது என்று முடிவெடுத்திருந்தாலும், வழக்கமான ஒரு கதை, திரைக்கதை எல்லாம் எழுதி வரும் பல படங்களை விட இதன் ஃப்ளோ நன்றாகவே இருக்கிறது…

நன்றாக்க் கலாய்த்தாலும், வழமையான மசாலா படங்களுக்கே உரிய எடுத்தவுடன் அமர்க்களமான காமெடி, பில்டப் பாடல், காதல் ஆரம்பம், இடையில் சற்று தொய்வு பின் இடைவேளை வரை அராஜகமான காமெடிகள் என்று முதல் பாதி எப்படி போனது என்பதே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும், இடையிடையே எட்டிப் பார்க்கும் காமெடிகள், கடைசி நிமிடங்களில் மீண்டும் அராஜகங்கள் என கொடுத்த காசுக்கு மேல சிரிக்க வைக்கக் கூடிய ஒரு படத்தைதான் தந்திருக்கிறார்கள்….

ஒரு லோ பட்ஜெட் படம் என்றாலும் நிரவ் ஷாவின் கேமிரா, இசை, கலை, எடிட்டிங் அனைத்தும் அப்படி ஒரு உணர்வே ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது. சிவாவே ஒரு காட்சியில் அந்நியன் பாணியில் எருமை மாடுகளை வைத்து கொல்ல முயற்சி செய்யும் போது லோ பட்ஜெட் படத்துலல்லாம் செய்ய மாட்டீங்களா என எருமைகளை கேட்கும் போதுதான் நமக்கே தோன்றுகிறது. அதுவும் எருமைகளை எருமை மாடுகளா என திட்டும் போது சிரிப்பு களை கட்டுகிறது.

இப்படியும் கொல்லலாம் கான்செப்ட், ஃபாமிலி சாங் டிவிடி, சைக்கிளை சுத்தியவுடன் பெரிய ஆளாவது,  காஃபி கொண்டு வருவதற்குள் பணக்காரனாவது, மவுன ராகம் ஸ்டைலில் காதல் சொல்லும் இடம் என்று பல இடங்களில் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.

திரைக்கு பின்னால் சி.எஸ் அமுதன், கண்ணன் (இசை), நீரவ் ஷா(ஒளிப்பதிவு), சந்தானம் (கலை) ஆகியோர் பெரிய பலம் என்றால், திரையில் சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மனோபாலா ஆகியோர் பெரிய பலம். வெண்ணிற ஆடை மூர்த்தி டபுள் மீனிங்கில் பேசும் இடங்களில் காக்கா வர வைத்திருப்பது எல்லாம் தாறுமாறு!!!

வெறும் திரைப்படங்களை மட்டும் கலாய்ப்பார்கள் என்று பார்த்தால், ஹட்ச், வோடாஃபோன், வசந்த் அண்ட் கோ என்று விளம்பரங்களையும் விட்டு வைக்கவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய ஹைலைட், அந்த பரத நாட்டிய சீன். எல்லாராலும் நடனம் ஆட முடியும் என்ற நம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்JJJ. அதைவிட அராஜகம் தப்பு பண்ணா அந்த கையை ஆட்டி நடிப்பானே அந்த தம்பி படத்தை பத்து தடவை பாக்கனும் என்பது, முதல் பில்டப் பாடலில் ”இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் சிவா” என்று சொல்லி சிறிது இடைவெளியில் ”என்று போடுமாறு கேட்டுக் கொண்டார்” என்பது, பெரிய தளபதி, வைஸ் கேப்டன் போன்ற பட்டங்கள், அரசி சினிமா பட்டிக்கு ஏன் கரண்ட், தண்ணீர், ரோடு வசதி எல்லாம் தருவதில்லை என்பதற்கான காரணங்கள் என பல சொல்ல்லாம்.

ஒரு வலைப்பதிவருக்கே உரிய அடிப்படைத் தகுதியான படம் பார்க்கும் போது அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை சில இடங்களில் நம்மால் கணிக்க முடிந்தாலும், காட்சி வரும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது!!! முதல் தடவை பார்க்கும் போது இந்தக் காட்சி, இந்தப் படம் என்பதிலெல்லாம் ரசிகர்கள் அதிக கவனத்தை கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இதற்கு ரிப்பீட்டிவ் ஆடியன்ஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.

சும்மா சொல்லக் கூடாது, ரெண்டரை மணி நேரம் பக்கத்துல உக்காந்து கிச்சு கிச்சு மூட்டி அனுப்புறாங்க!!!

பி.கு:

கஸ்தூரி கண் முன்னாடியே இருக்காங்க!!! சத்தியமா இது ஒரு வித்தியாசமான படந்தான்….

பிரிவுகள்:சினிமா

வேட்டைக்காரனும், தமிழ்ப் படமும்!!!

மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!


மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர் திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றதுஎன்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!


இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம்.


இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ ஆச்சரியத்துடன் யாராவது ஆஹாசினி கேட்கும் போது நமக்கும் வாவ், சட்டே மேலே எத்னே பட்டன் என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!


பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனைப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!!


வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் “அதையும் தாண்டி புனிதமானது என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!


படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும் என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன் என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!!


இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!


கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!

*********************************************************************************

வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே தமிழ் படம் என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே “அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த சி.எஸ் அமுதன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த ‘தமிழ் படம்!!! சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!

செந்தூரப் பூவே சிவா

தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், “இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்கஎனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!


ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்….அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து…இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்…


ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!


மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!! வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் ‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன் பாடல்!!! ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!!

சுனாமியின் பினாமி,

ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே,

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில,

ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!!


இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!

சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்… ஆனால் ஓ மகசீயா பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்…)

http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html


குத்துவிளக்கு பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும்,

தூண்டில் போட்டு யானை பிடிப்போம்

சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்

வாழும்போதே செத்து முடிப்போம்

இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்

வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!

படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் “சூறாவளி பாட்டில் தெரிந்து கொள்ளலாம்…

“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது”!!!!

இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்

மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!

மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர் திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றதுஎன்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!

இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ ஆச்சரியத்துடன் யாராவது ஆஹாசினி கேட்கும் போது நமக்கும் வாவ், சட்டே மேலே எத்னே பட்டன் என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!

பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனைப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!!

வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் “அதையும் தாண்டி புனிதமானது என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!

படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும் என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன் என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!!

இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!

கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!

http://www.youtube.com/watch?v=QcFn4erIeGA

*********************************************************************************

வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே தமிழ் படம் என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே “அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த சி.எஸ் அமுதன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த ‘தமிழ் படம்!!! சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!

?ui=2&view=att&th=12604e774642d2cc&attid=0.1&disp=attd&realattid=ii_12604e774642d2cc&zw

தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், “இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்கஎனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!

ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்….அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து…இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்…

ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!

மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!! வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் ‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன் பாடல்!!! ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!!

சுனாமியின் பினாமி,

ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே,

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில,

ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!!

இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!

?ui=2&view=att&th=12604e6b345a31d3&attid=0.1&disp=attd&realattid=ii_12604e6b345a31d3&zw

சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்… ஆனால் ஓ மகசீயா பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்…)

http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html

குத்துவிளக்கு பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும்,

தூண்டில் போட்டு யானை பிடிப்போம்

சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்

வாழும்போதே செத்து முடிப்போம்

இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்

வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!

படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் “சூறாவளி பாட்டில் தெரிந்து கொள்ளலாம்…

“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது”!!!!

இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்


பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்: