தொகுப்பு

Archive for ஜனவரி, 2013

தமக்குத் தாமே வலையா???

படத்தைப் பார்க்காமலே தடை விதித்தார்கள் என்பது குற்றச்சாட்டாக இருந்தாலும், எனக்கென்னமோ மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை யாரும் பேசவில்லை அல்லது தேவையனவர்கள் மட்டுமே கவனித்துக் கொள்கிறார்களோ என்பதே! மிக முக்கியமாக இஸ்லாம் அமைப்புகளே இந்த விஷயத்தைக் கவனிக்கவில்லை!

Image

  • ஊடகங்களில் எல்லாம் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்றுதான் விவாதம் போகிறது அல்லது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறது! ஆனால் ஆரம்பத்திலிருந்தே அரசு இதனை சட்டம் ஒழுங்கோடு முடிச்சு போட்டு வருகிறது!
  • சொல்லி வைத்தாற் போன்று சில தியேட்டர்களில் வெடிகுண்டு மிரட்டல், பேனர் கிழிப்பு, சின்ன வன்முறை!
  • எல்லா இடங்களிலும் அமைதியாக ஓடும் படத்திற்கு இங்கு மட்டும் கலவரம் வருமென்று சொல்வதன் மூலம் யாரைக் கை காட்டுகிறது இந்த அரசு??? – இயல்பாய் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னது, பண்ணாலும் பண்ணுவாங்க, அமெரிக்க எம்பசியையே அடிச்சாங்கள்ல கொஞ்ச நாள் முன்னாடி. என்பதே…
  • ஆக பொது புத்தி மனப்பான்மையை சினிமாதான் விதைக்க வேண்டியதில்லை. அதைவிட எளிதாகவும், அழுத்தமாகவும் அரசு விதைக்க முடியும். அதற்கு எதிராக எப்படி போராடப் போகிறது, இந்த அமைப்புகள்?
  • கமலின் முந்தைய படங்களில் வரும் பல விஷயங்கள் விவாதத்திற்குரியது என்றாலும், இந்தப் பிரச்சினையில், வேறு மாநிலத்திற்குச் செல்கிறேன் என்ற வலி கலந்த வார்த்தைகளின் மூலமும், சொத்தை விற்றுதான் படம் எடுத்தேன் என்கிற உண்மையின் மூலமும், அனைவரது அனுதாபத்தையும் சம்பாதித்தது கமல் என்றால், ஏறக்குறைய பலரது கடுப்பை சம்பாதித்துக் கொண்டது இந்த இஸ்லாம் அமைப்புகள் மட்டுமே. ஆனால் அரசு எங்குமே சிக்கவில்லை! அல்லது செயல்கள் எங்குமே கேள்விக்குள்ளாகவில்லை! அரசியல் கட்சிகள் உட்பட அனைவருமே பேசி தீருங்கள் என்று நழுவலாகவே பேசுகிறார்கள்!
  • ஏனெனில், அரசின் பிரதிநிதிகளாக மக்கள் முன் தோன்றுவதும், இதே இஸ்லாம் அமைப்புகள்தான்! மிகப்பெரிய நகைமுரண், எந்த இஸ்லாமிய அடையாளங்கள் மக்கள் மனதில் ஒரு கருத்தை விதைக்கிறது என்று எதிர்ப்பு வருகிறதோதோ, அதே அடையாளங்களுடன் ஊடகங்களில் தோன்றி அரசின் சார்பில் பேசும் போது, கடுப்பு, அரசின் மேல் ஏற்படவில்லை. மாறாக, அமைப்புகளின் மேலேதான்…
  • இன்னொரு ஆச்சரியம், படம் சிலரைக் காயப்படுத்துகிறது என்றால், படத்தைப் பார்க்க வேண்டும், பின் கருத்து சொல்லலாம் என்று பேசலாம்! ஆனால் சட்டம் ஒழுங்கு என்று வாதத்தை அரசு வைக்குமானால், அதுவும் நடு ராத்திரியில் போய் தடை வாங்கக்கூடிய அளவுக்கு சமூக அக்கறை அரசிற்கு இருக்குமானால், படம் பார்க்கும் தேவையை விட, வெளிச்சூழலையும், அதற்கு காரணமாக யார் அல்லது எது இருக்க முடியும் என்ற திசையில்தானே வாதம் போக வேண்டும்? மாறாக அப்படிப் போகவில்லை என்பதன் காரணம் என்ன? கொலைக்கான குற்றத்தை, கொலையை நேரில் பார்த்தால்தான் தண்டனை வழங்க முடியுமா என்ன???
  • என் எண்ணமெல்லாம், யாருக்கோ விரித்த வலையில் மாட்டுவதென்பது வேறு! ஆனால் தனக்குத்தானே வலை விரித்துக் கொள்வதென்பது வேறு! அப்படித்தான் அமைப்புகள் மாட்டிக் கொண்டனவா???
பிரிவுகள்:அரசியல், சினிமா

காட்சிகள் மாறுதடா!

சரியோ தவறோ, அம்மையார் எதையும் தைரியாமாகச் செய்வார், பூசி மெழுக மாட்டார், என்பதெல்லாம் அவருடைய நிர்வாகத் திறமைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் வார்த்தைகள்!

சட்டமன்றம் சரியில்லை, நூலகம் இடமாற்றம் போன்ற செயல்களின் போதே இந்த வார்த்தைகளைச் சொன்னவர்கள் சப்பைக் கட்டு கட்ட வேண்டியதன் அவசியம் வந்தது! இருப்பினும் இதுவே தைரியத்தின் வெளிப்பாடுதான் என்றெல்லாம் சமளிக்க முடிந்தது…

Image

ஆனால், எல்லா இடங்களிலும் அமைதியாக ஒடும் ஒரு படத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் என்று தொடர்ந்து ஒரு அரசே சொல்லி வருவது, அதுவும் படத்தைப் பார்க்காமலேயே சொல்லி வருவது, அதன் இயலாமையா, அரசியல் பிண்ணனியா, அல்லது யார்ருக்காக போராடுவதாகச் சொல்கிறார்களோ அவர்களைப் பற்றியே ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா??? நரேந்திர மோடியை வரவழைத்த அரசுதான், சிறும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்துகொள்வதாக அமைப்புகளின் தலைவர்களே சிலாகிப்பது….

டாவின்சி கோட் படத்தை தடை செய்தபோது கூட, சிறும்பான்மை மக்களின் உணர்வு பாதிக்கப்படும் என்று சொல்லிய திமுக அரசை விமர்சனம் செய்தவர்கள் யாரும் இதற்கு அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை??? ஜிகே வாசன், சீமான் உட்பட பலரும், கமலை அமைப்புகளுடனும், அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்கிறார்கள்!
போலி பகுத்தறிவுவாதிகள் இந்துக்களை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்ற கருத்துக்களைப் போலே, போலி புரட்சியாளர்களும் திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்பதும் வலுப்பெறும்!
யாருக்காக டிடிஎச் ஒளிபரப்பில் மாற்றம் செய்தாரோ, அந்த தியேட்டம் உரிமையாளர்கள் கடைசி தீர்ப்பு வரை காத்திருக்கித் தயார் என்று சொல்வதும், 50 வருடம் தமிழ் சினிமாவில் இருந்தவர் என்று ஒட்டு மொத்த திரையுலகமும் பாரட்டு விழா நடத்திய தங்கள் சக கலைஞனுக்கு பிரச்சினை எனும்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத திரையுலகத்தின் நிலையும், போயும் போயும் இவர்களையெல்லாம் நம்பி, அதே விழாவில் கமல் சமத்துவம் நிகழும் உலகம் என்று புகழ்ந்தது பரிதாபத்தையே வரவழைக்கிறது!!!
எல்லாவற்றுக்கும் மேலாக இது வெறுமனே கருத்து சுதந்திரத்திற்கும், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுக்கும் மட்டுமேயான போராட்டம் என்று கட்டும் சப்பைக்கட்டுகள் பதிவின் முதல் வரியைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!
பிரிவுகள்:அரசியல், சினிமா