தொகுப்பு

Archive for ஏப்ரல், 2012

மூன் டிவியில் நான்!

திங்கட்கிழமை மதியம் 12.15 மணி! அலைபேசிக்கு ஒரு அழைப்பு! தமிழ் குரலோன் அப்துல் ஜப்பார் ஐயா! இணையத்தில் நான் எழுதியிருந்த ஐபிஎல் சம்பந்தமான என்னுடைய கட்டுரைகளை ஆசிஃப் அண்ணாச்சி அவருக்கு அனுப்பியிருந்தார்! கட்டுரைகளைப் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டியிருந்தார் ஏற்கனவே மடலில்!

மூன் டிவியில் மதியம் 1.15 மணியில் இருந்து 2 மணிவரை தினசரி நடக்கும் ஐபிஎல் ஸ்பெஷல் அம்பயர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டியிருக்கும் அவர் நிகழ்ச்சிக்கு வரமுடியுமா என கேட்டார்! கரும்பு தின்னக் கூலியா? உடனே ஒத்துக் கொண்டேன்!

இந்த வாரத்தில் திங்கட் கிழமையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காக அப்துல் ஜாப்பார் ஐயாவுடன் இணைந்து வருகின்றேன்… டிவியில் வருவது மட்டுமில்லாமல், எனக்குப் பிடித்த ஒரு தலைப்பு என்றில்லாமல், இந்த விஷயத்தில் முன்னோடியான ஐயாவுடன் இணைந்து வருவது பன்மடங்கு மகிழ்ச்சி! வெள்ளிக் கிழமை வரை வருவேன் என நினைக்கின்றேன்! துரதிஷ்டவசமாக சென்னையில் இந்நிகழ்ச்சி தெரிவதில்லை! ஆனால் சென்னை தவிர்த்த பிற நகரங்களில் தெரிகிறது எனச் சொன்னார்கள்!

ஊரில் யார் யாரோ, எதெதுக்கோ விளம்பரம் செய்கிறார்கள்!நான் பண்ணக் கூடாதா???

நன்றிகள் ஐயாவிற்கும், அண்ணாச்சிக்கும், நண்பர்களுக்கும்!

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்: