தொகுப்பு

Archive for the ‘சீரியஸ்’ Category

நியுயார்க் – திரைப்பார்வை (இந்தி)

தீவிரவாதத்தைப் பற்றிய அதிர்ச்சியை பலமாக பதிவு செய்யும் இன்னொரு படம் இந்த நியுயார்க்….ஏற்கனவே மும்பை மேரி ஜான், வெட்னஸ்டே போன்ற படங்கள் தீவிரவாதத்தின் வெவ்வேறு பரிணமங்களை படமாக்கியுள்ள நிலையில் வெளிவந்துள்ள படம்தான் இது!!!

இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் தாக்குதல் என்று சம்பவங்கள் நிறைந்த இந்த உலகில் தீவிரவாததின் இன்னொரு முகத்தை துகிலுரித்துக் காட்டியிருக்கிறது. மங்கிய மாலைப்பொழுதொன்றில் மலர்கள் சொறிய ஒரு கவிதையைப் போல் ஆரம்பிக்கும் இந்தத் திரைப்படம், இறுதியில் விருட்சம் விட்டு ஒரு பூந்தோட்டமாய் மலர்ந்திருக்கிறது. திரைக்கதையே மிகச் சிறப்பாக அமைந்திருக்கையில் நடிப்பு, இசை, கேமிரா என்று எல்லா துறையிலிருந்தும் சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும் போது எப்படிப்பட்ட படமாக மாற முடியும் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி!!! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்தப்படம் இவ்வருடத்தில் வெளிவந்த இந்தியப் படங்களிலேயே மிகச்சிறந்த இடத்தைப் பெறும்…….

ப்படி எல்லாம் ஒரு திரைப்பார்வை எழுதணும்னு எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா??? ஆனா மக்கா, ஏமாத்திட்டானுங்க மக்கா…..சும்மா ரெண்டரை மணி நேரம் கதறக் கதற ரவுண்டு கட்டி அடிச்சானுங்க தியேட்டருல….

ஒரு படத்துக்கு திரைப்பார்வை இருந்துச்சுனா, முடிஞ்ச வரை கதையை சொல்லாம இருக்கணும்னுதான் நினைப்பேன், ஆனா இந்தப் படத்துக்கு முழுக்கதையையும் சொல்லி எழுதலாம்னா கூட எனக்கு கதை கிடைக்க மாட்டேங்குதே அதுக்கு நான் என்ன பண்றது???

படம் ஆரம்பிச்சவுடனே, திடீர்னு ஒருத்தனைப் புடிக்கறாங்க, முடிஞ்சவரை அவனை டார்ச்சர் பண்றேன்னு சொல்லி நம்மளை டார்ச்சர் பண்றாங்க. கடைசியாப் பாத்தா அடிச்சது FBI யாம், அடி வாங்குனது, தீவிரவாதியா இருக்கலாம்னு சந்தேகிக்கறாங்களாம்….அந்த நடிகர்தான் நிதின் முகேஷ்

அவரை சந்தேகப் படக்காரணம், அவரு முன்னாடி படிச்ச காலேஜ்ல நிதினோட ஃபிரண்டா இருந்த ஜான் ஆபிரகாம் பெரிய தீவிரவாதியாம், அதுனாலதான் நிதினையும்  சந்தேகப்பட்டாங்களாம்!!!! இப்ப நிதின் தீவிரவாதி இல்லைங்கறது நிரூபணம் ஆனாலும், திரும்பி நிதின், ஜான் ஆபிரகாம் கூட சேர்ந்து பழகி அவரு உண்மையாலுமே தீவிரவாதிதானா இல்லை திடீர்னு ஜீப்புல ஏறிகிட்டு நானும் ரவுடிதான்னு உதார் உட்டுகிட்டு இருக்காரான்னு போலீசுக்கு சாரி FBI க்கு துப்பு தரணுமாம்….இதுக்கு நடுவுல அப்பவே நிதினுக்கும், ஜான் ஆபிரகாமுக்கும் ஃபிரண்டா இருந்த கேத்ரீனா கைஃப்தான், இப்ப ஜான் ஆபிரகாமோட மனைவியாம்……. இப்படி நட்புக்கும், கடமைக்கும் இடையே நடக்கிற ஒரு பாசப் போராட்டந்தான் கதையாம்…..உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே!!!!

இப்படியே போயிட்டிருக்கிற கதையில ஜான் ஆபிரகாம் உண்மையிலியே தீவிரவாதிதான்னு தெரிய வருது, அதுக்கு காரணம் என்னான்னா, செப்டம்பர் 11 பிரச்சனைக்கப்புறம் சந்தேகத்தின் பேருல இவரைப் புடிச்சு கண்ணாபின்னான்னு டார்ச்சர் பண்ணதுனால அவரு இப்படி ஆகிட்டாராம்…..இதையெல்லாம் நிதின் மூலமா கண்டுபிடிக்கிற FBI ஆஃபிசர்தான் இர்ஃபான்கான்…..

New-york
என்னதான் ஒரு நல்ல கருத்து சொல்றேன்னு படம் எடுக்கறேன்னா கூட எப்படி எடுத்தாலும் பாத்துற முடியுமா??? அதுவும் முழு படத்தையும் ஸ்லோ மோஷன்ல எடுத்தா எப்படி பாக்கறது???

எனக்கு தெரிஞ்சு FBIயை இவ்ளோ காமெடியா யாரும் காட்டியிருக்க மாட்டாங்க, அதுவும் க்ளைமாக்ஸ் காட்சில அவங்களை காமிச்சிருக்கற விதம் செம காமெடி!!! ஐயா சாமி நீங்க FBIயைத்தான் ஒழுங்கா காமிக்கலை, இந்த தீவிரவாதிகளைனாச்சும் கொஞ்சம் ஒழுங்கா காமிச்சிருக்கலாம்ல??? அவங்களுக்குன்னு ஒரு மட்டு மரியாதை வேணாம்??? அவனவன் லோக்கல் தாதாக்களையே என்னமோ இண்டர்நேஷனல் கிரிமினல் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து படம் எடுத்துகிட்டு இருக்காங்க, ஆனா இந்தப் படத்துல என்னான்னா தீவிரவாதிகளை என்னமோ லோக்கல் ரவுடியை விட காமெடியா காட்டியிருக்காங்க!!

அமெரிக்காவுக்கு படிக்கப் போனாங்கனு கதையை ஆரம்பிச்சிட்டு, ஒருத்தன் கூட படிக்கற மாதிரி காமிக்கவே மாட்டேங்கிறாங்க, எல்லாரும் ஒண்ணா விளையாடிட்டிருக்காங்க, இல்லாட்டி பார்ட்டிக்கு போறாங்க அதுவும் இல்லாட்டி எல்லாரும் சேந்து பாட்டு பாடுறாங்க!!!

கேத்ரினா கைஃப், ஜான் ஆபிரகாம், நிதின் இவங்கள்லாம் யாரு, இவங்களுக்கெல்லாம் அப்பாஅம்மாவே இல்லியா, இல்லை எல்லாரும் டெஸ்ட் டியூப் பேபியா ஒண்ணும் புரிய மாட்டேங்குது படத்துல!!! ஒருத்தருக்கும் குடும்பம், அப்பா அம்மா, சொந்தம்னு யாருமே இல்லை!!!

படத்துல எல்லாரும் ஏன் இப்படி போட்டி போட்டுகிட்டு நடிக்கறாங்களோ தெரியலை!!! அதுவும் இந்த கேத்ரீனா கைஃப் அம்மணி எப்படித்தான் சோக சீனுக்கும் சரி, லவ் சீனுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை காமிக்கிறாங்களோ தெரியலை!!! ஒருவேளை லவ் பண்ணாலே சோகந்தாங்கிற உண்மைத் தத்துவத்தை தன்னோட நடிப்பின் மூலம் நிரூபிக்கிறாங்களோ என்னமோ??? சும்மாவே அம்மணிக்கு நடிப்புன்னா ஆவாது, அதுலியும் சுத்தி இப்படி போட்டி போட்டு நடிக்கிற ஆளுங்க இருந்து நடிச்சா வெளங்கிடும்….அழகா இருக்குங்கிறதுக்காக ஒரு பொம்மையை கொண்டு வந்து படத்துல நடிக்க வெச்சுடறதா???

மியுசிக் போட்ட புண்ணியவான் யார்னு தெரியலை, ஒட்டு மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் ஒரு மியுசிக்கை போட்டுட்டு, அப்படியே எடுத்து படத்தோட ஓட விட்டுட்டாங்களான்னு புரியலை, சிச்சுவேஷனுக்கும் அதுக்கும் அப்படி ஒரு ஏகப் பொருத்தம்!!!

படத்தோட டைரக்டர் இனிமேதான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!!! ஒருவேளை  FBI, எங்களை அசிங்கப் படுத்திட்டாருன்னு சொல்லி டைரக்டர் மேல மான நஷ்ட வழக்கு போடலாம், இல்லை எங்களை இவ்ளோ மொக்கையா காமிச்சுட்டியேன்னு யாராவது ஒரு தீவிரவாதியே இவரு மேல காண்டாகி அடிக்க வரலாம், இப்படி பல பிரச்ச்சனைகள் அவருக்கு இருக்கு!!!

கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்கன்னு தெரியலை!!! நீதான் தீவிரவாதின்னு சந்தேகப்பட்டதுனாலதான் எல்லாரும் தீவிரவாதி ஆகுறாங்ககிறாங்கன்னு சொல்றாங்களா இல்ல வேற என்னன்னு புரியலை!!! ஆனா ஒண்ணு, இன்னும் கொஞ்ச நேரம் அந்த தியேட்டர்ல இருந்திருந்தா நானே தீவிரவாதியா மாறியிருப்பேனோ என்னமோ…

பி.கு.
இதுல யாரை நண்பர்கள் என்பது, யாரை எதிரிகள்னு சொல்றதுன்னு வேற தெரியலை!!! சத்யம்ல இந்தப் படம் பாத்து, இண்டர்வெலுக்கு மேல கடுப்புல, மேல் ஃபுளோர்லதாம்பா இந்த வை ஃபை (Wi Fi) கேம்ஸ்லாம் இருக்காமாம், ஒரு மணி நேரம் அங்க போயி விளையாடிட்டு வந்துடலாம், மத்தவங்க அதுக்குள்ள படம் பாத்து முடிச்சுவாங்கன்னு கேட்டா, எல்லாரும் என்னமோ அந்தப் படத்தை ரசிச்சு பாக்கற மாதிரி வரமாட்டேனுட்டாங்க!!!!

ஆனா ஒண்ணு, மும்பை மேரி ஜான், தாரே ஜமீன் பர் படம்லாம் பாக்கறப்ப அய்ய்ய்யோ எனக்கு இந்தி தெரியலியேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன், ஆனா இந்தப் படம் பாக்கறப்பதான் நல்லவேளை எனக்கு இந்தி தெரியலைன்னு ரொம்பவே நினைச்சுகிட்டேன்!!! அது ஏந்தான் வேண்டா வெறுப்பா பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வெக்குறாங்களோன்னு தெரியலை!!!

பிரிவுகள்:சீரியஸ் குறிச்சொற்கள்:

இது ஆண்களின் உலகம்….

முன்குறிப்பு: இது சீரியஸா இல்லை மொக்கையா என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. மொக்கையாக எழுத ஆரம்பித்து நடுவில் ஒரு புண்ணியவான் உண்மையத்தாண்டா சொல்ற? இதை ஏன் மொக்கைன்னு சொல்றன்னு கேள்வி கேட்டதாலேயே என்னுள் ஒரு தடுமாற்றம்! ஆகையால் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்….

இந்த பதிவு, இதையும் யாராவது ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டது. இது பெண்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே…

எங்களைப் பற்றி நாங்களே சொல்லுகிறோம்….எங்களையும் புரிந்து கொள்ளங்கள்!!!!

நாங்கள் ஆண்கள்……

நாங்கள், பெண்களின் உலகத்தை புரிந்து கொள்வதிலேயே வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள். பல சமயங்களில் அவர்களின் புரிந்துணர்வையும், அணுகுமுறையையும் தெரிந்து கொள்வதற்குள் பல விஜய் படங்கள், சிம்பு படங்கள், விஷால் படங்களை ஒன்றாகப் பார்த்த அனுபவத்தைப் பெறுகின்றோம். பல சமயங்களில் அவர்களை புரிந்து கொள்ளும் அவசரத்திலும், அவசியத்திலும் எங்களைப் பற்றியே நாங்கள் அறிந்துகொள்ளாமல் போய் விடுகிறோம்….

  • உங்கள் மனதில் இருப்பதை எல்லா ஆண்களாலும் அப்படியே புரிந்து கொள்ள முடியாது! நீங்களாகச் சொல்லும் வரை…
  • நாங்கள் என்ன ஆச்சு என்று கேட்டு, நீங்கள் ஒன்றுமில்லை என்று சொன்னால், நாங்கள் ஒன்றுமில்லை என்றுதான் நினைப்போம்…
  • நீங்கள் குண்டாக இருப்பது போன்று நீங்கள் கருதினால் ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம், திருப்பி, திருப்பி எங்களிடம் கேட்காதீர்கள்…
  • கல்யாணத்திற்கப்புறம் நாங்களும் பல விஷயங்களை இழக்கிறோம்
  • ஒரு பிரச்சனையை தீர்க்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே எங்களிடம் வாருங்கள்
  • உங்களுக்கு தலைவலி நீண்ட நாட்களுக்கு இருந்தால் டாக்டரைப் போய் பாருங்கள், கணவனையோ, பாய்ஃபிரண்டையோ குறை சொல்லாதீர்கள்
  • பெரும்பான்மையான கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்தாலே சந்தோஷமாக இருக்கும்
  • ஒரு விஷயம் இரு விதங்களில் புரிந்துக் கொள்ளப்படலாம் எனில், அதில் ஒரு விதம் உங்களை கோபமோ, சோகமோ படுத்துகிறது எனில், கண்டிப்பாக நாங்கள் இன்னொரு விதத்தில்தான் சொல்லியிருப்போம்
  • நாங்கள், 6 மாதத்திற்கு முன்பு சொன்ன எந்த ஒரு விஷயமும், வார்த்தைகளும் விவாதத்தின் போது ஒத்துக்கொள்ளப் பட மாட்டாது!!! உண்மையில் எங்களது எல்லா கருத்துக்களுமே ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் (கடையில் வரும் ஆஃபர் போன்று!!!)
  • ஒன்று ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது நாங்கள் செய்த விதத்தை ஒத்துக் கொள்ளுங்கள்… மிக நல்லது என்னவென்றால், உங்களால் அந்த விஷயத்தை மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் தயவு செய்து நீங்களே செய்து விடுங்கள்….
  • அழுகை என்பது பெரும்பாலும் ப்ளாக்மெயிலே…
  • கிரிக்கெட் மேட்சுகளின் போது ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், விளம்பர இடைவேளையின் போது தாராளமாக சொல்லுங்கள்… ஆஃப்டர் ஆல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள்தான்…
  • பெண்களுக்கென்றே இருக்கும் பிரத்யோகமான சில விஷயங்களை நாங்கள் விரும்பி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஆண்களுக்கென்ற பிரத்யோகமான விஷயங்களை நீங்களும் விரும்பிக் கேளுங்கள்…
  • அவசரமாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் எனில், நீங்கள் எதை அணிந்து வந்தாலும் நன்றாகவே இருக்கும்,சத்தியமாக…… நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம்
  • ஒரு விஷயம் வேண்டுமென்றால் நேரடியாகச் கேளுங்கள்….நுண்ணிய, மறைமுக, ஏன் நேரடி குறிப்புகளைக் கூட சில சமயம் நாங்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம்
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் தோழிகளை சந்திப்பதால், உங்களுக்குள் ப்ரைவசி வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உங்களுடன் வர மறுக்கிறோம்…
  • காதலிக்கும் போது உங்களுக்காக அதிகம் செலவு செய்கிறோம் என்பதற்காக நாங்கள் பணம் படைத்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல….. அப்போது எங்களுக்கு பணம் ஒரு பொருட்டாகத் தெரியாது!
  • கல்யாணமான முதல் ஒரு வருடத்தைப் போன்றே வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்…..பிறந்த குழந்தையை எல்லாரும் கொஞ்ச மட்டுமே செய்வார்கள். நாட்கள் ஆக ஆக மட்டுமே, திட்டுவார்கள், சண்டை போடுவார்கள், கேள்வி கேட்பார்கள், முக்கியமாக, ஏதாவது வேண்டுமென்று கேட்டால் அது தேவையா என்று யோசிப்பார்கள்…
  • மாமியாருக்கும், மருமகளுக்குமிடையே சண்டை என்றால், அதை கணவனைத் தீர்த்து வைக்கச் சொல்லாதீர்கள். தீர்ப்புகள் ஒருவருக்கு சார்ந்தும், இன்னொருவருக்கும் எதிராகவும் மட்டுமே இருக்கும்….
  • பரிசாக நாங்கள் தரும் புடவையோ, பொருளோ  சுமாராகவோ, விலை குறைந்ததாகவோ இருந்தால், எங்கள் அன்பு குறைவானது என்று அர்த்தம் அல்ல
  • சில சமயங்களில் உங்களது செய்கைகளையோ, பேச்சுகளையோ புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் அவை உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்

பி.கு:

வேற யாராவது ஏதாவது சேத்த விரும்பறீங்களா???

அப்படியே இது சீரியஸா இல்லை மொக்கையான்னும் சொல்லுங்க…..

பிரிவுகள்:சீரியஸ், மொக்கை குறிச்சொற்கள்:, ,