<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>தேடல்</title>
	<atom:link href="http://nareshin.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://nareshin.wordpress.com</link>
	<description>கனவுகள் தேடல்களுக்கு வழிவகுக்கின்றன, தேடல்கள் சாதனைகளுக்கு வழிவகுக்கின்றன...</description>
	<lastBuildDate>Fri, 16 Sep 2011 14:51:18 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='nareshin.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>தேடல்</title>
		<link>http://nareshin.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://nareshin.wordpress.com/osd.xml" title="தேடல்" />
	<atom:link rel='hub' href='http://nareshin.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>நிழல்களைத் தாண்டிய நிஜம்&#8230;</title>
		<link>http://nareshin.wordpress.com/2011/09/16/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2011/09/16/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 16 Sep 2011 14:51:16 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சாதனை]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=524</guid>
		<description><![CDATA[இருப்பது இன்னும் ஒரே ஒரு போட்டிதான். ஆனாலும் தன் பழக்கத்தை மட்டும் விடவில்லை. எப்போதும் போல அணியின் மற்ற வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அன்றும் வந்திருந்தார். தன்னுடைய ஆட்ட நுணுக்கத்தில் தேவைப்படும் சின்னச் சின்ன மாற்றங்களிலேயே பயிற்சிகளின் போது கவனம் இருந்தது. அவர் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவதற்கான முழுத் தகுதிகளையும் பெற்றிருக்கவில்லைதான். ஆனாலும் அதற்கான திறமைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டும், வளர்த்துக் கொண்டே இருந்தார். தன் கேரியர் முழுக்க தன்னை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=524&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இருப்பது இன்னும் ஒரே ஒரு போட்டிதான். ஆனாலும் தன் பழக்கத்தை மட்டும் விடவில்லை. எப்போதும் போல அணியின் மற்ற வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அன்றும் வந்திருந்தார். தன்னுடைய ஆட்ட நுணுக்கத்தில் தேவைப்படும் சின்னச் சின்ன மாற்றங்களிலேயே பயிற்சிகளின் போது கவனம் இருந்தது. அவர் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவதற்கான முழுத் தகுதிகளையும் பெற்றிருக்கவில்லைதான். ஆனாலும் அதற்கான திறமைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டும், வளர்த்துக் கொண்டே இருந்தார். தன் கேரியர் முழுக்க தன்னை முழுக்க முழுக்க அணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட அந்த சாதனையாளனின் கடைசி ஒரு நாள் போட்டி இன்று… அந்த வீரனுக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்</p>
<p>உண்மையில் அவருடைய கடைசி டெஸ்ட் போட்டி விளையாடும் போது இந்த பதிவினை எழுதுவதை விட, கடைசி ஒரு நாள் போட்டியின் போது வாழ்த்தவே என் மனம் விரும்பியது. காரணம், டெஸ்ட் போட்டிகளுக்கென்றே உருவான ஒரு மனிதன் அதில் சாதிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்லவே?</p>
<p>ஜாம்பவான்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய தகுதி இவருக்கும் இருக்கிறது. அது, தன்னைப் பற்றி, மற்ற யாரையும் விட தான் மிகச் சரியாக புரிந்து வைத்திருப்பது. அந்த புரிதல்தான், தான் டெஸ்ட்டுகளை விட ஒரு நாள் போட்டிகளுக்கு அதிகம் பயிற்சி பெற வேண்டியிருந்தது என்பதனை ஒத்துக் கொள்ள வைத்தது. ஆரம்பத்தில் தான் தடுமாறியதை ஒத்துக் கொள்ளும் அதே சமயத்தில், அந்த தடுமாற்றம்தான் தன்னுடைய கவனம் எது என்பதையும், ஆட்டிடியூட் எது என்பதையும் தனக்கு போதித்தது என்கிறார். அவருடைய ஒரு நாள் போட்டி வாழ்வில் ஏற்றங்களும் இறக்கங்களும் இல்லாமல் இல்லை. நடுவில் அணியில் இல்லாமலும் இருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எந்த சமயத்திலும் அவருடைய கற்றலும், கவனமும் குறையவே இல்லை, மாறாக அதிகரித்துக் கொண்டே இருந்தது</p>
<p><a href="http://nareshin.files.wordpress.com/2011/09/e0ae9fe0af8de0aeb0e0aebee0aeb5e0aebfe0ae9fe0af8d.jpg"><img class="aligncenter size-full wp-image-525" title="ட்ராவிட்" src="http://nareshin.files.wordpress.com/2011/09/e0ae9fe0af8de0aeb0e0aebee0aeb5e0aebfe0ae9fe0af8d.jpg?w=600&#038;h=405" alt="" width="600" height="405" /></a><br />
99 வரை ஒரு நாள் போட்டிகளில் மிகவும் தடுமாறிய டிராவிட், 99 லிருந்து 2005 வரையிலான ஆட்டங்களில் ஸ்ட்ரைக் ரேட்டை கங்குலி, இன்சமாமிற்கு இணையாகவே வைத்திருந்தார். வெறும் புள்ளி விவரம் மட்டுமே சாதனைகளைச் சொல்லும் என்றால், பெவன் போன்றோர் நினைவிலே இருக்க முடியாது. ஏனெனில் பெவனின் மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகள் 12 மட்டுமே. பெவன், டிராவிட் போன்றோரின் சாதனைகளை புள்ளி விவரங்கள் சொல்வதில்லை, உணர்வுகளே சொல்கின்றன. அவருடைய விளையாட்டுக்காலம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த இங்கிலாந்து தொடரே உதாரணம். ஒபனிங் பேட்ஸ்மேன்கள் காயம், டிராவிட்டை இறக்கு. கீப்பிங் ஆள் வேண்டும், கூப்பிடு அவரை. ஒரு நாள் போட்டிக்கு ஆளில்லை, கூப்பிடு. மிடில் ஆர்டர் ஸ்ட்ராங்காக இல்லை, அவருடைய பேட்டிங் ஆர்டரை மாத்து. அணிக்கு தேவைப்படும் சமயங்களில், எல்லாவித மாற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளுவதில் அவர் தயாராகவே இருந்தார். இன்னமும், கங்குலியின் தலைமையில் நாம் அதிக வெற்றிகளை பெற ஒரு காரணமாக இருந்தது, டிராவிட்டை கீப்பராக இருக்கச் செய்து, அந்த இடத்தில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை வைத்ததே…</p>
<p>டிராவிட், லாரா, கங்குலி போன்ற ஜாம்பவான்களின் காலத்தில் இருந்ததும், ஒரு ஹிட்டராக இல்லாமல் இருந்ததும் ஏனோ அவருடைய புகழை சற்று மங்கலாகவே வைத்தது. இன்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய பேட்டிங்கிலேயே பதில் சொல்லியிருந்தாலும் கவனம் அவர் மேல் விழவில்லை. டிராவிட் ஒரு நாள் போட்டிகளுக்கு தகுதியில்லை, வெல் ஒரு நாள் போட்டிகளின் ரன் குவிப்பில் 7 வது இடத்தில் இருக்கிறார். ஓ, அவரால ரொம்ப அடிச்சு ஆட முடியாதே – மிக விரைவாக 50 ரன் குவித்த இந்திய வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிரார். தன்னுடைய முதல் மற்றும் கடைசி 20-20யில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்திருக்கிரர். இதுவரை இதை யாரும் செய்ததில்லை.. ம்ம்ம், அவர் அதிகமாக பந்தினை வேஸ்ட் செய்கிறார், அதுனால மற்றவர்கள் டென்ஷன் ஆகி விக்கட்டுகளை விடுகின்றனர் – கிரிக்கெட் வரலாற்றில் இரு முறை 300 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தவர். இந்தியாவின் 7 சிறந்த பார்ட்னர்ஷிப்பில் 3ல் அவருடைய பங்கிருக்கிறது. தான் விளையாடிய 343 போட்டிகளில் 160ல் இந்தியா வெற்றி. அந்த 160 போட்டிகளில் அவருடைய பங்கு 5729 ரன்கள் (சராசரி 50.69)</p>
<p>டிராவிட் அதிக பட்ச ஸ்கோரினை எடுத்த போட்டிகளில் கங்குலியும், சச்சினும் 200 ரன்களுக்கு அருகே ரன் எடுத்திருந்தனர். அவருடைய முதல் செஞ்சுரியின் போது அன்வர் 194 ரன்களை எடுத்திருந்தார். டிராவிட்டின் தலைமை தோனிக்கு அடுத்த படியான வெற்றிச் சதவீதத்தைக் கொன்டிருந்தாலும், தொடர்ச்சியாக இந்தியாவின் அதிக வெற்றிகளைக் கொண்டிருந்தாலும், ஞாபகத்தில் இருப்பதென்னமோ 2007ல், அவருடைய தலைமையில் இந்திய அணியின் தோல்வியைத்தான். விக்கட் கீப்பர் பேட்ஸ்மேனாக உலகின் இரண்டாவது (முதல் இடம் தோனிக்கு – 49.09, அப்புறமே சங்கா, கில்லி எல்லாம்) சிறந்த சராசரியைக் (44.23) கொண்டிருந்தாலும், அவர் இன்னும் சிறப்பாக கீப்பிங் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கு தோன்றுகிறது. உலகக் கோப்பைகளில் 750க்கும் மேலான ரன்களை குவித்தவர்களில் இரண்டாவது (இதில் முதல் இடம் விவியன் ரிச்சர்ட்ஸ் &#8211; 85) அதிக சராசரியைக் (75) கொன்டிருந்தாலும் மனதில் நிற்ப்பதென்னமோ 2007 உலகக் கோப்பைதான்</p>
<p>சமகாலங்களில் விளையாடிய சாதனையாளர்களான, டிராவிட், சச்சின், கும்ளே ஆகிய மூவருக்கும் வேற்றுமைகள் பல இருந்தாலும், ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது, மூவருமே அர்ப்பணிப்பிற்கும், பயிற்சிகளுக்கும், ஆடிடியூட் மற்றும் கடின உழைப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே. இன்றும் சச்சின், டிராவிட், கும்ளே என சிலர் மட்டுமே ஆராதிக்கப்படுவதன் பிண்ணனி வெறும் சாதனைகள் மட்டுமல்ல. அதன் பின்னே நி(ம)லைத்து நிற்கும் ஒழுங்கும், உண்மையும், நடந்து கொள்ளும் முறைகளுமே. இந்த பண்புகள்தான் ஏனோ அணியின் மற்ற சாதனையாளர்களுக்கு மத்தியிலும் கில்கிரிஸ்ட், கல்லிஸ், ஃபிளமிங், கபில் தேவ் எனச் சிலரை மட்டும் தனியாக முன்னிறுத்துகிறது</p>
<p>அணிக்காகவே விளையாடிய அந்த மனிதனின், தென் ஆப்பிரிக்க டூரின் போது, தந்தை பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட போதும் சதத்தினை அடித்த மனிதனின், தன்னால் ஒரு பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை எனத் தெரிந்த உடன் தலைமையை ராஜினாமா செய்த மனிதனின், எந்தச் சமயத்திலும் திறமையையும் உண்மையையும் முன்னிறுத்திய மனிதனின் சாதனைகளை மனமார வாழ்த்துகிறேன்…</p>
<p>டிராவிட் – வீ வில் மிஸ் யூ</p>
<p>இந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும், பதிவும் வெறும் சாதனைகளுக்காக மட்டுமல்ல, அவருடைய அர்ப்பணிப்பிற்கு…</p>
<br />Filed under: <a href='http://nareshin.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88/'>சாதனை</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/524/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/524/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/524/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/524/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/524/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/524/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/524/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/524/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=524&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2011/09/16/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2011/09/e0ae9fe0af8de0aeb0e0aebee0aeb5e0aebfe0ae9fe0af8d.jpg" medium="image">
			<media:title type="html">ட்ராவிட்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆபாவாணன் &#8211; ஒரு பன்முகக் கலைஞன்</title>
		<link>http://nareshin.wordpress.com/2011/08/16/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2011/08/16/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Tue, 16 Aug 2011 14:34:26 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=514</guid>
		<description><![CDATA[90 களில் நடந்த சம்பவம் இது. வெறும் பள்ளி ஆண்டு விழாதான் அது. வருடா வருடம் நடக்கும் விழாவைப் போலவே, அந்த வருடமும் எம் பள்ளியில் அந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும் அந்த வருடம் மட்டும் கட்டுக்கடங்கா கூட்டம் பள்ளி வளாகத்தில். பெற்றோருக்கும், மக்களுக்கும் அனுமதி தரும் விழா அது ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இந்தளவு கூட்டம் என்பது அனைவரையும் சற்றே ஆச்சரியப்படுத்தினாலும், ஓரளவு அதை முன்னரே ஊகித்து வைத்திருந்தனர் எம் பள்ளியில். சிறப்பு விருந்தினராக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=514&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>90 களில் நடந்த சம்பவம் இது. வெறும் பள்ளி ஆண்டு விழாதான் அது. வருடா வருடம் நடக்கும் விழாவைப் போலவே, அந்த வருடமும் எம் பள்ளியில் அந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும் அந்த வருடம் மட்டும் கட்டுக்கடங்கா கூட்டம் பள்ளி வளாகத்தில். பெற்றோருக்கும், மக்களுக்கும் அனுமதி தரும் விழா அது ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இந்தளவு கூட்டம் என்பது அனைவரையும் சற்றே ஆச்சரியப்படுத்தினாலும், ஓரளவு அதை முன்னரே ஊகித்து வைத்திருந்தனர் எம் பள்ளியில். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான் என்றாலும், அவருடைய அப்போதைய நிலை பொதுமக்களின் ஆர்வத்திற்கு பெரிதும் காரணமாக இருந்ததுமில்லாமல், வழமையாக கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைந்து விடும் கூட்டம், அன்று விழா முடியும் வரையும் இருந்து, அந்த சிறப்பு விருந்தினரை கண்டு பேசி, ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு சென்றது. விருந்தினர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணமே, மக்களின் கவனத்தை இழுக்கும் எனும் போது, இவருடைய சில படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமில்லாமல், திரைத்துறையில் ஒரு அலையையும் கிளப்பி விட்டது எனில், மக்களின் ஆர்வத்திற்குச் சொல்லவா வேண்டும்??? <strong>அந்தப் பள்ளியின் பெயர்: நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், சேலம் மாவட்டம். அந்த சிறப்பு விருந்தினரின் பெயர்: ஆபாவாணன்</strong></p>
<p>80 களின் பிற்பகுதி அது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 70 மற்றும் 80களின் ஆரம்பத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் ஆகியோரிடமிருந்து மிகச் சிறந்த கலை(தை)யம்சமுள்ள படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. கமர்ஷியங்கள் படங்களா, கலைப்படங்களா எனத் தன் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு கமலும் கூட சற்று திணறும் வகையில் ராஜ பார்வை, சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை என்று எல்லாம் கலந்து படங்கள் வந்து கொண்டிந்தன. ரஜினியும் கூட பாயும் புலி, தாய் வீடு போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், நெற்றிக்கண், புதுக்கவிதை போன்ற சற்றே வித்தியாசமான படங்களிலும் நடித்து வந்தார்… அந்தக் காலக்கட்டத்தில் நடை பெற்ற மிக முக்கியமான அறிமுகங்கள் என்றால் பாண்டியராஜன் (இயக்குநராக), தொடந்து சட்டம் சம்பந்தமான திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது பெரும்பான்மை படங்களின் நாயகனான விஜயகாந்த் (முன்பே அறிமுகமாகி இருந்தாலும், இயக்குநர்களும், ரஜினி, கமல் ஆகியோர் ஆக்கிரமித்திருந்த அந்த காலகட்டத்தை நன்றாகவே தாக்குபிடித்தார்) ஆவர். ஆனாலும் இவர்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் மிக முக்கிய அறிமுகம் மைக் மோகனும். ஜெயமாலினியும்தான் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>ஆரம்பத்தில் கலை, பின்பு மெல்ல மெல்ல கமர்ஷியல் என ட்ரெண்ட் மெல்ல மாறினாலும் 86 ல்தான் அந்த பெரியதொரு அலை உருவானது. புதிய தொழில்நுட்ப அலையாக மட்டுமல்லாமல், அதுவரை ஆங்கிலப்படங்களில் மட்டுமே கண்டுவந்த ஒரு அனுபவத்தை தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரளவு தாக்குப்பிடித்து வந்த விஜயகாந்திற்கு தனது பாணி என்ன என்பதையும் புரியவைத்தது மட்டுமில்லாமல், அதுவரை மக்கள் அதிகம் அறிந்திருக்காத திரைப்படக் கல்லூரியின் முகவரியையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது அந்தத் திரைப்படம். அதன் பெயர் “ஊமை விழிகள்”. வெறும் கதையில் மட்டுமல்ல, காட்சியமைப்பிலும் சரி, பாடல் வரிகளிலும் சரி, இசையிலும் சரி என எல்லாவற்றிலும் புதியதொரு உணர்வுகளை பரப்பியது ஊமை விழிகள். விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா, அருண் பாண்டியன் என ஒரே ஸ்டார் பட்டாளமாக இருந்தாலும், ரவிச்சந்திரன் முதற்கொண்டு அனைவருக்குமே ஒரு பேர் சொல்லும் படமாகவே அது அமைந்தது. தனது முதல் படத்திலேயே, மிக வித்தியாசமாக மட்டுமின்றி, மிக தைரியமான ஒரு படத்தைக் கொடுத்த ஆபாவாணன் என்ற பெயர் தமிழக மக்களிடையே மிக ஆர்வமாக பார்க்கப்பட்டது.</p>
<p>மைக் மோகனின் படங்களின் மூலம் இசைஞானி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, இசையும் கூட மிகப் புதிதாய் இருந்தது மக்களுக்கு. அதுவும் ”தோல்வி நிலையென நினைத்தால்” பாடல் ஏற்படுத்திய அதிர்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, ஈழத்திலும் கேட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிதான் பின்னாட்களில் ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முதற்கொண்டு பல திரைபடக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவில் கால்பதிக்க காரணமாய் அமைந்தது.</p>
<p>அந்தக் காலகட்டத்தில் வந்த மிக முக்கியமான இந்தத் திரைப்படத்திற்குப் பின்பு ஆபாவாணன் மூலமாக வந்த வெற்றிப்படங்கள் பல இருந்தாலும், முதல் படத்திற்கு இணையான அதிர்வை மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும், ஏறக்குறைய முதற்படத்திற்கு இணையான ஸ்டார் பட்டாளத்தைக் கொண்டு அவர் கதை மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் ’செந்தூரப் பூவே’. தொழில்நுட்பத்திலும், கதைக்களனிலும் ஏதாவாது வித்தியாசமாகவே முயற்சி செய்யும் ஆபாவாணன், இந்தப்படத்தில் சிறப்பு சப்தங்களை (ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்) இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் வரும் தொடர்வண்டி காட்சிகளில் சிறப்பு சப்தங்களைக் கொடுக்க செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் வரும் போது ஏற்படும் சத்தத்தை பதிவு செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தினார். இது போன்ற முயற்சிகள்தான் தமிழ் திரை உலகம் சிறப்பு சப்தங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த காரணமாய் அமைந்தது. ஏன், சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் என்ற ஒருவரை அதிகம் தமிழ் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்ததே ஆபாவாணனுக்கு பிறகுதான்.</p>
<p>செந்தூரப்பூவே படத்தை பார்த்த, அப்போது இயக்குநராகியிராத ராம்கோபால் வர்மா இவரை சந்தித்து தொழில் நுட்ப விஷயங்கள் பெரிதும் கவர்ந்ததாக சிலாகித்ததோடு இல்லாமல் தெலுங்கில் இதனை டப் செய்தால் மிகப் பெரும் வெற்றியடையும் என்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சொல்லியிருக்கிறார். அவர்கள் முடியாது என மறுத்தாலும், வேறொரு தயாரிப்பாளர் அதனை டப் செய்து வெளியிட்டு தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் (200 நாட்களுக்கும் மேல்) ஆனது படம். படத்தின் வெற்றியை தெளிவாக ஊகிக்க முடிந்ததாலேயே, ராம்கோபால் வர்மாவிற்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அதே அன்னபூர்ணா ஸ்டூடியோ வாய்ப்பு கொடுத்தனர். அப்படி அவர்கள் கொடுத்த படம்தான் ‘சிவா’.</p>
<p>இரண்டு படங்களில் இருக்கும் ஸ்டார் பட்டாளங்களுக்கு, படம் வெற்றியடைந்ததில் பெரிய ஆச்சரியமில்லாமல் போகலாம். ஆனால் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகளை கொண்டு அவர் கொடுத்த படம்தான் ‘இணைந்த கைகள்’. இன்றளவும் எனக்கு மிகப் பிடித்த படமாக இது இருக்கிறது. சிறுவயதில் முதன் முதலில் இந்தப்படத்தைப் பார்த்த போது அதிகம் பார்த்தறியாத ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அதன் காட்சிகள் இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மும்பை ட்ரைவ் இன் தியேட்டரில் இந்தப்படம் வெளியான போது ஏற்பட்ட தள்ளு முள்ளு, அந்தத் தியேட்டரையே மூடும் நிலையை உண்டாக்கியது. கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இந்தப் படத்தியில் ஆபாவாணன் பெயர் டைட்டிலில் வரும்பொழுது ரசிகர்கள் சில்லறை காசுகளை வீசி ஆர்பரித்தனர். அந்தளவிற்கு ஒரு பெருமையை சம்பாதித்திருந்தார். இந்தப்படத்தில் வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த புது உணர்வினை உண்டாக்கின. வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்படத்தை வெளியிடுவது இந்தப்படத்தின் வெற்றியின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்கு இந்தக் குழு செலவிட்ட 40 நாட்களை தமிழ் திரையே அப்போது ஆச்சரியமாக பார்த்தது.</p>
<p>எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆதர்சன நாயகனாக கருதப்பட்ட அருண்பாண்டியன் படித்ததும் அதே எம் நிர்மலா மேல்நிலைப் பள்ளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது கூட அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும்…</p>
<p>இவருடைய பங்களிப்பில் வந்த மற்ற சில படங்கள் தாய் நாடு, உழவன் மகன், முற்றுகை, காவியத் தலைவன், கருப்பு ரோஜா. இது இல்லாமல் கங்கா யமுனா சரசுவதி என்ற நெடுந்தொடரையும் தந்திருக்கிறார். ஏற்கனவே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சவுண்ட் ரெக்கார்டிஸ்டின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆபாவாணனால், கருப்பு ரோஜாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, டிடிஎஸ் ஒலி நுட்பம் தமிழ் சினிமாவில் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. படம் உண்மையில் ஒரு தோல்வியே என்றாலும், ப்ளாக் மேஜிக்கை மையமாக வைத்து வெளிவந்த படம் எனக்குத் தெரிந்து இதுதான். வெளி வரும் படங்களும் ஒன்று ஜமீன் கோட்டை வகையறாவாக இருக்கிறது அல்லது பேய் படங்களாக இருக்கிரது. கதாநாயகி ஆரம்பத்திலேயே இறந்து விட, மிக வித்தியாசமான கதை மாந்தர்களோடு, ஸ்டார் வேல்யூ இல்லாத நாயகனோடு, முழுக்க முழுக்க ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இது போன்றதொரு படம் எடுக்க உண்மையிலேயே ஒரு துணிவு வேண்டும்….</p>
<p>தான் பள்ளியில் படிக்கும் போதே ’சித்திரக் குள்ளர்கள்’ என்ற நூலை எழுதி சொந்தமாக பதிப்பித்து விற்ற ஆபாவாணன், தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் என்ற தொழில் நுட்பம் உருவாகி வளர்வதில் பெரும் பங்கு வகித்தார்.</p>
<p>கதை, இயக்கம், திரைக்கதை என பல தளங்களில் சிறந்திருந்த இவர் இசையையும் விட்டுவைக்கவில்லை. தனக்குப் பிடித்த மெட்டுக்களை கொடுத்து விட்டு மிக நல்ல பாடல்களை இசையமைப்பாளர்கள் (பெரும்பாலும் மனோஜ் கியான்) மூலம் உருவாக்கிக் கொடுத்த ஆபாவாணன் பெயரை சில இடங்களில் இசை உதவி என்ற இடத்தில் பார்த்திருக்கலாம். இசை உதவி என்றிருந்தாலும், இவரது திறன் பார்த்து இசைஞானியே கேப்டனிடம், அவருக்கு நன்றாக இசையமைக்க வருகிறது, தனியாக இசையமைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்திருக்கிறார். தவிர, நான் அதிகம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததில்லை, ஆனால் இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்காக நான்கு முறை சென்று பார்த்திருக்கிறேன் என இவரது இணைந்த கைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் வியந்திருக்கிறார். ஆபாவாணனின் இசையமைப்பில் பங்கேற்ற சில நபர்களின் பெயர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், தினா, சபேஷ் – முரளி (எங்கியோ கேட்ட மாதிரி இருக்குல்ல?). ஒரு சமயத்தில் இவருக்கு 44 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் தொடர் பணி காரணமாக இசையமைக்கவில்லை.<br />
பள்ளியிலேயே சொந்தமாக நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஆபாவாணன், இசையமைப்பில் பங்கேற்றதுமில்லாமல் பல பாடல்களை எழுதியதுமில்லாமல், சில பாடல்களை பாடியுமிருந்திருக்கிறார்.. மனம் சோர்ந்து கிடக்கும் போதோ, வெறுமையாக உணரும் போதோ, அவர் எழுதிய அந்தப்பாடலைக் கேளுங்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். இந்த சக்தி உணரப்பட்டதால்தானோ என்னமோ, ஈழத்தில் இந்தப் பாடல் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்தப் பாடல்…<span style="text-align:center; display: block;"><a href="http://nareshin.wordpress.com/2011/08/16/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/"><img src="http://img.youtube.com/vi/0boI_dAMhZk/2.jpg" alt="" /></a></span></p>
<p>நீண்ட இடைவேளைக்குப் பிறகு பி.பி. ஸ்ரீனிவாசை வைத்து பாடிய இந்தப் பாடலில் அனைவரும் சேர்ந்து பாடும் தருணத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் உடல் சிலிர்க்கும். இதே போன்று நீண்ட இடைவேளைக்கு டிஎம்எஸை வைத்து தாய்நாடு படத்தில் எல்லா பாடல்களையும் பாடவைத்தாரென்றாலும், அதே போராட்ட உணர்வை மையப்படுத்தி எழுதிய பாடல், <a href="http://www.inbaminge.com/t/t/Thai%20Naadu/" target="_blank">http://www.inbaminge.com/t/t/Thai%20Naadu/Naan%20Muthan%20Muthal.vid.html</a></p>
<p>சிறுவயதில் எனக்குத் தெரிந்து எல்லா பள்ளி கல்லூரி மேடைகளிலும் இரு பாடல்கள் எப்பொழுதும் நடனத்திற்கு தயாராக இருக்கும். எப்பொழுதும் பெண்களின் நடனத்திற்காகவே எழுதப்பட்டதாக தோன்றும் அந்தப் பாடல்கள் ’பூ பூக்கும் மாசம் தை மாசம்’ மற்றும் ’சின்னச் சின்ன வண்ணக் குயில்’. இதற்கடுத்து ஓரளவு அந்த இடத்தைப் பிடித்தது, அதுவும் ஆண்களால் அதிகம் விரும்பப்பட்டது ’சிக்கு சிக்கு புக்கு ரெயிலே’ தான். இதே வரிசையில் எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் இவர் பாடியதுதான். கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். <a href="http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html" target="_blank">http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html</a></p>
<p>இவர் இயக்கமாக இல்லாவிட்டாலும், இவருடைய சிஷ்யரின் இயக்கத்தில் வெளிவந்த தம்பி அர்ஜூனா படத்தில் வரும் ஒரு பாடலையும் இவர் பாடியிருக்கிறார். எப்படி ’தோல்விநிலையென நினைத்தால் பாடல்’ போராளிகளுக்காவே எழுதப்பட்டது என்ற செய்தி வந்ததோ, அதே போன்று இந்தப் பாடலும் புலிகளை மையப்படுத்தி எழுதியதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கேட்டுப்பாருங்கள்.<br />
<a href="http://www.inbaminge.com/t/t/Thambi%20Arjuna/" target="_blank">http://www.inbaminge.com/t/t/Thambi%20Arjuna/Puligal%20Konjam%20ii.eng.html</a></p>
<p>ஒரு அலையை உருவாக்கிய இந்த திறமைசாலியின் ஆரம்பமும் தற்போதைய நிலையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. எனக்குத் தெரிந்து பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….</p>
<br />Filed under: <a href='http://nareshin.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/'>சினிமா</a> Tagged: <a href='http://nareshin.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/'>சினிமா</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/514/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/514/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/514/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=514&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2011/08/16/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ர.சு. நல்லபெருமாள்</title>
		<link>http://nareshin.wordpress.com/2010/06/11/%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2010/06/11/%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 11 Jun 2010 03:18:07 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[நல்லபெருமாள்]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=510</guid>
		<description><![CDATA[எல்லாருடைய எழுத்துக்களும் அவ்வளவு எளிதில் நம்மை வசீகரித்து விடுவதில்லை. வசீகரிக்கும் எழுத்துக்கள் அனைத்துமே நம் சிந்தையையும் தூண்டுவதில்லை. எனது பால்யப் பருவத்தில் என்னை வசீகரித்த எழுத்துக்களின் சொந்தக்காரரைப் பற்றி திடீரென்று நினைத்தாற் போல் இணையத்தில் தேடிய போது என்னால் அவரைப் பற்றி அதிகம் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது விளைந்த எண்ணம்தான் இந்த பதிவு. அந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ர.சு. நல்ல பெருமாள். சிறு வயதில் நடந்திருந்தாலும், இவரது எழுத்தை நான் தேடிப் படிக்க ஆரம்பித்ததற்கு காரணமான [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=510&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எல்லாருடைய எழுத்துக்களும் அவ்வளவு எளிதில் நம்மை வசீகரித்து விடுவதில்லை. வசீகரிக்கும் எழுத்துக்கள் அனைத்துமே நம் சிந்தையையும் தூண்டுவதில்லை. எனது பால்யப் பருவத்தில் என்னை வசீகரித்த எழுத்துக்களின் சொந்தக்காரரைப் பற்றி திடீரென்று நினைத்தாற் போல் இணையத்தில் தேடிய போது என்னால் அவரைப் பற்றி அதிகம் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது விளைந்த எண்ணம்தான் இந்த பதிவு. அந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் <strong>ர</strong><strong>.</strong><strong>சு</strong><strong>. </strong><strong>நல்ல</strong><strong> </strong><strong>பெருமாள்</strong>. சிறு வயதில் நடந்திருந்தாலும், இவரது எழுத்தை நான் தேடிப் படிக்க ஆரம்பித்ததற்கு காரணமான சம்பவம் இன்றும் நினைவிலிருக்கிறது.</p>
<p>அது, தந்தையை நாயகனாக பாவிப்பதற்கும், வில்லனாகப் பார்ப்பதற்கும் இடைப்பட்ட ஒரு பருவம். ராஜேஷ்குமார், பிகேபி, சுபா, போன்றோரின் மாத நாவல்களிலும், மற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளிலும் சற்றே சலிப்பு ஏற்பட்டிருந்த சமயம். இளமையின் காரணமாக மெலிதாக அரசியல், சமூகம், புரட்சி சம்பந்தப்பட்ட புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டிருந்த சமயம். எங்கள் ஊரில் ஒரு மிகப் பெரிய கொடுப்பினையாக, அரசாங்கத்தால் நிறுவப்பட்டிருந்த நூலகம் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு வந்தது. வேலையை முடித்த பல குடும்பத் தலைவிகளுக்கும் (மெகா சீரியல்கள் அப்பொழுது மனிதர்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கவில்லை), படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கும், சிறு வயது பிள்ளைகளுக்கும் அதுதான் ஒரு பொழுது போக்கும் இடமே.</p>
<p>வாசிப்பனுபவத்தில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வதற்கு மிகுந்த உதவியாக இருந்ததும் அந்த நூலகந்தான். மாத நாவல் எழுத்தாளர்களையும், கல்கி, அனுராதா ரமணன், சிவசங்கரி, சாண்டில்யன், தவிர எனக்கு அதிகம் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆகையால் நூலகத்தில் இருந்து நானாக மூன்று புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது வழக்கமாகியிருந்தது. எப்போதும் மாத நாவல்களையோ அல்லது நூலக புத்தகங்களையோ நான் படிப்பதை பார்க்க நேர்ந்தால், சும்மா புரட்டி மட்டும் பார்த்துவிட்டு செல்லும் எந்தை (அதற்கு மேல் அவருக்கு நேரம் கிடைப்பதில்லை, என்னைப் பொறுத்த வரை அதுவே ஒரு பெரிய கொடுப்பினை. ஏனெனில், பாட புத்தகங்கள் மட்டும்தான் வாழ்க்கை என்ற சூழ்நிலை நிலவும் ஒரு சமூகத்தில், மற்ற புத்தகங்களை படிக்க அனுமதிப்பது என்பதையும் தாண்டி அதை ஊக்குவிக்கவும்கூடிய ஒரு குடும்ப அமைப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரந்தான்) அன்று மட்டும் நான் எடுத்து வந்த ஒரு நூலை மிக ஆர்வத்துடன் பார்த்தது மட்டுமில்லாமல் ஒரு மணி நேரம் இருந்து படித்துவிட்டுச் சென்றார்.</p>
<p>அது மட்டுமில்லாமல் அந்த புத்தகத்தை படிக்குமாறு என்னையும் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் செயல் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, ஏனெனில் அதற்கு முன் அவராக என்னைப் படிக்கச் சொன்ன ஒரு புத்தகம், காமராசருடைய வாழ்க்கை வரலாறு தான், காமராசருடைய நெருங்கிய நண்பர் (பெயர் முத்துசாமி என்று நினைக்கிறேன்) ஒருவரால் எழுதப்பட்ட புத்தகம் அது, மற்றபடி அவர் எனது ரசனையிலோ, வாசிப்பிலோ தலையிடுவதேயில்லை. இப்போது அவர் படிக்கச் சொன்ன புத்தகம், ர.சு. நல்ல பெருமாள் என்பவர் எழுதிய <strong>“</strong><strong>மயக்கங்கள்</strong><strong>”.</strong> என் தந்தை விரும்பி படித்த அந்தச் செயல்தான் ர.சு. நல்லபெருமாளின் மற்ற புத்தகங்களை அந்த நூலகத்திலிருந்து தேடி எடுத்து வந்து படிப்பதற்கும் முக்கியமாக என் தந்தைக்கு படிக்கக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது <strong>(</strong><strong>நமக்கு</strong><strong> </strong><strong>பிடித்தமானவர்களுடைய</strong><strong> </strong><strong>விருப்பங்களுக்கான</strong><strong> </strong><strong>தேடலும்</strong><strong> </strong><strong>மிகச்</strong><strong> </strong><strong>சுகமானதுதானே</strong><strong>!!!)</strong></p>
<p>எந்தைக்காக படிக்க ஆரம்பித்தாலும் படிக்க படிக்க அவரது எழுத்துக்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டேச் சென்றது. இளமைப்பருவத்தில் வருகின்ற காதல் மட்டுமல்ல, சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிற மனிதர்களும், சில நூல்களும், சம்பவங்களும் கூட நம் நெஞ்சில் பசுமையாக நிலைக்கத்தான் செய்கின்றன.</p>
<p>சற்றே புரட்சி சம்பந்தப்பட்ட நூல்களில் ஆர்வம் இருந்ததாலோ என்னமோ “ஆத்திகம், நாத்திகம்” இரண்டையும் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியிருந்த ”மயக்கங்கள்” நாவல் என்னுள் மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. நாவலின் முடிவில் எது உண்மை எது பொய், எது சரி, எது தவறு என்பதைப் பற்றியெல்லாம் முடிவுகள் ஏதும் தராமல் வாசகனை சிந்திக்க விட்டிருந்தது என்னை மிகவும் ஈர்த்தது.</p>
<p>அந்த புத்தகம் ஏற்படுத்திய நம்பிக்கைதான் அடுத்த முறை அவர் எழுதிய <strong>”</strong><strong>கல்லுக்குள் ஈரம்</strong><strong>” </strong>(1966-1969), <strong>”</strong><strong>போராட்டங்கள்</strong><strong>”</strong> (1972) ஆகிய இரு நூல்களைக் கொணரச் செய்தது. இந்த இரு நாவல்களும் ஏற்படுத்திய சிந்தனைகள், ஆச்சரியங்கள், திடுக்கிடல்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதுவும் ”கல்லுக்குள் ஈரம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள், சுதந்திரப் போராட்டக் காலத்தை அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்தது. திலகர், பாரதி, காந்தி என்று பலருடைய சிந்தனைகளை நடவடிக்கைகளை, அவர்களைப் பற்றி படிக்கும் போதும் சரி, ”சிலைகளுக்கு மாலைகளை அணிவிக்கிறார்கள், சிந்தனைகளுக்கு மலர்வளையம் வைக்கிறார்கள்” என்பது போன்ற வரிகளை படிக்கும் போதும் சரி ஏற்படுத்திய உணர்வுகள் ஏராளம்!!!</p>
<p>பின்னாளில், இந்த ”கல்லுக்குள் ஈரம்” என்ற இந்த நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திரப்போருக்கு ஒரு வித்தாக அமைந்ததை அறிந்த போது மிகுந்த வியப்புமேற்பட்ட்து!!! இதில் வரும் <strong>’</strong><strong>ரங்கமணி</strong><strong>’</strong> பாத்திரம்தான் <strong>விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு </strong>ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்று அவரே பேட்டி கொடுத்திருக்கிறார். நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய நாவல், இன்னொரு நாட்டின் சுதந்திர வேட்கையில் பங்கு வகித்தது பெரிய விஷயம்தானே!!!&#8230;பின்னாளில் ஹேராம் திரைப்படம் பார்க்க நேர்ந்த போது, படத்தில் வரும் பல சம்பவங்கள் இந்த நாவலைத் தழுவியிருந்த போது (கமல் அதை ஒற்றுக் கொள்ளாவிடினும்) அந்த நாவலின் வெற்றியை என்னால் உணர முடிந்தது!!! இந்த நாவல்தான் கல்கி வெள்ளி விழா ஆண்டிற்கான போட்டியில் இரண்டாம் பரிசையும் வென்றிருந்த்து!</p>
<p>அவருடைய மற்றொரு நாவலான <strong>”</strong><strong>போராட்டங்கள்</strong><strong>”</strong>, அது தொட்டுச் சென்ற தளங்களோ ஏற்படுத்திய அதிர்வுகளோ சாதாரணமானதன்று. 1960களில் கம்யூனிச சித்தாந்தம் நிலவிய விதமும், அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதில் தலைமைப் பொறுப்பை ஏற்க நடந்த கொலைகள், சீனப் போரின் போது நடைபெற்ற பாராளுமன்ற பேச்சுக்கள், நேருவின் தவறுகள் என பலவற்றையும் தொட்டுச் சென்றது. இத்தனைக்கும் நடுவில் வெறுமனே பரப்பரப்புச் செய்திகளை விரும்பிப் படிக்கும் மக்களும், அதனைத் தரும் செய்தி ஊடகங்களும் இருக்கும் சூழலில் ஒரு நேர்மையான பத்திரிக்கையை நடத்தும்  வேட்கைக் கொண்ட நாயகன், அவனது உணர்வுகள், சந்திக்கும் சோதனைகள் என அந்தக் காலத்திலேயே சொல்லியிருப்பது சற்றே ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது!!!</p>
<p>இதே போன்று பத்திரிக்கைத் தொழில் நடத்துவதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதியிருக்கும் மற்றொரு நாவல்தான் <strong>”</strong><strong>மாயமான்கள்</strong><strong>”</strong>. சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்ட சிலரது மூகமூடியைக் கிழிக்கும் வகையிலும், அதிக அளவில் பெண்ணீயம் பேசும் வகையிலும் இவர் எழுதிய  மற்றொரு நாவல் <strong>”</strong><strong>திருடர்கள்</strong><strong>” </strong>(1976)<strong>.</strong></p>
<p>இந்த நாவல்கள் எந்த அளவிற்கு இவருக்கு வாசகர் வட்ட்த்தைப் பெற்றுத் தந்ததோ அதே அளவிற்கு சில பல சிக்கல்களையும் கொணர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரின் அதிருப்திக்கு இவரது ”போராட்டங்கள்” உண்டாக்கியதென்றால், ”கல்லுக்குள் ஈரம்” நாவல் தன்னுள் விடுதலை உணர்வைத் தூண்டியது என்ற ‘பிரபாகரன்’ அவர்களின் பேட்டி, சிபிஐ, சிஐடி போலீசாரால் இவரை விசாரிக்க வைத்தது.</p>
<p>ஆத்திகம், நாத்திகம், கம்யூனிசம் என்றெல்லாம் சற்றே சர்ச்சையான நூல்களை எழுதிய அதே நல்ல பெருமாள்தான், தனது <strong>”</strong><strong>பிரம்ம ரகசியம்</strong><strong>” </strong>(19820 என்ற நூலின் மூலம் பல்வேறு தத்துவ ஞானிகளின் கருத்துக்கள், சமய அறிஞர்களின் கருத்துக்கள், புத்த மதம் முதல் சைவ சமயம் வரை பல சமயக் கருத்துக்களை, தத்துவங்களை எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் என்பது சற்றே ஆச்சரியமூட்டும் விஷயந்தான். எனக்குத் தெரிந்த இவருடைய மற்ற நூல்கள் <strong>எண்ணங்கள் மாறலாம் </strong>(1976), <strong>வீண் வேதனை </strong>(1950)<strong>, நம்பிக்கைகள் </strong>(1981)  மற்றும்<strong> மருக்கொழுந்து மங்கை</strong></p>
<p>நல்லபெருமாளின் சமூக நாவல்கள் பிரபலம் அடைந்த அளவிற்கு அவரது சிறுகதைகள் பெரிதாகப் பேசப் படவில்லை. மிகச் சாதாரணமாகவே கருதப்பட்டது. அவரது கல்லூரிக் காலத்திலேயே அவர் சிறுகதைகளை எழுத ஆரம்பித்ததோ அல்லது அவருக்கு பெருமை சேர்த்த சமூகச் சாடல்கள் அவரது சிறுகதைகளில் இல்லாததோ அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.</p>
<p>இத்தனை நூல்களை எழுதிய நல்ல பெருமாள் சட்டம் படித்தவர் என்பது பண்பலையில் அவர் கொடுத்த ஒரு நேர்காணலில்தான் எனக்கு தெரிந்தது. காந்தீயக் கொள்கைகளுக்கு தன்னுடைய ”கல்லுக்குள் ஈரத்தில்” குரல் கொடுத்த இதே நல்ல பெருமாள், அதே பேட்டியில் <strong>இந்தக் காலகட்டத்திற்கு காந்தீயக் கொள்கைகள் ஒத்து வராது என்று சொன்னது ஒரு நகை முரணாகவும் இருந்தது</strong>.</p>
<p>ர.சு நல்லபெருமாள் <strong>மொத்தம் 10 சமூக நாவல்கள், 2 சரித்திர நாவல்கள், 1 தத்துவ நூல், 2 சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு சுய முன்னேற்ற நூலினை எழுதியுள்ளார்</strong>. மிகப் பரவலாக அறியப்பட்ட நல்லபெருமாள், 1990க்குப் பிறகு எழுதவில்லை. எழுத வேண்டுமே என்று எழுத முடியாது, எனக்கு அதன் பின் நடை வரவில்லை, அதனால்தான் எழுதவில்லை, எழுத்தாளர்களுக்கு ஒரு சாச்சுரேஷன் பாயிண்ட் வருவது இயற்கை, எனக்கு அது ஏற்பட்டிருக்கலாம் என தைரியமாகத் தன் பேட்டியில் சொன்னது எனக்கு சற்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.</p>
<br />Filed under: <a href='http://nareshin.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>புத்தகம்</a> Tagged: <a href='http://nareshin.wordpress.com/tag/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/'>நல்லபெருமாள்</a>, <a href='http://nareshin.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>புத்தகம்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/510/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/510/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/510/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/510/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/510/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/510/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/510/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/510/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=510&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2010/06/11/%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அங்காடித் தெரு &#8211; திரைப் பார்வை</title>
		<link>http://nareshin.wordpress.com/2010/03/29/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2010/03/29/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Mon, 29 Mar 2010 12:32:40 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=505</guid>
		<description><![CDATA[திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் அல்ல. நம் திரைப்படங்கள் சற்றே தரத்துடனும், பன்முகத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்போ, விருப்பமோ கொண்டிருப்பவர்களா நீங்கள்??? அப்படியெனில் எந்த ஒரு விமர்சனத்தையும், விளம்பரக் காட்சிகளையும் கவனிக்காமல் தைரியமாக அங்காடித் தெரு படத்திற்குச் செல்லுங்கள்!!! ஏனெனில், மிகப் புதிதாய் படத்தின் காட்சிகளைக் காணும் போது ஏற்படு(த்து)ம் அதிர்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!!! ************************************************************************************************************ இவர்கள், தான் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்த வேளை சோற்றுக்கு தந்தையை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=505&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் அல்ல. நம் திரைப்படங்கள் சற்றே தரத்துடனும், பன்முகத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்போ, விருப்பமோ கொண்டிருப்பவர்களா நீங்கள்??? <strong>அப்படியெனில் எந்த ஒரு விமர்சனத்தையும், விளம்பரக் காட்சிகளையும் கவனிக்காமல் தைரியமாக அங்காடித் தெரு படத்திற்குச் செல்லுங்கள்!!! ஏனெனில், மிகப் புதிதாய் படத்தின் காட்சிகளைக் காணும் போது ஏற்படு(த்து)ம் அதிர்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!!!</strong></p>
<p>************************************************************************************************************</p>
<p>இவர்கள், தான் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்த வேளை சோற்றுக்கு தந்தையை எதிர்பார்த்திருந்து காத்திருந்தாலும், பார்த்தவுடன் ஏற்பட்டு விடும் காதலுக்காக 50 ரவுடிகளை அடித்து துவைக்கக் கூடிய மாவீரர்கள் இல்லை!!! சமூகத்தில் புரையோடிப் போன அக்கிரமங்களைக் கண்டு வெகுண்டு, வில்லினின்று புறப்பட்ட அம்பாக ஓரிரு வாரங்களில் எல்லா ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் தீர்த்து சொர்க்க பூமியைப் படைக்கும் பராக்கிரமசாலிகளும் இல்லை!!! ஆனால் இவர்கள் நாயக, நாயகியர்கள்!!!</p>
<p>இவர்களுக்கு வாழ்வில் பெரிய குறிக்கோள்கள் இல்லை, வாழ்வதைத் தவிர! வாழ்வின் அழகியலைப் ப(டி)டைக்க காதலன், காதலி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இல்லை, அந்தக் காதல் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்!!! சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை என்ற கேள்விக்கான விடை தேடலிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவு செய்பவர்கள்!!! இத்தனைக்கும் நடுவில் இவர்கள் மகிழ்ச்சியைக் காண்பவர்கள்!!! இவர்களே நாயகர்கள்!!!</p>
<p>சற்றே நிறைவான சம்பளமோ, கட்டமைக்கப்பட்ட ஏட்டுக் கல்வியோ, ஏதோ ஒன்றின் காரணமாக நம்மால் சற்றே அசுவாரசியத்துடனோ, சிலரால் முகச் சுளிப்புடனோ எளிதில் கடந்து செல்ல முடிகின்ற அல்லது கவனிக்க மறுத்த கடை நிலை மக்களைப் பற்றிய பதிவு இது!!! சினிமா என்பது வெறுமனே வண்ணக் கனவுகளை உருவாக்குபவையோ அல்லது நம்முடைய கற்பனையையோ, நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத காட்சிகளைக் கூடவோ நம் கண் கொண்டு வருபவை மட்டும் அல்ல!!! சில மற(றை)க்கப்படுகின்ற உண்மைகளை, உண்மைகளாகவே காட்டவேண்டுபவையும் கூட என்பதை உணர்த்தும் படம்!!! புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை, உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள படம்!!! முகத்திற்கு நேரெதிராக நின்று பளீரென்று அறைகின்ற உண்மையின் வெப்பம் இவ்வளவு சூடாகத்தான் இருக்கும் போல!!!</p>
<div id="attachment_507" class="wp-caption aligncenter" style="width: 610px"><a href="http://nareshin.files.wordpress.com/2010/03/angadi-theru.jpg"><img class="size-full wp-image-507" title="Angadi Theru" src="http://nareshin.files.wordpress.com/2010/03/angadi-theru.jpg?w=600&#038;h=330" alt="" width="600" height="330" /></a><p class="wp-caption-text">அங்காடித் தெரு</p></div>
<p>படத்தின் கதையென்று ஒன்று தனியாக இருந்தாலும், அனாயசமாக, போகிற போக்கில் வரும் காட்சிகள் வெளிப்படுத்தும் க(வி)தைகள் பல!!! காதலாக, ஒருவர் காலினை ஒருவர் மிதித்து விளையாடும் காட்சியில் ஆரம்பித்து, அதே காதலாக, கால் போன பின் வாழும் வாழ்க்கையில் முடிகிறது திரைப்படம்!!! படத்தில் எங்கும் எதற்கும் தீர்வினைச் சொல்லிவிடவில்லை இயக்குநர்!!! உன்னுடைய ஊரின் முழு உருவம் எது என்று நீ பார்த்துக் கொள் என்று காட்டியிருக்கிறார், அவ்வளவே!!! சென்னையை மட்டும் முன்னிருத்தி இதுதான் தமிழகம் என்று பழகிப் போன மனதிற்கு தெற்கு மாவட்டங்களின் வாழ்க்கையை நமக்கு காண்பித்திருக்கிறார்!!!</p>
<p>அஞ்சலி, பாண்டி தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்(?)! ஒட்டுமொத்தமாக எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள், ஒரிரு காட்சிகளில் மட்டும் வந்தாலும் சரி, படம் நெடுக வந்தாலும் சரி!!! அத்தனை பேரையும் மீறி அஞ்சலியின் நடிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!</p>
<p>நாமல்லாம் வாழுறதுக்கே யோசிக்கனும், விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன், இங்க சிலருக்கு கையில்ல, காலில்ல ஆனா எல்லாருக்கும் வாயும், வயிறும் இருக்கு, இருட்டு குடவுனிலிருந்து ஏசி ஹாலுக்கு செல்வது ’ப்ரமோஷன்’ என சொல்வது என பல இடங்களில் போகிற போக்கில் சொல்லும் வசனங்கள், கருத்துக்கள் மிக அருமை!!! பெரும்பாலும் வேதனைகளை பதிவு செய்திருந்தாலும், ஆங்காங்கு வெளிப்படும் மனிதம், மகிழ்வான தருணங்கள் எல்லாம் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.</p>
<p>படத்தில் குறைகள் இல்லாமலில்லை. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, சற்றே அதிகப்படியான பாடல்கள், எடிட்டிங் என்று பல இருந்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பின் முன் அவை ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன!!!</p>
<p>மிகச் சாதாரணமாக நமக்கு காட்டிவிட்டாலும், இந்தக் கூட்டத்திற்கு நடுவில் காட்சிகளை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகமும் அதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் எந்த அளவு உழைத்திருக்கும் என்ற எண்ணமும் ஏற்படுத்தும் பிரமிப்பு கொஞ்ச நஞ்சமன்று!!! ஒளிப்பதிவு, இசை, நடிகர் நடிகையர்கள் தேர்வு, வசனம் என பல்துறையும் மிக்க் கடுமையாக உழைத்திருப்பதை உணர முடிகிறது. ஒட்டு மொத்தக் குழுவிற்கும் மிகப் பெரிய வணக்கங்கள்!!!</p>
<p>படம் என்னைப் பல விதங்களில் பாதித்திருக்கிறது&#8230;</p>
<p>·         முன்பு போல அந்தக் கடைக்கு மனுஷன் போவ முடியாது, கஸ்டமர்சை மதிக்கவே மாட்டாங்க, சேல்ஸ்ம்மேனுங்க என்று முன்பு போல சொல்ல முடிவதில்லை&#8230;</p>
<p>·         ரங்கநாதன் தெரு போன்ற தெருக்களை சற்றே வித்தியாசமாக பார்க்க வைத்திருக்கிறது&#8230;</p>
<p>·         படத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்ற உந்துதலுக்கும், ஏன் பார்த்தோம் என்ற நிம்மதியின்மைக்கும் இடையே சிக்கி தவிக்க வைத்திருக்கிறது!!!</p>
<p>பிடித்திருக்கு, பிடிக்கவில்லை, கமர்சியல் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் ஒருகாட்சியாவது பார்ப்பவர் மனதில் மெல்லிய சலனத்தையாவது ஏற்படுத்தாமல் விட்டுவிடாது!!! என்னுடைய ஒரே விருப்பம் இது சரவணா ஸ்டோர் போன்ற ஒற்றை அல்லது சில கடைகளில் மட்டுமோ அல்லது, அண்ணாச்சி போன்ற ஒற்றை மனிதர்களின் குரூரம் மட்டுமோ இல்லை. இந்தக் கட்டமைப்பின் பின்னே அரசு எந்திரம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகம், முதலாளிகள் ஏன் சில தொழிலாளிகள் என எல்லாரும் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாய் இருக்கிறார்கள் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே!!!</p>
<p>அசாமுக்கு வேலைக்கு செல்லும் சிறு பெண்ணின் தைரியம், அண்ணன் வேலை பார்க்கும் கடையின் பையை சாமி ஃபோட்டோவிற்கு அருகே மாட்டியிருப்பது, பாலியல் தொந்தரவுக்கிற்கு உள்ளானதற்கு அப்புறம் மிகச் சாதாரணமாக துணி விற்பனையில் ஈடுபடும் நாயகி என அதிர்வுகளை ஏற்படுத்தும் காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஏறக்குறைய முக்கால் படத்தை சொல்ல வேண்டியிருக்கும்!!!</p>
<p><strong>வசந்தபாலன் சார், தலைவணங்குகிறேன். உங்களுக்கு என் வணக்கங்களும் மரியாதைகளும்!!!</strong></p>
<br />Filed under: <a href='http://nareshin.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/'>சினிமா</a> Tagged: <a href='http://nareshin.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/'>சினிமா</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/505/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/505/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/505/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/505/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/505/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/505/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/505/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/505/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=505&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2010/03/29/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2010/03/angadi-theru.jpg" medium="image">
			<media:title type="html">Angadi Theru</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தமிழ்ப் பட(ங்களின்)த்தின் அராஜகம் &#8211; திரைப் பார்வை</title>
		<link>http://nareshin.wordpress.com/2010/01/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2010/01/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Sat, 30 Jan 2010 04:12:00 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=500</guid>
		<description><![CDATA[முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க விரும்பினால் அதைப் பற்றிய விமர்சனத்தை வலைப்பதிவுல படிச்சிட்டு அதுக்கப்புறம் போய் பார்ப்பதுதான் வழக்கம். ஆனா, இப்பவோ, ஒரு படம் பாக்க நினைச்சிட்டா அதுவரைக்கும் வலைப்பதிவுக்குள்ள எட்டிபாக்காம இருக்கனும் போல இருக்கு!!! ஜேம்ஸ்பாண்ட் படத்துல இன்விசிபிள் காரை பாண்ட் ஓட்டுற மாதிரி காட்டுன உடனே பலரும் சைண்ட்டிஸ்ட்டை விட டைரக்டர்ஸ் பயங்கரமா யோசிக்கிறாங்க, கண்டு பிடிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது!!! அதே மாதிரிதான் நம்ம ஊர்லியும், இப்பல்லாம் நம்ம டைரக்டர்சை விட வலைப்பதிவர்கள் பயங்கரமா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=500&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க விரும்பினால் அதைப் பற்றிய விமர்சனத்தை வலைப்பதிவுல படிச்சிட்டு அதுக்கப்புறம் போய் பார்ப்பதுதான் வழக்கம். ஆனா, இப்பவோ, ஒரு படம் பாக்க நினைச்சிட்டா அதுவரைக்கும் வலைப்பதிவுக்குள்ள எட்டிபாக்காம இருக்கனும் போல இருக்கு!!! ஜேம்ஸ்பாண்ட் படத்துல இன்விசிபிள் காரை பாண்ட் ஓட்டுற மாதிரி காட்டுன உடனே பலரும் சைண்ட்டிஸ்ட்டை விட டைரக்டர்ஸ் பயங்கரமா யோசிக்கிறாங்க, கண்டு பிடிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது!!! அதே மாதிரிதான் நம்ம ஊர்லியும், இப்பல்லாம் நம்ம டைரக்டர்சை விட வலைப்பதிவர்கள் பயங்கரமா சிந்திக்கிறாங்க. டைரக்டருக்கு கூட தெரியாத புதுப் புது கோணங்கள், கான்செப்ட்டெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் படம் உண்மையிலியே நல்லாயிருக்கான்னு தெரிஞ்சிக்க ரெண்டு மூணு விமர்சனம் மட்டும் படிச்சிட்டு படத்துக்கு போனோம்னா தீந்தோம், எந்த படத்தைப் பாத்துட்டிருக்கோங்கிற சந்தேகமே வந்துடுது சமயங்கள்ல&#8230;.</p>
<p>டேய், தமிழ்ப் படத்தைப் பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு எதுக்குடா இதெல்லாம் இப்ப சொல்றன்னு கேக்கறீங்களா??? நம்மூரு ஹீரோ பில்டப் படங்கள் பெரும்பாலும் இப்படித்தானே இருக்கும். சொல்ல வந்த்தை வுட்டுட்டு சம்பந்தமே இல்லாம் பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பாங்கள்ல&#8230;அதை நக்கல் பண்ணி வந்திருக்கிற படம்தான் இந்த தமிழ்ப் படம். ஒரு லொல்லு சபாவையே ஹை லெவல்ல எடுத்துருக்காங்க. படம் எடுக்க சொன்னா அராஜகம் பண்ணியிருக்காங்க&#8230;</p>
<p><a href="http://nareshin.files.wordpress.com/2010/01/tpadam.jpg"><img class="aligncenter size-full wp-image-499" title="tpadam" src="http://nareshin.files.wordpress.com/2010/01/tpadam.jpg?w=400&#038;h=393" alt="" width="400" height="393" /></a></p>
<p>ஏற்கனவே பாடல்களும், ட்ரெய்லரும், விளம்பரங்களும் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தாலும் மனதில் இருந்த ஒரே சந்தேகம், படத்தின் ஃப்ளோ எப்படி கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதுதான். ஆனால் மிக கவனமாகவும், அருமையாகவும் படத்தை நடத்திச் செல்கிறார்கள். வரிசையாக கலாய்ப்பது என்று முடிவெடுத்திருந்தாலும், வழக்கமான ஒரு கதை, திரைக்கதை எல்லாம் எழுதி வரும் பல படங்களை விட இதன் ஃப்ளோ நன்றாகவே இருக்கிறது&#8230;</p>
<p>நன்றாக்க் கலாய்த்தாலும், வழமையான மசாலா படங்களுக்கே உரிய எடுத்தவுடன் அமர்க்களமான காமெடி, பில்டப் பாடல், காதல் ஆரம்பம், இடையில் சற்று தொய்வு பின் இடைவேளை வரை அராஜகமான காமெடிகள் என்று முதல் பாதி எப்படி போனது என்பதே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும், இடையிடையே எட்டிப் பார்க்கும் காமெடிகள், கடைசி நிமிடங்களில் மீண்டும் அராஜகங்கள் என கொடுத்த காசுக்கு மேல சிரிக்க வைக்கக் கூடிய ஒரு படத்தைதான் தந்திருக்கிறார்கள்&#8230;.</p>
<p>ஒரு லோ பட்ஜெட் படம் என்றாலும் நிரவ் ஷாவின் கேமிரா, இசை, கலை, எடிட்டிங் அனைத்தும் அப்படி ஒரு உணர்வே ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது. சிவாவே ஒரு காட்சியில் அந்நியன் பாணியில் எருமை மாடுகளை வைத்து கொல்ல முயற்சி செய்யும் போது லோ பட்ஜெட் படத்துலல்லாம் செய்ய மாட்டீங்களா என எருமைகளை கேட்கும் போதுதான் நமக்கே தோன்றுகிறது. அதுவும் எருமைகளை எருமை மாடுகளா என திட்டும் போது சிரிப்பு களை கட்டுகிறது.</p>
<p>இப்படியும் கொல்லலாம் கான்செப்ட், ஃபாமிலி சாங் டிவிடி, சைக்கிளை சுத்தியவுடன் பெரிய ஆளாவது,  காஃபி கொண்டு வருவதற்குள் பணக்காரனாவது, மவுன ராகம் ஸ்டைலில் காதல் சொல்லும் இடம் என்று பல இடங்களில் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.</p>
<p>திரைக்கு பின்னால் சி.எஸ் அமுதன், கண்ணன் (இசை), நீரவ் ஷா(ஒளிப்பதிவு), சந்தானம் (கலை) ஆகியோர் பெரிய பலம் என்றால், திரையில் சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மனோபாலா ஆகியோர் பெரிய பலம். வெண்ணிற ஆடை மூர்த்தி டபுள் மீனிங்கில் பேசும் இடங்களில் காக்கா வர வைத்திருப்பது எல்லாம் தாறுமாறு!!!</p>
<p>வெறும் திரைப்படங்களை மட்டும் கலாய்ப்பார்கள் என்று பார்த்தால், ஹட்ச், வோடாஃபோன், வசந்த் அண்ட் கோ என்று விளம்பரங்களையும் விட்டு வைக்கவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய ஹைலைட், அந்த பரத நாட்டிய சீன். எல்லாராலும் நடனம் ஆட முடியும் என்ற நம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்JJJ. அதைவிட அராஜகம் தப்பு பண்ணா அந்த கையை ஆட்டி நடிப்பானே அந்த தம்பி படத்தை பத்து தடவை பாக்கனும் என்பது, முதல் பில்டப் பாடலில் ”இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் சிவா” என்று சொல்லி சிறிது இடைவெளியில் ”என்று போடுமாறு கேட்டுக் கொண்டார்” என்பது, பெரிய தளபதி, வைஸ் கேப்டன் போன்ற பட்டங்கள், அரசி சினிமா பட்டிக்கு ஏன் கரண்ட், தண்ணீர், ரோடு வசதி எல்லாம் தருவதில்லை என்பதற்கான காரணங்கள் என பல சொல்ல்லாம்.</p>
<p>ஒரு வலைப்பதிவருக்கே உரிய அடிப்படைத் தகுதியான படம் பார்க்கும் போது அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை சில இடங்களில் நம்மால் கணிக்க முடிந்தாலும், காட்சி வரும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது!!! முதல் தடவை பார்க்கும் போது இந்தக் காட்சி, இந்தப் படம் என்பதிலெல்லாம் ரசிகர்கள் அதிக கவனத்தை கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இதற்கு ரிப்பீட்டிவ் ஆடியன்ஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.</p>
<p>சும்மா சொல்லக் கூடாது, ரெண்டரை மணி நேரம் பக்கத்துல உக்காந்து கிச்சு கிச்சு மூட்டி அனுப்புறாங்க!!!</p>
<p><strong>பி.கு:</strong></p>
<p>கஸ்தூரி கண் முன்னாடியே இருக்காங்க!!! சத்தியமா இது ஒரு வித்தியாசமான படந்தான்&#8230;.</p>
<br />Filed under: <a href='http://nareshin.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/'>சினிமா</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/500/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=500&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2010/01/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2010/01/tpadam.jpg" medium="image">
			<media:title type="html">tpadam</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வேட்டைக்காரனும், தமிழ்ப் படமும்!!!</title>
		<link>http://nareshin.wordpress.com/2010/01/07/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2010/01/07/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 07 Jan 2010 00:20:40 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=489</guid>
		<description><![CDATA[மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!! மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=489&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர்</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றது</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’ </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம். </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் <strong>இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ </strong>ஆச்சரியத்துடன் யாராவது </span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஆஹா</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சினி கேட்கும் போது நமக்கும் </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வாவ், சட்டே மேலே எத்னே பட்டன்</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனை</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் <strong>“அதையும் தாண்டி புனிதமானது</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும்</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> </span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன்</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!</span></p>
<p><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><span style="text-align:center; display: block;"><a href="http://nareshin.wordpress.com/2010/01/07/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/"><img src="http://img.youtube.com/vi/QcFn4erIeGA/2.jpg" alt="" /></a></span></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">********************************************************************************* </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே <strong>தமிழ் படம்</strong> என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே <strong>“அந்தக் குழந்தையே நீங்கதான் சார்</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த <strong>சி.எஸ் அமுதன்</strong> என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த <strong>‘தமிழ் படம்</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">!!!</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> <strong>சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர்</strong>, <strong>வெண்ணிற ஆடை மூர்த்தி</strong> மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> </span></p>
<div id="attachment_490" class="wp-caption aligncenter" style="width: 514px"><a href="http://nareshin.files.wordpress.com/2010/01/15902_npadvsinglephoto.jpg"><img class="size-full wp-image-490" title="15902_NpAdvSinglePhoto" src="http://nareshin.files.wordpress.com/2010/01/15902_npadvsinglephoto.jpg?w=504&#038;h=637" alt="" width="504" height="637" /></a><p class="wp-caption-text">செந்தூரப் பூவே சிவா</p></div>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, <strong>அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு</strong> என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், <strong>“இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்க</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">” </span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">எனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்&#8230;.அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து&#8230;இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்&#8230; </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? <strong>இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!</strong></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><strong><br />
</strong></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!!</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் <strong>‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன்</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">பாடல்</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">!!!</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சுனாமியின் பினாமி, </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே, </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில, </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"><a href="http://nareshin.files.wordpress.com/2010/01/tamilpadam.jpg"><img class="aligncenter size-full wp-image-491" title="TamilPadam" src="http://nareshin.files.wordpress.com/2010/01/tamilpadam.jpg?w=549&#038;h=550" alt="" width="549" height="550" /></a></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்&#8230; ஆனால் </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஓ மகசீயா</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்&#8230;)</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"><a href="http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html" target="_blank">http://thenkinnam.blogspot.com/<span style="font-family:Latha;" lang="TA">2010/01/</span>blog-post_<span style="font-family:Latha;" lang="TA">05.</span>html</a></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"><br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">குத்துவிளக்கு</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும், </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">தூண்டில் போட்டு யானை பிடிப்போம்</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வாழும்போதே செத்து முடிப்போம்</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">” </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் <strong>“சூறாவளி</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> பாட்டில் தெரிந்து கொள்ளலாம்&#8230;</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”!!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><strong><span style="font-size:10pt;"> </span></strong></p>
<p><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்</span></p>
<div id="_mcePaste" style="overflow:hidden;position:absolute;left:-10000px;top:0;width:1px;height:1px;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர்</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றது</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’ </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம். </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் <strong>இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ </strong>ஆச்சரியத்துடன் யாராவது </span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஆஹா</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சினி கேட்கும் போது நமக்கும் </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வாவ், சட்டே மேலே எத்னே பட்டன்</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனை</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் <strong>“அதையும் தாண்டி புனிதமானது</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும்</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> </span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன்</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!<br />
</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><a href="http://www.youtube.com/watch?v=QcFn4erIeGA" target="_blank">http://www.youtube.com/watch?v=QcFn4erIeGA</a></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">********************************************************************************* </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே <strong>தமிழ் படம்</strong> என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே <strong>“அந்தக் குழந்தையே நீங்கதான் சார்</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த <strong>சி.எஸ் அமுதன்</strong> என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த <strong>‘தமிழ் படம்</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">!!!</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> <strong>சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர்</strong>, <strong>வெண்ணிற ஆடை மூர்த்தி</strong> மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><img title="?ui=2&amp;view=att&amp;th=12604e774642d2cc&amp;attid=0.1&amp;disp=attd&amp;realattid=ii_12604e774642d2cc&amp;zw" src="http://mail.google.com/mail/?ui=2&amp;ik=81b765b7b3&amp;view=att&amp;th=12604ea4c2e4e855&amp;attid=0.2&amp;disp=emb&amp;realattid=ii_12604e774642d2cc&amp;zw" alt="?ui=2&amp;view=att&amp;th=12604e774642d2cc&amp;attid=0.1&amp;disp=attd&amp;realattid=ii_12604e774642d2cc&amp;zw" /></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, <strong>அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு</strong> என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், <strong>“இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்க</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">” </span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">எனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்&#8230;.அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து&#8230;இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்&#8230; </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? <strong>இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!</strong></span><strong> </strong></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!!</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் <strong>‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன்</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA"> </span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">பாடல்</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">’</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">!!!</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சுனாமியின் பினாமி, </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே, </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில, </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!! </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;">
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><img title="?ui=2&amp;view=att&amp;th=12604e6b345a31d3&amp;attid=0.1&amp;disp=attd&amp;realattid=ii_12604e6b345a31d3&amp;zw" src="http://mail.google.com/mail/?ui=2&amp;ik=81b765b7b3&amp;view=att&amp;th=12604ea4c2e4e855&amp;attid=0.1&amp;disp=emb&amp;realattid=ii_12604e6b345a31d3&amp;zw" alt="?ui=2&amp;view=att&amp;th=12604e6b345a31d3&amp;attid=0.1&amp;disp=attd&amp;realattid=ii_12604e6b345a31d3&amp;zw" /></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்&#8230; ஆனால் </span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">ஓ மகசீயா</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்&#8230;)</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"><a href="http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html" target="_blank">http://thenkinnam.blogspot.com/<span style="font-family:Latha;" lang="TA">2010/01/</span>blog-post_<span style="font-family:Latha;" lang="TA">05.</span>html</a></span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">குத்துவிளக்கு</span></strong><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும், </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">தூண்டில் போட்டு யானை பிடிப்போம்</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வாழும்போதே செத்து முடிப்போம்</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">” </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;"> </span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் <strong>“சூறாவளி</strong></span><strong><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”</span></strong><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA"> பாட்டில் தெரிந்து கொள்ளலாம்&#8230;</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது</span><span style="font-size:10pt;font-family:&amp;" lang="TA">”!!!!</span></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><strong><span style="font-size:10pt;"> </span></strong></p>
<p class="MsoNormal" style="margin-bottom:.0001pt;line-height:normal;"><span style="font-size:10pt;font-family:Latha;" lang="TA">இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்</span></p>
<p><span style="color:#888888;"><br />
</span></p>
</div>
<br />Posted in சினிமா Tagged: சினிமா <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/489/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/489/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/489/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=489&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2010/01/07/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2010/01/15902_npadvsinglephoto.jpg" medium="image">
			<media:title type="html">15902_NpAdvSinglePhoto</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2010/01/tamilpadam.jpg" medium="image">
			<media:title type="html">TamilPadam</media:title>
		</media:content>

		<media:content url="http://mail.google.com/mail/?ui=2&#38;ik=81b765b7b3&#38;view=att&#38;th=12604ea4c2e4e855&#38;attid=0.2&#38;disp=emb&#38;realattid=ii_12604e774642d2cc&#38;zw" medium="image">
			<media:title type="html">?ui=2&#38;view=att&#38;th=12604e774642d2cc&#38;attid=0.1&#38;disp=attd&#38;realattid=ii_12604e774642d2cc&#38;zw</media:title>
		</media:content>

		<media:content url="http://mail.google.com/mail/?ui=2&#38;ik=81b765b7b3&#38;view=att&#38;th=12604ea4c2e4e855&#38;attid=0.1&#38;disp=emb&#38;realattid=ii_12604e6b345a31d3&#38;zw" medium="image">
			<media:title type="html">?ui=2&#38;view=att&#38;th=12604e6b345a31d3&#38;attid=0.1&#38;disp=attd&#38;realattid=ii_12604e6b345a31d3&#38;zw</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மை நேம் ஈஸ் கான் (My name is Khan)</title>
		<link>http://nareshin.wordpress.com/2009/12/18/%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-my-name-is-khan/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2009/12/18/%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-my-name-is-khan/#comments</comments>
		<pubDate>Fri, 18 Dec 2009 01:17:42 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=484</guid>
		<description><![CDATA[மிக யதேச்சையாகத்தான் அந்த ட்ரெய்லரை பார்க்க நேர்ந்தது!!! மழையின் தாக்கம் சென்னை முழுதும் பீடித்திருக்க, பேட்டரி வேலை செய்யாததால் ரிமோட்டின் மீது கடுப்பேறி வேறு வழியில்லாமல் ஒரே சானலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விஜய் டிவியை பார்க்க நேரிட்ட்து. சுமார் பத்து மணி அளவிதான் அந்த ட்ரெய்லரும் ஒளிபரப்பப் பட்டது!!! தமிழ் சானலில், இந்தி நிகழ்ச்சிகள் என்றுமே ஒளிபரப்பப்படாத நிலையில், ஷாருக்கான் தொடர்ச்சியாக இந்தியில் 2 நிமிடங்கள் பேசிய போது இந்தி தெரியாத காரணத்தினால், முதலில் மத்திய [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=484&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மிக யதேச்சையாகத்தான் அந்த ட்ரெய்லரை பார்க்க நேர்ந்தது!!! மழையின் தாக்கம் சென்னை முழுதும் பீடித்திருக்க, பேட்டரி வேலை செய்யாததால் ரிமோட்டின் மீது கடுப்பேறி வேறு வழியில்லாமல் ஒரே சானலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விஜய் டிவியை பார்க்க நேரிட்ட்து. சுமார் பத்து மணி அளவிதான் அந்த ட்ரெய்லரும் ஒளிபரப்பப் பட்டது!!!</p>
<p>தமிழ் சானலில், இந்தி நிகழ்ச்சிகள் என்றுமே ஒளிபரப்பப்படாத நிலையில், ஷாருக்கான் தொடர்ச்சியாக இந்தியில் 2 நிமிடங்கள் பேசிய போது இந்தி தெரியாத காரணத்தினால், முதலில் மத்திய அரசின் ஏதாவது செய்தி விளம்பரமாக இருக்கலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அதன்பின்தான் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தின் ட்ரெய்லர் என்று சொல்லப்பட்டது.</p>
<p>சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே அந்த ட்ரெய்லர் ஓடியது. ஆனால் அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் நீண்ட நேரம் மனதில் நின்றன. தவிர, அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கம், அந்தப்படத்தின் மற்ற விஷயங்களைத் தேடிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது!!!<br />
இந்தி அதிகம் தெரியாத காரணத்தினால் இந்தி சினிமாவின் புதுவரவுகளிலோ, படைப்புகளிலோ நானாக அதிக ஆர்வம் காட்டியதில்லை. இதனாலேயே இந்தப்படத்தின் பெயரை ட்ரெயிலரில் சொன்ன போது எனக்கு அதனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வில்லை. அந்தப் படத்தின் பெயர் <strong>“மை நேம் ஈஸ் கான்”.</strong></p>
<div id="attachment_483" class="wp-caption aligncenter" style="width: 486px"><a href="http://nareshin.files.wordpress.com/2009/12/my-name-is-khan-first-look.jpg"><img class="size-full wp-image-483" title="my-name-is-khan-first-look" src="http://nareshin.files.wordpress.com/2009/12/my-name-is-khan-first-look.jpg?w=476&#038;h=580" alt="" width="476" height="580" /></a><p class="wp-caption-text">My name s Khan</p></div>
<p>ஷாருக்கான் பேசி முடித்த பின்பு, முதலில் தாரே ஜமீன் பரில் வரும் சிறுவனின் சாயலில் ஆட்டிசக் குறைபாடு கொண்ட ஒரு சிறுவனைக் காண்பித்த பொழுது, அமீர்கானைப் போல் ஷாரூக்கானும் அதே மாதிரி படம் எடுக்கிறாரோ என்றுதான் தோன்றியது!!! அந்த சிறுவன்தான் ஷாரூக்கான் என்று காட்டிய பொழுது இதுதான் இரண்டு படத்திற்குமிடையேயுள்ள ஒரு வித்தியாசமோ என்று தோன்றியது. அன்றலர்ந்த மலராக திடீரென்று கஜோல் திரையில் வந்த பொழுது, வயதாக ஆக இவர் மட்டும் எப்படி அழகாகிக் கொண்டே செல்கிறார் என்று தோன்றினாலும், வழக்கமான கமர்சியல் இந்தி படத்திற்குதான் இவ்ளோ பில்டப்பா என்றே தோன்றியது&#8230;&#8230;</p>
<p>ஆனால் அதன் பின் திரையில் வந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் நான் எதிபார்க்காத கோணத்தில் சென்றது. பல்வேறுபட்ட திருப்பங்களைக் கொண்ட படம் இது என்பதை அடுத்த ஒவ்வொரு நொடியும் திரையில் ஓடிய காட்சிகள் சொல்லின. அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் கைது, குண்டு வெடிப்பு, துடிப்பான போலீஸ் அதிகாரிகளின் ஓட்டம் ஆகியவை எல்லா கமர்சியல் படங்களிலும் பார்க்கக் கூடிய ஒன்றெனினும், இது மற்ற படங்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டது என்ற உணர்வை காட்சிகள், அதில் தொக்கி நிற்கும் சில வலிகள் உணர்த்தின. அதிகம் வசனங்களே இல்லாத ட்ரெய்லராக இருந்தாலும், ட்ரெய்லர் முடியும் தருவாயில் இரண்டே இரண்டு வசன்ங்கள் மட்டும் என்னை மெலிதாக உலுக்கியிருந்தன. ஒன்று <strong>Why are you going to Washington? And he replies back I want to meet the president and say something.</strong> வசனத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரை சந்திக்க முயலும் கானின் பயணம் நம்மையும் அவருடனே அழைத்துச் சென்றது. இறுதியில் கானின் <strong>“My name is Khan, and I am not a Terrorist”</strong> என்ற வசனத்தோடு முடியும் போது, அந்த ஒற்றை வரி உணர்த்துகின்ற உணர்வுகள், அதில் மறைந்திருக்குள் பொருட்கள் ஏராளம், ஏராளம்.</p>
<p>சமயங்களில் ட்ரெய்லர்கள் கொடுக்கின்ற எதிர்பார்ப்பை படங்கள் கொடுப்பதில்லை என்றாலும், ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சிகளும் முந்தைய காட்சிகளை விட பரபரப்பாகவும், வெவ்வேறு அர்த்தங்களைச் சொல்லும் கனமான காட்சியாகவும் அமைந்திருப்பது மிகச் சிறப்பு. ட்ரெயிலரிலேயே யார் கேமிராமேன் என்கிற ஆர்வத்தைத் தூண்டியதைத் தேடிப் பார்த்த போது நம் <strong>ரவி.கே சந்திரன்</strong> எனும் போது சற்றே பெருமிதமாகத்தான் இருந்த்து. ஆனால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது இது <strong>கரண் ஜோகருடைய</strong> படம் என்பதுதான்&#8230;&#8230;நல்லவேளை அவர் தயாரிப்போடு நின்றுவிட்டார், இயக்கத்தில் நுழையவில்லை.</p>
<p>இந்த விஷயங்களால் பெரிதும் கவரப்பட்டு சற்று தேடிய போது கிடைத்த செய்திகள் இன்னும் ஆர்வமூட்டின. பழைய பேட்டிகளில் ஷாரூக்கான் இந்தப்படத்தைப் பற்றி சொன்னது, இந்தப்படம் மூன்று முக்கிய விஷயங்களைக் கொண்டுள்ளது, அவை காதல், இஸ்லாம், ஆட்டிஷம்!!!. இந்தப்படம் பேசும் இன்னொரு விஷயம் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிற்கும், மேறகத்திய நாடுகளுக்குமிடையேயான உறவு மறிய விதம்தான். இது ஒன்றும் ஒரு ஊனமுள்ள மனிதனின், அவனுடைய ஊனத்திற்கெதிரான போராட்டமல்ல, மாறாக ஒரு ஊனமுள்ள மனிதனின், இந்த உலகில் நிரம்பியுள்ள ஒரு ஊனத்திற்கெதிரான போராட்டம். இதில் நாங்கள் எந்த பக்கமும் பேசவில்லை&#8230;நாங்கள் சொல்ல வருவதெல்லாம், இந்த உலகில் மொத்தம் இருவர் மட்டுமே!!! நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள். இதில் நல்ல இந்து, கெட்ட இந்து என்றோ, நல்ல கிறித்தவன், கெட்ட கிறித்தவன் என்றோ எதுவும் இல்லை. ஒருவன் நல்லவனாய் இருப்பதற்கும், கெட்டவனாய் இருப்பதற்கும் மதம் அளவுகோல் இல்லை, மனிதாபிமானம் மட்டுமே!!!</p>
<p>படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இந்த வார்த்தைகள் மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியது!!! என்னுடைய எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்&#8230;இதுவரை இந்த வலிகளை, உணர்வுகளை இந்திய வர்த்தக சினிமாவில் ஒழுங்காக பதிவு செய்யப்படவில்லை, பதிவு செய்த சில படங்களோ முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை&#8230; Khuda ke liye, Ramchand Pakistani, A mighty heart, Train to Pakistan போன்ற படங்களோ முழுமையாக அனைவரையும் போய் சேர்ந்த்தா என்பது சந்தேகமே!!! நியுயார்க், ஃபன்னா மற்ற சில வர்த்தக சினிமாக்களோ சொல்லிய விதமோ சாதாரண பார்வையாளர்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது. ஷாரூக்கான் என்ற மிகப்பெரிய பிராண்டின் மூலாமாகவும், கரண்ஜோகர் என்ற பெரிய வெற்றிப்பட வியாபாரியின் மூலமாக வரும் இந்தப்படம் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா??? <strong>பிப்ரவரி 12 வரை பொறுத்திருங்கள்!!! </strong></p>
<p><strong>பின்குறிப்பு:</strong><br />
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்க சென்ற போதுதான் அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் மோசமாக நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைகள் அனைவருக்கும் ஞாபகம் வரலாம்&#8230;தனது படத்தில் வரப்போகும் காட்சியை ஒத்த ஒரு சம்பவம் அங்கே அரங்கேறியது, இந்தப் படத்திற்கான விளம்பரமே என்று கூட சில குரல்கள் எழுந்தன. ஆனால் படமோ, அந்த சம்பவமோ இதன் ஒட்டு மொத்த அடிப்படையாக, ஒரு ஒற்றை பெயர் ஒரு மனிதனின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையையும், மனிதாபிமானத்தையும், அர்ப்பணிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் அந்தச் சூழலை, அவலத்தை என்னவென்று சொல்வது???</p>
<br />Posted in சினிமா Tagged: சினிமா <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/484/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/484/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/484/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=484&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2009/12/18/%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-my-name-is-khan/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/12/my-name-is-khan-first-look.jpg" medium="image">
			<media:title type="html">my-name-is-khan-first-look</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்&#8230;&#8230;</title>
		<link>http://nareshin.wordpress.com/2009/10/06/%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2009/10/06/%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 06 Oct 2009 02:34:25 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=472</guid>
		<description><![CDATA[சாட்டர்ஜியும், நீல்சிங்கும் அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்&#8230; அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்&#8230; உடனே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=472&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#000000;"><strong>சாட்டர்ஜியும், நீல்சிங்கும்</strong> அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்&#8230;</span></p>
<p><span style="color:#000000;">அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்&#8230;</span></p>
<p><span style="color:#000000;">உடனே அது தனது முதல்நிலை நிர்வாகக் குழுவிற்கு செலவினைக் குறைக்க ஆலோசனை கேட்டு அறிக்கை விடுகிறது. ஆலோசனைக் குழுவோ, இந்த இரு நிர்வாகிகளின் பொறுப்பில் அச்செயலை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான திட்டத்தைக் கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறது&#8230;.இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்&#8230;.</span></p>
<p><span style="color:#000000;"><strong>இடம்: ஒரு ஐந்து நட்சத்திர விடுதி!!!</strong></span></p>
<p><span style="color:#000000;">நீல்சிங்ஜி, நாளைக்கு வெள்ளிக்கிழமை</span></p>
<p><span style="color:#000000;">ஆமா சாட்டர்ஜி சார், இன்னிக்கு வியாழக்கிழமை!!!</span></p>
<p><span style="color:#000000;">கடுப்பேத்தாதீங்க நீல்சிங்ஜி, நாளைக்கு நாம திட்டத்தைக் கொடுக்க வேண்டிய கடைசி நாள், இன்னும் உருப்படியா நாம ஒண்ணும் செய்யலை&#8230;.</span></p>
<p><span style="color:#000000;">என்ன பண்றது சாட்டர்ஜி சார், இவ்ளோ கஷ்டமான விஷயத்தை நம்மளை மட்டும் தீர்த்து வைங்கன்னா நாம என்ன பண்றது? எல்லாரும் சேந்து செலவு பண்ணுவாங்களாம், ஆனா செலவு குறைக்கறது எப்படிங்கறதை மட்டும் நாம ரெண்டு பேருந்தான் சொல்லனும்னா நாம என்ன செய்ய முடியும்? இடியட்ஸ்&#8230;.</span></p>
<p><span style="color:#000000;">சரி, சரி விடுங்க, சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லி ஆளை அனுப்பிட்டீங்களா???</span></p>
<p><span style="color:#000000;">ஓ, அப்பவே ஆர்டர் பண்ணிட்டேன், சரக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், ஆனா இந்தப் பாழாப் போன திட்டந்தான் வரமாட்டேங்குது&#8230;..அய்ய்ய்யோ, சட்டர்ஜி சார், சரக்கு, சைட் டிஸ் எல்லாம் ஆர்டர் பண்ணேன், ஆனா இந்த ஊறுகாயை மறந்துட்டேனே!!!</span></p>
<p><span style="color:#000000;">எதையோ யோசித்துக் கொண்டிருந்த சட்டர்ஜியின் முகத்தில் திடீரென்று பல்பு எரிந்தது&#8230;&#8230;நீல்சிங்ஜி ஒரு ஐடியா!!! உடனே நம்ம ஆட்கள் எல்லாருடைய பயணத் திட்டத்துலியும் ஒரு மாற்றம் பண்ணிடலாம்&#8230;முதல் கட்டமா, நம்ம ஆட்கள் யாரும், ரஷ்யா, நார்வே, கனடா, ஸ்வீடன், ஆப்பிரிக்கா இங்கல்லாம் போகக் கூடாதுன்னு அறிவிச்சிரலாம்!!!</span></p>
<p><span style="color:#000000;">நீல்சிங் புரியாமல் முழிக்க, சாட்டர்ஜியோ மொபைல் போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்கு போடுகிறார். நீல்சிங்ஜி, இப்பிடி பண்ணா மாசம் ஒரு கோடி செலவு கம்மியாவும்பா!!!</span></p>
<p><span style="color:#000000;">ஒரு கோடிங்கிறது ரொம்ப சின்ன அமவுண்ட்டு சாட்டர்ஜி சார்!!! சரி, வழக்கமா நம்மாளுங்க பிஸினஸ் க்ளாஸ்லதான் போவாங்க, அதுனால அமவுண்ட்டுல இன்னும் ஒரு 30% சேத்துக்கோங்க&#8230;.</span></p>
<p><span style="color:#000000;">கரெக்ட், அது மட்டுமில்ல, வழக்கமா நம்மாளுங்க வெளிநாடு போனா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவாங்க&#8230;அதுனால அதையும் கொறைச்சா மாசம் ரெண்டு கோடி வருது&#8230;அப்ப வருசத்துக்கு அப்ராக்ஸிமேட்டா 25 கோடி செலவு கம்மியாகும்!!!</span></p>
<p><span style="color:#000000;">ம்ம்ம், ஆனா 25 கோடி ரொம்ப கம்மியாச்சே?</span></p>
<p><span style="color:#000000;">ஆமால்ல,&#8230;&#8230;&#8230;&#8230;. ஒண்ணு பண்ணுங்க, நீங்க வோர்ல்டு மேப்பை எடுத்துட்டு வாங்க, நான் லேப்டாப்பை எடுக்கறேன், இன்னும் சில நாட்டைச் சேத்தலாம்&#8230;</span></p>
<p><span style="color:#000000;">ம்ம்ம், ஆங், ஜப்பானை சேத்துங்க, அப்புறம் சீனா, கொரியா, இத்தாலி&#8230;.சுவிட்சர்லாந்து</span></p>
<p><span style="color:#000000;">யோவ் அறிவிருக்கா? சுவிட்சர்லாந்தை சேத்தச் சொல்றீங்க, அப்புறம் வெயில் காலத்துல நாம எங்க போறதாம்? இந்த சுவிட்சர்லாந்து, தாய்லாந்துலாம் சேத்த வேணாம்&#8230;வேணும்னா சிங்கப்பூர், மலேசியா, துபாய்லாம் சேத்துக்கலாம்&#8230;.</span></p>
<p><span style="color:#000000;">ஆனா சட்டர்ஜி சார், இங்கல்லாம் நம்மளோட டெவலப்மெண்ட்சுக்கு ஏத்த மாதிரி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கே?</span></p>
<p><span style="color:#000000;">நீல்சிங்ஜி, அதெல்லாம் கம்பெனியோட தலையெழுத்து!!! நமக்கென்ன வந்துது? நாம இந்த திட்டத்தை சொல்ற மாதிரி சொன்னா, நாம நல்லவங்களா போயிடலாம், இப்போதைக்கு அடுத்தா வாரம் நாம ஆப்பிரிக்கா போக வேண்டிய திட்டத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த ஊருக்கெல்லாம் போறதுல எனக்கு முன்னமே புடிக்கலை, இதை சாக்கா வெச்சு கட் பண்ணிட்டம்னா நமக்கு நல்ல புகழ் கிடைக்கும், &#8230;இப்ப எக்சல்ல கணக்கு போடுங்க&#8230;கூட வேணும்னா இன்னும் நிறைய நாடு சேத்திக்கலாம், ஆனா நம்ம டார்கெட் 200 கோடி வருசத்துக்கு சேமிக்கிற மாதிரி கணக்கு காமிக்கனும் நாளைக்கு, என்ன சொல்றீங்க?</span></p>
<p><span style="color:#000000;">சூப்பர் ஐடியா சட்டர்ஜி சார்!!!</span></p>
<p><span style="color:#000000;">ஓகே, நான் சொல்ற நாட்டையெல்லாம் சேத்துங்க&#8230;</span></p>
<p><span style="color:#000000;">டொக் டொக்</span></p>
<p><span style="color:#000000;">என்ன அது?</span></p>
<p><span style="color:#000000;">நாம ஆர்டர் பண்ண சரக்குதான் வந்திருக்கு, ஆனா ஊறுகாய்தான் மறந்துட்டேன்&#8230;</span></p>
<p><span style="color:#000000;">பராவாயில்லை, பராவாயில்லை விடுங்க, அதான் திட்டமே ரெடியாயிருச்சே, இனிமே எதுக்கு ஊறுகாய்?</span></p>
<p><span style="color:#000000;">&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</span></p>
<p><span style="color:#000000;"><strong>அது சுமார் 15 வருடங்களேனும் முந்தைய காலகட்டம். பொருளாதரச் சீர்திருத்தக் கொள்கையால் பல இந்திய நிறுவனங்கள் புதுப்புது போட்டிகளையும் சவால்களையும் சந்தித்துக்கொண்டிருந்தன. இதனை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. வாகனதயாரிப்புத் துறையில் இருந்த மாருதிசுசூகி நிறுவனமும் அப்போது இதே வகையானச் சவாலைத்தான் சந்தித்தது. </strong></span></p>
<p><span style="color:#000000;"><strong>பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் விற்பனையை / சேவையை அதிகரிக்க இரு வகையானச் தத்துவங்களைக் கையாள்வார்கள். ஒன்று காம்பிடிட்டிவ் அட்வாண்டேஜ் (</strong><strong>Competitive advantage – </strong><strong>தனது பொருளை / சேவையை மற்றவையுடன் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுபவை), மற்றொன்று ப்ரடக்டிவ் அட்வாண்டேஜ் (</strong><strong>Productive advantage – </strong><strong>மற்ற பொருட்களை விட தனது பொருட்களை குறைந்த விலையில் விற்றல்). விலையைக் குறப்பது என்றால் சும்மாவாக குறைத்து விடவிடியாது. </strong></span></p>
<p><span style="color:#000000;"><strong>தனது வாகனங்களை குறைந்த விலைக்கு விற்க மாருதி நிறுவனம் அமல்படுத்திய முதல் விஷயம் லீன் மேனேஜ்மெண்ட் (</strong><strong>Lean management). </strong><strong>இந்த முறையில், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் அனைத்து பொருட்கள், செயல்கள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர் – அதன் தேவை என்ன, செலவு என்ன, எவ்வாறு குறைக்க முடியும் என்று. இந்த முறையில் அவர்கள் மாற்றம் ஏற்படுத்திய முதல் விஷயம் – ஒரு தொழிலாளி அசம்ப்ளிங் யூனிட்டில் வேண்டிய டூல்சை எடுக்க நடக்க வேண்டிய தூரத்தை 15 அடிகளிலிருந்து 6 அடியாகக் குறைத்தனர் (இதற்காகச் செலவு செய்து, ராக் சிஸ்டத்தை இடம் மாற்றி, அதனுடன் ஒரு கண்வேயர் சிஸ்டத்தை இணைத்தார்கள்). மிகச் சாதாரணமாகக் காணப்படும் இந்தச் செயலின் மூலம் அவர்கள் அடைந்த பயன், ஒரு நாளில் 20 நிமிடங்களை அவர்களால் சேமிக்க முடிந்தது. இந்த 20 நிமிடங்களில் அவர்கள் கூடுதலாக இரண்டு கார்களை தயாரித்தனர் (மாசம் சுமாராக 60 கார்கள் – ஒரு காருக்கு அடிப்படை லாபம் ரூபாய் 20,000 எனில், அதே நிலையானச் செயல்களுக்கு அவர்கள் அடைந்த கூடுதல் லாபம் (60*20000*12) வருடத்திற்கு ரூ 14,400,000 (ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம்). அப்படி ஆரம்பித்த அவர்களது சீர்திருத்தம், வெண்டார் மேனேஜ்மெண்ட், டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் என்று பல தளங்களுக்கும் கொண்டு சென்றதன் விளைவுதான், குறைந்த விலையில் அவர்களால் காரினை விற்க முடிந்தது.</strong></span></p>
<p><span style="color:#000000;">&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;</span></p>
<p><span style="color:#000000;">ஆக ’காஸ்ட் கட்டிங்’ என்ற இந்த தாரக மந்திரம் இந்திய துணைக் கண்டத்தின் நிறுவனங்களில் ஒன்றும் புதிய விஷயம் இல்லை. சில நாட்களாக காணமல் போயிருந்த இந்த தாரக மந்திரம் மீண்டும் பழைய உத்வேகத்துடன் பலருடைய வாயிலிருந்தும் உதிரத்துவங்கியிருக்கிறது. ரிசஷன், பொருளாதார மந்தம் என்று பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை என்றாலும், நிறுவனங்களில் மட்டுமே உதிர்க்கப்பட்ட இந்த மந்திரத்தை இந்த முறை பல அரசியல்வாதிகளும் உதிர்த்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்&#8230;</span></p>
<p><span style="color:#000000;">காஸ்ட் கட்டிங் என்ற தாரக மந்திரத்தை அரசியல்வாதிகள் உதிர்த்தாலும், அதனைத் தொடர்ந்து செய்த காமெடிதான், இதுவரை எந்த திரைப்படத்திலும் வந்த்தை விட மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது&#8230; செலவுகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கை தனது அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளும்படியும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது இது தவிர பிரணாப் கேட்டுக்கொண்ட இன்னொரு விஷயம், அமைச்சர்கள் தங்குவதும், செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்துவதையும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்பதுதான், ஏனெனில் அது தேவையற்ற செலவு என்பதுதான் காரணமாம்!!! அப்படி என்றால் இத்தனை நாள் அத்தகைய தேவையற்ற செயல்கள்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்வி யாரும் கேட்கவுமில்லை, அதற்கு பதிலுமில்லை.</span></p>
<p><span style="color:#000000;">அறிவிப்பு வந்தவுடன் சொல்லி வைத்தாற் போன்று சசி தாரூரும், எஸ்.எம். கிருஷ்ணாவும் தங்களது விடுதி அறையை காலி செய்து விட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜாகையை மாற்றினார்கள்&#8230; அவர்களுக்கென்று அரசு மாளிகை இருக்கும் போது இத்தனை நாள் ஏன் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!! சரி போனாவர்கள் சும்மா சென்றார்களா? அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பொழுது சொந்த செலவிலதான் தங்கினோம் என்றும், இருந்தும் பிரணாப்ஜியின் வேண்டுகோளுக்காக காலி செய்கிறோம் என்று அறிக்கை வேறு!!! எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சொந்த காசுன்னா யாரு சொன்னா என்னான்னு அங்கேயே தங்கலாமே!!! எதற்காக இதை செலவைக் கம்மி பண்ணும் விஷயத்தில் செய்தியாகக் கொண்டு வரவேண்டும்? இதுதான் போகட்டும் என்றால், இந்த வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நார்வேக்கு போறதா இருந்த பயணத்தை ரத்து செய்கிறேன்னு பெருமையா அறிக்கை விடுகிறார்!!! எனக்கு தலையே சுத்துது, இந்தியாவோட பஞ்சாயத்து முறைக்கும், நார்வேக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே கூவத்தை சுத்தம் பண்ண ஐடியா கற்றுக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிற்கு சுற்று பயணம் சென்று வந்த நம்மாட்கள் காதில் இது போன்ற ஐடியாக்கள் விழுந்தால் என்னாவது? </span></p>
<p><span style="color:#000000;">என்னதான் நகைச்சுவைக்கென்று தனித்தனி சானல்கள் வந்தாலும் அரசாங்கத்தின் செய்திகளில் அல்லது அறிவுப்புகளில் தருகின்ற காமெடிக்கு இணையே இல்லைதான். கூட்டணி அரசு என்பதால் ஒன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு காமெடி செய்வதில் மாநில திமுக அரசோ அல்லது மத்திய காங்கிரசு அரசோ சளைப்பதில்லை&#8230; மத்திய அரசுக்கு செலவுகள் அதிகமாகிறது என்று அமைச்சர்களை விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யுங்கள் என்று பிரணாப் சொன்னதன் மூலம் தமிழ் செய்தி ஊடகங்கள் உட்பட அனைத்தும் அவரை மொய்த்ததை காணப் பிடிக்கமாலோ என்னமோ, மாநில அரசின் அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் வேலை வெட்டியை விட்டு விட்டு கருத்தரங்கு நடத்துகிறார்கள், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக விருதினை வழங்குகிறார்கள், உலகத் தமிழ் மாநாடு நடத்துப் போகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்&#8230;</span></p>
<p><span style="color:#000000;"><strong>தாமதமாக செயல்படுத்திவருவதால் பொதுத்துறையின் 54 திட்டங்களில் (தெர்மல் மற்றும் ஹைட்ரோ) ஏற்பட்டுள்ள நட்டம் மட்டுமே சுமார் ரூ 29,000 கோடிகள். இந்த லட்சணத்தில்தான், இன்னும் வாழ்க்கைத்தரத்தில் மற்ற முன்னேறிய மாநிலங்கள் அளவுக்கு முன்னேறாத உத்திரபிரதேசத்தில் ரூ 2,500 கோடிக்கு சிலைகளை அமைக்கும் திட்டம் கனஜோராக நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் செலவை ஈடுகட்ட, அமைச்சர்களிடமிருந்து மட்டுமல்ல எல்லாரிடமிருந்தும் சம்பளத்தில் 20% வாங்கினாலும் வாங்குவார்கள் (ஆனால் அமைச்சர்களிடம் சொன்னது போல் கண் துடைப்பாக இல்லாமல், நம்மிடம் உண்மையாக வாங்கி விடுவார்கள்)</strong></span></p>
<p><span style="color:#000000;">என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை. தப்பித்தவறி தெளிவடைந்து விடக் கூடாது என்றுதானோ என்னமோ பல விஷயங்களில், அரசுக்கும், பயனாளர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியே இருக்கிறது&#8230;&#8230;காஸ்ட் கட்டிங் என்ற விஷயத்தில் மாருதி முதல் இன்றைய நேனோ வரை பல நிறுவனங்கள் முன்னுதாரணமாக இருந்தது மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பொருளாதார்ச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய ஒருவருடைய தலைமையில் அமைந்த ஒரு அரசில்தான் இது போன்ற பொறுப்பற்ற, விளம்பரத்தை மட்டுமே தேடுகின்ற, ஆதாயமளிக்காத வெட்டி விஷயங்கள் நடந்தேறுகின்றன என்பது வேதனையை மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது&#8230;.</span></p>
<p><span style="color:#000000;"><strong><span style="color:#888888;">தொடர்புடைய பதிவு:</span></strong></span></p>
<p><span style="color:#000000;"><a href="http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/">http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/</a> </span></p>
<br />Posted in அரசியல் Tagged: அரசியல் <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/472/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/472/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/472/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=472&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2009/10/06/%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அட்டென்ஷன் டூ பீட்டர்ஸ்&#8230;&#8230;&#8230;..</title>
		<link>http://nareshin.wordpress.com/2009/09/17/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2009/09/17/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 17 Sep 2009 03:00:43 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[காமெடி]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=462</guid>
		<description><![CDATA[இந்த மடலும், மெயிலில் வந்தது..சும்மா சொல்லக் கூடாது அனுபவிச்சு எழுதியிருக்காங்க&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.. எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் &#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211; எப்ப பாரு, கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரிவாங்க&#8230; (அவங்க சுகாதாரமா இருக்காங்களாமாம்!) வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க (இந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்னு பெரிய கம்பெனியில வேலை பாக்குறவனுங்க, பரங்கிமலை ஜோதி, விஜயா தியேட்டரு மாதிரி மொக்கை தியேட்டருல கூட டேகை கழட்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=462&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#000000;">இந்த மடலும், மெயிலில் வந்தது..சும்மா சொல்லக் கூடாது அனுபவிச்சு எழுதியிருக்காங்க&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;..</span></p>
<p><span style="color:#000080;"><strong>எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்</strong></span><br />
&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p><span style="color:#000000;">எப்ப பாரு, கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரிவாங்க&#8230;</span><span style="color:#800000;"> (அவங்க சுகாதாரமா இருக்காங்களாமாம்!)</span></p>
<p><span style="color:#000000;">வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க</span> <span style="color:#800000;">(இந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்னு பெரிய கம்பெனியில வேலை பாக்குறவனுங்க, பரங்கிமலை ஜோதி, விஜயா தியேட்டரு மாதிரி மொக்கை தியேட்டருல கூட டேகை கழட்ட மாட்டாங்களே அந்த மாதிரி!!!!!) ..<br />
(10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)</span></p>
<p><span style="color:#000000;">கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க..</span><span style="color:#800000;">(நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)</span></p>
<p><span style="color:#000000;">குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது&#8230;</span><span style="color:#800000;"><span style="color:#000000;">.</span>(பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்களேன்!)</span></p>
<p><span style="color:#000000;">கையேந்தி பவன்ல கூட கிரடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க&#8230;</span><span style="color:#800000;"> (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)</span></p>
<p><span style="color:#000000;">சுத்தத்தைப் பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க!</span> <strong><span style="color:#800000;">(வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)</span></strong></p>
<p><span style="color:#000000;">எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல, டாலர்ல யோசிச்சி &#8220;ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்&#8221;னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. </span><span style="color:#800000;"><strong>(ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)</strong></span></p>
<p><span style="color:#000000;">தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு &#8220;எக்ஸ்சூஸ்மீ&#8221; ன்னு சொல்றது..</span><span style="color:#800000;"><span style="color:#000000;">.</span>(அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)</span></p>
<p><span style="color:#000000;">&#8220;செளக்கியமா&#8221;ன்னு கேக்காம.. &#8220;ஹாய்&#8221;ன்னு சொல்றது, &#8220;லட்ச&#8221;த்துக்கு பதிலா.. &#8220;மில்லியன்ல&#8221; சொல்றது, தயிருக்கு பதிலா.. &#8220;யோகர்டு&#8221;ன்னு சொல்றது, &#8220;ஹய்வே&#8221;க்கு பதிலா &#8220;ஃப்ரீவே&#8221;ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க!</span> <span style="color:#800000;">(இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)<br />
</span><br />
<span style="color:#000000;"><span style="color:#000000;">சா</span>ப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா &#8220;கோக்கோ (அ) பெப்சியோ&#8221; இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது!</span> <span style="color:#800000;"><strong>(சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)<br />
</strong></span><br />
<span style="color:#000000;">சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. &#8220;தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா&#8221; ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! </span><span style="color:#800000;">(வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)</span></p>
<p><span style="color:#000000;">வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி&#8230; அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது..</span><span style="color:#800000;"><strong> (யப்பா.. கொடுத்த பணம், டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல! இதுல வர்றப்பவே ஹெட்ஃபோனு, டிஷ்யூ பேப்பருல்லாம் சுட்டுட்டு வந்துடறது)</strong></span></p>
<p>நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடுவாங்க&#8230;.</p>
<p><span style="color:#000000;">கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு&#8230;<br />
<strong>எதை சொல்ல வந்தாலும்.. &#8220;இப்படிதான் துபாய்ல&#8230;&#8221;, &#8220;இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப&#8230; &#8221; ன்னு ஆரம்பிப்பாங்க!!</strong></span></p>
<br />Posted in காமெடி Tagged: காமெடி <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/462/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/462/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/462/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=462&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2009/09/17/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%82-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ்</title>
		<link>http://nareshin.wordpress.com/2009/09/15/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e2%80%93-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/</link>
		<comments>http://nareshin.wordpress.com/2009/09/15/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e2%80%93-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 15 Sep 2009 02:28:09 +0000</pubDate>
		<dc:creator>நரேஷ்</dc:creator>
				<category><![CDATA[சாதனை]]></category>

		<guid isPermaLink="false">http://nareshin.wordpress.com/?p=447</guid>
		<description><![CDATA[டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டி  என்னதான் மிகப் பெரிய ஒன்றாக இருந்தாலும், வருடா வருடம் நடைபெறும் போட்டி என்பதால் அதில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வே. நேற்று (14.09.09) நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வென்று இந்த வருடக் கோப்பையை கிம் கிளிஸ்டர்ஸ் கைப்பற்றியதும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்திருக்கக் கூடும்….. கிளிஸ்டர்ஸுக்கு இந்த வெற்றி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2005ல் இதே யுஎஸ் ஓபன் கோப்பையை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=447&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டி  என்னதான் மிகப் பெரிய ஒன்றாக இருந்தாலும், வருடா வருடம் நடைபெறும் போட்டி என்பதால் அதில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வே. நேற்று (14.09.09) நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வென்று இந்த வருடக் கோப்பையை <strong>கிம் கிளிஸ்டர்ஸ் </strong>கைப்பற்றியதும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்திருக்கக் கூடும்<strong>…..</strong></p>
<p>கிளிஸ்டர்ஸுக்கு இந்த வெற்றி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2005ல் இதே யுஎஸ் ஓபன் கோப்பையை வென்றவர்தான். ஆனால் இந்த இரண்டு வெற்றிகளுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஏன் இதுவரை நடந்த அத்தனை போட்டிகளையும், சாதனைகளையும் விட இந்த வெற்றிக்கு பின் ஒரு பெருந் தனிச்சிறப்பு இருக்கிறது. ஆம், இந்த போட்டியின் வென்றதன் மூலம் 1980 க்கு <strong>பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ‘அம்மா’ என்கிற வார்த்தைதான்</strong> இந்த வருட வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் தனிச் சிறப்பு (முதல் வைல்டு கார்டு சேம்பியனும் கூட)</p>
<p>எந்த ஒரு ஆணுடைய வாழ்விலும் திருமணமோ, இல்லற வாழ்வில் சம பங்கு வகித்தாலும், குழந்தைகளின் வரவோ அவனது முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை திருமணம் என்கிற விஷயமே பலரது வாழ்வில் தடைக் கல்லாக இருக்கக் கூடிய சமூக அமைப்புதான் நிலவுகிறது. இந்த அமைப்புதான் சினிமா போன்ற துறைகளில், தனக்கு பேத்தியோ அல்லது பேரனோ வந்தாலும் அந்த ஆணை இன்னொரு பெண்ணுடன் டூயட் பாடவைத்து அழகு பார்க்கும் சமூகம், 18 வயதிலேயே திருமணம் செய்தால் கூட, பெண்ணை துறையை விட்டே விலக்கிவைக்கிறது.</p>
<p>திருமணம் என்கிற விஷயமே இந்த நிலையில் இருக்கும் போது, குழந்தை விஷயத்தைச் சொல்லவா வேண்டும். தகவல் தொழில் நுட்பம் போன்ற நிறுவனம் சார்ந்த வேலைகளுக்குச் செல்லக் கூடிய பெண்கள் கூட, இயற்கையின் இந்த படைப்பு முறையின் மூலம் தங்களது கேரியர் வாழ்க்கையில் சின்னச் சின்னச் தியாகங்களோ அல்லது ஒட்டு மொத்தமாக விட்டுக் கொடுக்கவேண்டியச் சூழலே இருந்து வருகிறது. அந்தக் காலத்தைப் போன்று பெண்கள் பலசாலிகளாக இல்லை (அந்தக் காலத்தைப் போன்று ஆண்களும் பலசாலிகளாக இல்லையெனினும், அதை யாரும் சொல்வதில்லை) என்ற அங்கலாய்ப்புகளை கேட்கின்ற அதே சூழலில்தான் தனது ஒன்பதாவது மாதம் வரையிலும் வேலைக்குச் சென்று கொண்டும், குழந்தை பெற்ற பின்பு மிகக் குறைந்த காலத்திலேயே அலுவலகத்திற்கு திரும்பி, அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் இடையே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகிறது….</p>
<p>இப்படி சமூகமும், இயற்கையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முட்டுக்கட்டைகளுக்கு நடுவில், டென்னிஸ் போன்ற உடல் வலு அதிகம் தேவைப்படுகின்ற ஒரு துறையில் கலந்து கொண்டு, அதுவும் குழந்தை பிறந்த இரண்டு வருடங்களிலேயே இந்தக் கோப்பையை வென்றது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனைதான். தனது அப்பா ஒரு கால்பந்து வீரராகவும், அம்மா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாகவும் இருந்ததாலேயே, கால்பந்து வீர்ர்களின் உறுதியான கால்களும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களின் வளைந்து கொடுக்கும் உடலமைப்பும் கொண்டுள்ளார் என்று புகழப்பட்ட கிளிஸ்டர்ஸ், அதே உத்வேகத்தை குழந்தை பெற்ற பின்பும் கொண்டு வந்திருப்பது அரிய விஷயமே!!!!</p>
<div id="attachment_451" class="wp-caption aligncenter" style="width: 610px"><img class="size-full wp-image-451" title="Untitled" src="http://nareshin.files.wordpress.com/2009/09/untitled.jpg?w=600&#038;h=200" alt="கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)" width="600" height="200" /><p class="wp-caption-text">கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)</p></div>
<p>ஏற்கனவே 2003ல் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், 2005ல் யுஎஸ் ஒபன் முதற்கொண்டு, திருமணத்திற்கு முன் 34 கோப்பைகளை வென்றிருந்தாலும், குழந்தை பெற்ற பின் தனது விளையாட்டுத் திறனையும்,  வாழ்க்கையையும் பூஜ்யத்திலிருந்துதான் அவர் ஆரம்பிக்கவேண்டியிருந்தது. அதிலும் தனது இரண்டாவது வாழ்வை ஆரம்பித்த முதல் 15 முதல்தர போட்டிகளுக்குள்ளேயே இந்த பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார்….</p>
<p>இந்தப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மோதும் போது கிளிஸ்டர்ஸ், தர வரிசைப் பட்டியலிலேயே இல்லை. ஆனால் இந்தக் கோப்பையைப் பெற, தர வரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்திற்குள் இருக்கும் 5 பேரை அவர் தோற்கடிக்க வேண்டியிருந்தது. இரண்டாவது சுற்றில் <strong>14ஆம்</strong> இடத்தைப் பெற்ற <strong>மேரியன் பர்டோலியையும்</strong>, நான்காம் சுற்றில் உலகின் <strong>மூன்றம் இடத்திலுள்ள</strong> <strong>வீனஸ் வில்லியம்சையும்</strong>, காலிறுதியில் <strong>18வது இடத்திலுள்ள</strong> <strong>நா லி யையும்</strong>, அரையிறுதியில் <strong>இரண்டாம் இடத்திலுள்ள செரீனா வில்லியம்சையும்</strong>, இறுதிப் போட்டியில் <strong>9 ஆம் இடத்திலுள்ள கரோலினையும் வென்றுள்ளார். </strong></p>
<p>அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சின் கோபமும், நடுவரிடம் நடந்து கொண்ட முறையும், போட்டியை விட்டு வில்லியம்சை வெளியேற வைத்தது போன்ற செயல்கள்  கிளிஸ்டர்சின் விளையாட்டுத்திறனை பத்திரிக்கைகள் கவர் செய்யாமல் மறைத்தது எனலாம். ஏனெனில் அந்த போட்டியில் கிளிஸ்டர்ஸ் வெற்றிபெறக் கூடியச் சூழலில்தான் (6–4, 7–5) இருந்தார். <strong>ஒரே போட்டிச் சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் இருவரையும் வென்ற முதல் பெண் இவரே என்ற பெருமையையும் பெற்றுள்ளார்!!!! யு எஸ் ஒப்பன் போட்டி வரலாற்றில் முதல் வைல்டு கார்டு சேம்பியன் என்ற பெருமையையும் பெற்றார்.</strong></p>
<p>இயற்கை பெண்களுக்கு மட்டும் அளித்திருக்கும் நிர்ப்பந்தமா அல்லது நிகரற்ற அற்புதமா என்று எளிதில் சொல்லிவிட முடியாத ஒரு நிதர்சனம்தான் இந்த குழந்தையைப் பெறக் கூடிய உடலமைப்பு முறை. பெரும்பாலும் வரமாகவும், கிடைத்தற்கரிய பேறாகவும் கருதப்பட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சமூக அமைப்புகளும் இதையே சாபமாகவும் சிலருக்கு மாற்றியதுண்டு. எந்த ஒரு ஆணும் தன் வாழ்விலோ, துறையிலோ வெற்றி பெற, சமூகம் முதற்கொண்டு பல காரணிகளை எதிர் கொண்டு போராடுகிறான் என்றால், ஒரு பெண் வெற்றி பெறவோ இவை எல்லாவற்றையும் தவிர இயற்கையையும் சேர்த்து எதிர்கொண்டு போராட வேண்டியிருக்கிறது…..</p>
<p>அப்படிப்பட்ட ஒரு சூழலில் கிம் கிளிஸ்டர்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, பலருக்கு முன்னுதாரனமும் கூட (இதே பெல்ஜியத்தைச் சேர்ந்த, தர வரிசையில் முதலிடத்தில் இருந்த, ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜஸ்டின் ஹெனினும் மீண்டும் விளையாட வரக்கூடும் என்கிற பேச்சு நிலவுகிறது)………</p>
<p><strong>வாழ்த்துக்கள் கிம் கிளிஸ்டர்ஸ்……………………… </strong></p>
<p><strong>பின்குறிப்பு:</strong></p>
<p>என்னதான் போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், வெற்றி பெற்ற பின் கிளிஸ்டர்ஸ் அடைந்த மகிழ்ச்சி நமக்கும் பரவினாலும், போட்டியைக் காண வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினர்தான் எனது கவனத்தை மட்டுமல்ல, அங்கிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தார். போட்டி முடிந்த பின் காமிராக்கள் அவரை பல முறை காட்டினாலும், அவரையோ அல்லது அல்லது கிளிஸ்டர்ஸையோ காட்டும் போது அவர் காட்டிய உற்சாகம் நம்மையும் தொற்றியது. வெறுமனே பார்வையாளர் கூட்டத்தில் மட்டுமே இருக்காமல், கிளிஸ்டர்ஸ் கோப்பையை வாங்கிய பின் மைதானத்திற்கு வந்து கிளிஸ்டர்சுடன் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி….</p>
<p><strong>அந்த சிறப்பு விருந்தினர் இவர்தான் (</strong><strong>Jada Ellie)</strong><strong>…..</strong></p>
<p><strong> </strong></p>
<div id="attachment_452" class="wp-caption aligncenter" style="width: 470px"><strong><strong><img class="size-full wp-image-452 " title="Kim-Clijsters-carries-dau-002" src="http://nareshin.files.wordpress.com/2009/09/kim-clijsters-carries-dau-002.jpg?w=460&#038;h=276" alt="Kim with kid" width="460" height="276" /></strong></strong><p class="wp-caption-text">நான் வேணுமா? கப்பு வேணுமா?</p></div>
<div id="attachment_453" class="wp-caption aligncenter" style="width: 470px"><strong><strong><img class="size-full wp-image-453" title="Kim-Clijsters-celebrates--001" src="http://nareshin.files.wordpress.com/2009/09/kim-clijsters-celebrates-001.jpg?w=460&#038;h=276" alt="குழந்தையின் உற்சாகம்" width="460" height="276" /></strong></strong><p class="wp-caption-text">குழந்தையின் உற்சாகம்</p></div>
<div id="attachment_454" class="wp-caption aligncenter" style="width: 478px"><strong><strong><img class="size-full wp-image-454" title="article-0-066B9220000005DC-490_468x462" src="http://nareshin.files.wordpress.com/2009/09/article-0-066b9220000005dc-490_468x462.jpg?w=468&#038;h=462" alt="இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!" width="468" height="462" /></strong></strong><p class="wp-caption-text">இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!</p></div>
<div id="attachment_455" class="wp-caption aligncenter" style="width: 250px"><strong><strong><img class="size-full wp-image-455" title="83372614MD321_US_Open_Day_1" src="http://nareshin.files.wordpress.com/2009/09/amd_clijsters_daughter.jpg?w=240&#038;h=375" alt="உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு" width="240" height="375" /></strong></strong><p class="wp-caption-text">உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு</p></div>
<div id="attachment_456" class="wp-caption aligncenter" style="width: 436px"><strong><strong><img class="size-full wp-image-456" title="426-kimclijsters--125291409680015300" src="http://nareshin.files.wordpress.com/2009/09/426-kimclijsters-125291409680015300.jpg?w=426&#038;h=312" alt="எனக்கு வெக்கமா இருக்கு!!!!" width="426" height="312" /></strong></strong><p class="wp-caption-text">எனக்கு வெக்கமா இருக்கு!!!!</p></div>
<p><strong> </strong></p>
<br />Posted in சாதனை Tagged: சாதனை <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/nareshin.wordpress.com/447/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/nareshin.wordpress.com/447/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/nareshin.wordpress.com/447/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/nareshin.wordpress.com/447/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/nareshin.wordpress.com/447/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/nareshin.wordpress.com/447/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/nareshin.wordpress.com/447/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/nareshin.wordpress.com/447/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=nareshin.wordpress.com&amp;blog=5042835&amp;post=447&amp;subd=nareshin&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://nareshin.wordpress.com/2009/09/15/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e2%80%93-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="" medium="image">
			<media:title type="html">meetnnk</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/09/untitled.jpg" medium="image">
			<media:title type="html">Untitled</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/09/kim-clijsters-carries-dau-002.jpg" medium="image">
			<media:title type="html">Kim-Clijsters-carries-dau-002</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/09/kim-clijsters-celebrates-001.jpg" medium="image">
			<media:title type="html">Kim-Clijsters-celebrates--001</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/09/article-0-066b9220000005dc-490_468x462.jpg" medium="image">
			<media:title type="html">article-0-066B9220000005DC-490_468x462</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/09/amd_clijsters_daughter.jpg" medium="image">
			<media:title type="html">83372614MD321_US_Open_Day_1</media:title>
		</media:content>

		<media:content url="http://nareshin.files.wordpress.com/2009/09/426-kimclijsters-125291409680015300.jpg" medium="image">
			<media:title type="html">426-kimclijsters--125291409680015300</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
