தமிழ்ப் பட(ங்களின்)த்தின் அராஜகம் – திரைப் பார்வை

முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க விரும்பினால் அதைப் பற்றிய விமர்சனத்தை வலைப்பதிவுல படிச்சிட்டு அதுக்கப்புறம் போய் பார்ப்பதுதான் வழக்கம். ஆனா, இப்பவோ, ஒரு படம் பாக்க நினைச்சிட்டா அதுவரைக்கும் வலைப்பதிவுக்குள்ள எட்டிபாக்காம இருக்கனும் போல இருக்கு!!! ஜேம்ஸ்பாண்ட் படத்துல இன்விசிபிள் காரை பாண்ட் ஓட்டுற மாதிரி காட்டுன உடனே பலரும் சைண்ட்டிஸ்ட்டை விட டைரக்டர்ஸ் பயங்கரமா யோசிக்கிறாங்க, கண்டு பிடிக்கிறாங்கன்னு பேச்சு வந்தது!!! அதே மாதிரிதான் நம்ம ஊர்லியும், இப்பல்லாம் நம்ம டைரக்டர்சை விட வலைப்பதிவர்கள் பயங்கரமா சிந்திக்கிறாங்க. டைரக்டருக்கு கூட தெரியாத புதுப் புது கோணங்கள், கான்செப்ட்டெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் படம் உண்மையிலியே நல்லாயிருக்கான்னு தெரிஞ்சிக்க ரெண்டு மூணு விமர்சனம் மட்டும் படிச்சிட்டு படத்துக்கு போனோம்னா தீந்தோம், எந்த படத்தைப் பாத்துட்டிருக்கோங்கிற சந்தேகமே வந்துடுது சமயங்கள்ல….

டேய், தமிழ்ப் படத்தைப் பத்தி சொல்றேன்னு சொல்லிட்டு எதுக்குடா இதெல்லாம் இப்ப சொல்றன்னு கேக்கறீங்களா??? நம்மூரு ஹீரோ பில்டப் படங்கள் பெரும்பாலும் இப்படித்தானே இருக்கும். சொல்ல வந்த்தை வுட்டுட்டு சம்பந்தமே இல்லாம் பஞ்ச் டயலாக் பேசிகிட்டு இருப்பாங்கள்ல…அதை நக்கல் பண்ணி வந்திருக்கிற படம்தான் இந்த தமிழ்ப் படம். ஒரு லொல்லு சபாவையே ஹை லெவல்ல எடுத்துருக்காங்க. படம் எடுக்க சொன்னா அராஜகம் பண்ணியிருக்காங்க…

ஏற்கனவே பாடல்களும், ட்ரெய்லரும், விளம்பரங்களும் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தாலும் மனதில் இருந்த ஒரே சந்தேகம், படத்தின் ஃப்ளோ எப்படி கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது என்பதுதான். ஆனால் மிக கவனமாகவும், அருமையாகவும் படத்தை நடத்திச் செல்கிறார்கள். வரிசையாக கலாய்ப்பது என்று முடிவெடுத்திருந்தாலும், வழக்கமான ஒரு கதை, திரைக்கதை எல்லாம் எழுதி வரும் பல படங்களை விட இதன் ஃப்ளோ நன்றாகவே இருக்கிறது…

நன்றாக்க் கலாய்த்தாலும், வழமையான மசாலா படங்களுக்கே உரிய எடுத்தவுடன் அமர்க்களமான காமெடி, பில்டப் பாடல், காதல் ஆரம்பம், இடையில் சற்று தொய்வு பின் இடைவேளை வரை அராஜகமான காமெடிகள் என்று முதல் பாதி எப்படி போனது என்பதே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு இருந்தாலும், இடையிடையே எட்டிப் பார்க்கும் காமெடிகள், கடைசி நிமிடங்களில் மீண்டும் அராஜகங்கள் என கொடுத்த காசுக்கு மேல சிரிக்க வைக்கக் கூடிய ஒரு படத்தைதான் தந்திருக்கிறார்கள்….

ஒரு லோ பட்ஜெட் படம் என்றாலும் நிரவ் ஷாவின் கேமிரா, இசை, கலை, எடிட்டிங் அனைத்தும் அப்படி ஒரு உணர்வே ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது. சிவாவே ஒரு காட்சியில் அந்நியன் பாணியில் எருமை மாடுகளை வைத்து கொல்ல முயற்சி செய்யும் போது லோ பட்ஜெட் படத்துலல்லாம் செய்ய மாட்டீங்களா என எருமைகளை கேட்கும் போதுதான் நமக்கே தோன்றுகிறது. அதுவும் எருமைகளை எருமை மாடுகளா என திட்டும் போது சிரிப்பு களை கட்டுகிறது.

இப்படியும் கொல்லலாம் கான்செப்ட், ஃபாமிலி சாங் டிவிடி, சைக்கிளை சுத்தியவுடன் பெரிய ஆளாவது,  காஃபி கொண்டு வருவதற்குள் பணக்காரனாவது, மவுன ராகம் ஸ்டைலில் காதல் சொல்லும் இடம் என்று பல இடங்களில் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.

திரைக்கு பின்னால் சி.எஸ் அமுதன், கண்ணன் (இசை), நீரவ் ஷா(ஒளிப்பதிவு), சந்தானம் (கலை) ஆகியோர் பெரிய பலம் என்றால், திரையில் சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மனோபாலா ஆகியோர் பெரிய பலம். வெண்ணிற ஆடை மூர்த்தி டபுள் மீனிங்கில் பேசும் இடங்களில் காக்கா வர வைத்திருப்பது எல்லாம் தாறுமாறு!!!

வெறும் திரைப்படங்களை மட்டும் கலாய்ப்பார்கள் என்று பார்த்தால், ஹட்ச், வோடாஃபோன், வசந்த் அண்ட் கோ என்று விளம்பரங்களையும் விட்டு வைக்கவில்லை. படத்தின் இன்னொரு முக்கிய ஹைலைட், அந்த பரத நாட்டிய சீன். எல்லாராலும் நடனம் ஆட முடியும் என்ற நம்பிக்கையையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்JJJ. அதைவிட அராஜகம் தப்பு பண்ணா அந்த கையை ஆட்டி நடிப்பானே அந்த தம்பி படத்தை பத்து தடவை பாக்கனும் என்பது, முதல் பில்டப் பாடலில் ”இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் சிவா” என்று சொல்லி சிறிது இடைவெளியில் ”என்று போடுமாறு கேட்டுக் கொண்டார்” என்பது, பெரிய தளபதி, வைஸ் கேப்டன் போன்ற பட்டங்கள், அரசி சினிமா பட்டிக்கு ஏன் கரண்ட், தண்ணீர், ரோடு வசதி எல்லாம் தருவதில்லை என்பதற்கான காரணங்கள் என பல சொல்ல்லாம்.

ஒரு வலைப்பதிவருக்கே உரிய அடிப்படைத் தகுதியான படம் பார்க்கும் போது அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்பதை சில இடங்களில் நம்மால் கணிக்க முடிந்தாலும், காட்சி வரும் போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது!!! முதல் தடவை பார்க்கும் போது இந்தக் காட்சி, இந்தப் படம் என்பதிலெல்லாம் ரசிகர்கள் அதிக கவனத்தை கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் இதற்கு ரிப்பீட்டிவ் ஆடியன்ஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.

சும்மா சொல்லக் கூடாது, ரெண்டரை மணி நேரம் பக்கத்துல உக்காந்து கிச்சு கிச்சு மூட்டி அனுப்புறாங்க!!!

பி.கு:

கஸ்தூரி கண் முன்னாடியே இருக்காங்க!!! சத்தியமா இது ஒரு வித்தியாசமான படந்தான்….

Categories: சினிமா

வேட்டைக்காரனும், தமிழ்ப் படமும்!!!

மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!


மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர் திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றதுஎன்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!


இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம்.


இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ ஆச்சரியத்துடன் யாராவது ஆஹாசினி கேட்கும் போது நமக்கும் வாவ், சட்டே மேலே எத்னே பட்டன் என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!


பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனைப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!!


வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் “அதையும் தாண்டி புனிதமானது என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!


படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும் என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன் என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!!


இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!


கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!

*********************************************************************************

வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே தமிழ் படம் என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே “அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த சி.எஸ் அமுதன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த ‘தமிழ் படம்!!! சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!

செந்தூரப் பூவே சிவா

தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், “இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்கஎனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!


ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்….அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து…இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்…


ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!


மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!! வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் ‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன் பாடல்!!! ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!!

சுனாமியின் பினாமி,

ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே,

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில,

ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!!


இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!

சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்… ஆனால் ஓ மகசீயா பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்…)

http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html


குத்துவிளக்கு பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும்,

தூண்டில் போட்டு யானை பிடிப்போம்

சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்

வாழும்போதே செத்து முடிப்போம்

இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்

வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!

படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் “சூறாவளி பாட்டில் தெரிந்து கொள்ளலாம்…

“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது”!!!!

இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்

மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!

மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர் திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றதுஎன்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!

இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ ஆச்சரியத்துடன் யாராவது ஆஹாசினி கேட்கும் போது நமக்கும் வாவ், சட்டே மேலே எத்னே பட்டன் என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!

பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனைப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!!

வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் “அதையும் தாண்டி புனிதமானது என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!

படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும் என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன் என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!!

இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!

கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!

http://www.youtube.com/watch?v=QcFn4erIeGA

*********************************************************************************

வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே தமிழ் படம் என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே “அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த சி.எஸ் அமுதன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த ‘தமிழ் படம்!!! சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!

?ui=2&view=att&th=12604e774642d2cc&attid=0.1&disp=attd&realattid=ii_12604e774642d2cc&zw

தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், “இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்கஎனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!

ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்….அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து…இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்…

ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!

மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!! வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் ‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன் பாடல்!!! ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!!

சுனாமியின் பினாமி,

ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே,

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில,

ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!!

இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!

?ui=2&view=att&th=12604e6b345a31d3&attid=0.1&disp=attd&realattid=ii_12604e6b345a31d3&zw

சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்… ஆனால் ஓ மகசீயா பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்…)

http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html

குத்துவிளக்கு பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும்,

தூண்டில் போட்டு யானை பிடிப்போம்

சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்

வாழும்போதே செத்து முடிப்போம்

இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்

வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!

படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் “சூறாவளி பாட்டில் தெரிந்து கொள்ளலாம்…

“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது”!!!!

இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்


Categories: சினிமா குறிச்சொற்கள்:

மை நேம் ஈஸ் கான் (My name is Khan)

மிக யதேச்சையாகத்தான் அந்த ட்ரெய்லரை பார்க்க நேர்ந்தது!!! மழையின் தாக்கம் சென்னை முழுதும் பீடித்திருக்க, பேட்டரி வேலை செய்யாததால் ரிமோட்டின் மீது கடுப்பேறி வேறு வழியில்லாமல் ஒரே சானலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விஜய் டிவியை பார்க்க நேரிட்ட்து. சுமார் பத்து மணி அளவிதான் அந்த ட்ரெய்லரும் ஒளிபரப்பப் பட்டது!!!

தமிழ் சானலில், இந்தி நிகழ்ச்சிகள் என்றுமே ஒளிபரப்பப்படாத நிலையில், ஷாருக்கான் தொடர்ச்சியாக இந்தியில் 2 நிமிடங்கள் பேசிய போது இந்தி தெரியாத காரணத்தினால், முதலில் மத்திய அரசின் ஏதாவது செய்தி விளம்பரமாக இருக்கலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அதன்பின்தான் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தின் ட்ரெய்லர் என்று சொல்லப்பட்டது.

சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே அந்த ட்ரெய்லர் ஓடியது. ஆனால் அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் நீண்ட நேரம் மனதில் நின்றன. தவிர, அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கம், அந்தப்படத்தின் மற்ற விஷயங்களைத் தேடிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது!!!
இந்தி அதிகம் தெரியாத காரணத்தினால் இந்தி சினிமாவின் புதுவரவுகளிலோ, படைப்புகளிலோ நானாக அதிக ஆர்வம் காட்டியதில்லை. இதனாலேயே இந்தப்படத்தின் பெயரை ட்ரெயிலரில் சொன்ன போது எனக்கு அதனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வில்லை. அந்தப் படத்தின் பெயர் “மை நேம் ஈஸ் கான்”.

My name s Khan

ஷாருக்கான் பேசி முடித்த பின்பு, முதலில் தாரே ஜமீன் பரில் வரும் சிறுவனின் சாயலில் ஆட்டிசக் குறைபாடு கொண்ட ஒரு சிறுவனைக் காண்பித்த பொழுது, அமீர்கானைப் போல் ஷாரூக்கானும் அதே மாதிரி படம் எடுக்கிறாரோ என்றுதான் தோன்றியது!!! அந்த சிறுவன்தான் ஷாரூக்கான் என்று காட்டிய பொழுது இதுதான் இரண்டு படத்திற்குமிடையேயுள்ள ஒரு வித்தியாசமோ என்று தோன்றியது. அன்றலர்ந்த மலராக திடீரென்று கஜோல் திரையில் வந்த பொழுது, வயதாக ஆக இவர் மட்டும் எப்படி அழகாகிக் கொண்டே செல்கிறார் என்று தோன்றினாலும், வழக்கமான கமர்சியல் இந்தி படத்திற்குதான் இவ்ளோ பில்டப்பா என்றே தோன்றியது……

ஆனால் அதன் பின் திரையில் வந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் நான் எதிபார்க்காத கோணத்தில் சென்றது. பல்வேறுபட்ட திருப்பங்களைக் கொண்ட படம் இது என்பதை அடுத்த ஒவ்வொரு நொடியும் திரையில் ஓடிய காட்சிகள் சொல்லின. அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் கைது, குண்டு வெடிப்பு, துடிப்பான போலீஸ் அதிகாரிகளின் ஓட்டம் ஆகியவை எல்லா கமர்சியல் படங்களிலும் பார்க்கக் கூடிய ஒன்றெனினும், இது மற்ற படங்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டது என்ற உணர்வை காட்சிகள், அதில் தொக்கி நிற்கும் சில வலிகள் உணர்த்தின. அதிகம் வசனங்களே இல்லாத ட்ரெய்லராக இருந்தாலும், ட்ரெய்லர் முடியும் தருவாயில் இரண்டே இரண்டு வசன்ங்கள் மட்டும் என்னை மெலிதாக உலுக்கியிருந்தன. ஒன்று Why are you going to Washington? And he replies back I want to meet the president and say something. வசனத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரை சந்திக்க முயலும் கானின் பயணம் நம்மையும் அவருடனே அழைத்துச் சென்றது. இறுதியில் கானின் “My name is Khan, and I am not a Terrorist” என்ற வசனத்தோடு முடியும் போது, அந்த ஒற்றை வரி உணர்த்துகின்ற உணர்வுகள், அதில் மறைந்திருக்குள் பொருட்கள் ஏராளம், ஏராளம்.

சமயங்களில் ட்ரெய்லர்கள் கொடுக்கின்ற எதிர்பார்ப்பை படங்கள் கொடுப்பதில்லை என்றாலும், ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சிகளும் முந்தைய காட்சிகளை விட பரபரப்பாகவும், வெவ்வேறு அர்த்தங்களைச் சொல்லும் கனமான காட்சியாகவும் அமைந்திருப்பது மிகச் சிறப்பு. ட்ரெயிலரிலேயே யார் கேமிராமேன் என்கிற ஆர்வத்தைத் தூண்டியதைத் தேடிப் பார்த்த போது நம் ரவி.கே சந்திரன் எனும் போது சற்றே பெருமிதமாகத்தான் இருந்த்து. ஆனால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது இது கரண் ஜோகருடைய படம் என்பதுதான்……நல்லவேளை அவர் தயாரிப்போடு நின்றுவிட்டார், இயக்கத்தில் நுழையவில்லை.

இந்த விஷயங்களால் பெரிதும் கவரப்பட்டு சற்று தேடிய போது கிடைத்த செய்திகள் இன்னும் ஆர்வமூட்டின. பழைய பேட்டிகளில் ஷாரூக்கான் இந்தப்படத்தைப் பற்றி சொன்னது, இந்தப்படம் மூன்று முக்கிய விஷயங்களைக் கொண்டுள்ளது, அவை காதல், இஸ்லாம், ஆட்டிஷம்!!!. இந்தப்படம் பேசும் இன்னொரு விஷயம் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிற்கும், மேறகத்திய நாடுகளுக்குமிடையேயான உறவு மறிய விதம்தான். இது ஒன்றும் ஒரு ஊனமுள்ள மனிதனின், அவனுடைய ஊனத்திற்கெதிரான போராட்டமல்ல, மாறாக ஒரு ஊனமுள்ள மனிதனின், இந்த உலகில் நிரம்பியுள்ள ஒரு ஊனத்திற்கெதிரான போராட்டம். இதில் நாங்கள் எந்த பக்கமும் பேசவில்லை…நாங்கள் சொல்ல வருவதெல்லாம், இந்த உலகில் மொத்தம் இருவர் மட்டுமே!!! நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள். இதில் நல்ல இந்து, கெட்ட இந்து என்றோ, நல்ல கிறித்தவன், கெட்ட கிறித்தவன் என்றோ எதுவும் இல்லை. ஒருவன் நல்லவனாய் இருப்பதற்கும், கெட்டவனாய் இருப்பதற்கும் மதம் அளவுகோல் இல்லை, மனிதாபிமானம் மட்டுமே!!!

படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இந்த வார்த்தைகள் மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியது!!! என்னுடைய எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…இதுவரை இந்த வலிகளை, உணர்வுகளை இந்திய வர்த்தக சினிமாவில் ஒழுங்காக பதிவு செய்யப்படவில்லை, பதிவு செய்த சில படங்களோ முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை… Khuda ke liye, Ramchand Pakistani, A mighty heart, Train to Pakistan போன்ற படங்களோ முழுமையாக அனைவரையும் போய் சேர்ந்த்தா என்பது சந்தேகமே!!! நியுயார்க், ஃபன்னா மற்ற சில வர்த்தக சினிமாக்களோ சொல்லிய விதமோ சாதாரண பார்வையாளர்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது. ஷாரூக்கான் என்ற மிகப்பெரிய பிராண்டின் மூலாமாகவும், கரண்ஜோகர் என்ற பெரிய வெற்றிப்பட வியாபாரியின் மூலமாக வரும் இந்தப்படம் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா??? பிப்ரவரி 12 வரை பொறுத்திருங்கள்!!! 

பின்குறிப்பு:
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்க சென்ற போதுதான் அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் மோசமாக நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைகள் அனைவருக்கும் ஞாபகம் வரலாம்…தனது படத்தில் வரப்போகும் காட்சியை ஒத்த ஒரு சம்பவம் அங்கே அரங்கேறியது, இந்தப் படத்திற்கான விளம்பரமே என்று கூட சில குரல்கள் எழுந்தன. ஆனால் படமோ, அந்த சம்பவமோ இதன் ஒட்டு மொத்த அடிப்படையாக, ஒரு ஒற்றை பெயர் ஒரு மனிதனின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையையும், மனிதாபிமானத்தையும், அர்ப்பணிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் அந்தச் சூழலை, அவலத்தை என்னவென்று சொல்வது???

Categories: சினிமா குறிச்சொற்கள்:

தும்பை விட்டு வாலைப்பிடிக்கும்……

சாட்டர்ஜியும், நீல்சிங்கும் அந்நிறுவனத்தின் நிதித்துறையில் மிக முக்கிய பதவி வகிக்கின்றனர்…

அந்நிறுவனம் ஒரு பழம்பெரும் நிறுவனம். அது கால்பதிக்காத துறையோ, அளிக்காத சேவைகளோ கிடையாது. மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமல்ல, மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிறுவனம் சமீப காலங்களில் மிகப் பெரிய பொருளாதாரச் சவால்களைச் சந்தித்து வந்தது. சற்றே சோம்பேறியான புத்திசாலிகளைக்(?) கொண்டிருந்ததனாலோ என்னமோ, மிகத் தாமதமாகத்தான் அந்நிறுவனத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்…

உடனே அது தனது முதல்நிலை நிர்வாகக் குழுவிற்கு செலவினைக் குறைக்க ஆலோசனை கேட்டு அறிக்கை விடுகிறது. ஆலோசனைக் குழுவோ, இந்த இரு நிர்வாகிகளின் பொறுப்பில் அச்செயலை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான திட்டத்தைக் கொடுக்கச் சொல்லி கட்டளையிடுகிறது….இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்….

இடம்: ஒரு ஐந்து நட்சத்திர விடுதி!!!

நீல்சிங்ஜி, நாளைக்கு வெள்ளிக்கிழமை

ஆமா சாட்டர்ஜி சார், இன்னிக்கு வியாழக்கிழமை!!!

கடுப்பேத்தாதீங்க நீல்சிங்ஜி, நாளைக்கு நாம திட்டத்தைக் கொடுக்க வேண்டிய கடைசி நாள், இன்னும் உருப்படியா நாம ஒண்ணும் செய்யலை….

என்ன பண்றது சாட்டர்ஜி சார், இவ்ளோ கஷ்டமான விஷயத்தை நம்மளை மட்டும் தீர்த்து வைங்கன்னா நாம என்ன பண்றது? எல்லாரும் சேந்து செலவு பண்ணுவாங்களாம், ஆனா செலவு குறைக்கறது எப்படிங்கறதை மட்டும் நாம ரெண்டு பேருந்தான் சொல்லனும்னா நாம என்ன செய்ய முடியும்? இடியட்ஸ்….

சரி, சரி விடுங்க, சரக்கு வாங்கிட்டு வரச் சொல்லி ஆளை அனுப்பிட்டீங்களா???

ஓ, அப்பவே ஆர்டர் பண்ணிட்டேன், சரக்கு எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும், ஆனா இந்தப் பாழாப் போன திட்டந்தான் வரமாட்டேங்குது…..அய்ய்ய்யோ, சட்டர்ஜி சார், சரக்கு, சைட் டிஸ் எல்லாம் ஆர்டர் பண்ணேன், ஆனா இந்த ஊறுகாயை மறந்துட்டேனே!!!

எதையோ யோசித்துக் கொண்டிருந்த சட்டர்ஜியின் முகத்தில் திடீரென்று பல்பு எரிந்தது……நீல்சிங்ஜி ஒரு ஐடியா!!! உடனே நம்ம ஆட்கள் எல்லாருடைய பயணத் திட்டத்துலியும் ஒரு மாற்றம் பண்ணிடலாம்…முதல் கட்டமா, நம்ம ஆட்கள் யாரும், ரஷ்யா, நார்வே, கனடா, ஸ்வீடன், ஆப்பிரிக்கா இங்கல்லாம் போகக் கூடாதுன்னு அறிவிச்சிரலாம்!!!

நீல்சிங் புரியாமல் முழிக்க, சாட்டர்ஜியோ மொபைல் போனில் கால்குலேட்டரை எடுத்து கணக்கு போடுகிறார். நீல்சிங்ஜி, இப்பிடி பண்ணா மாசம் ஒரு கோடி செலவு கம்மியாவும்பா!!!

ஒரு கோடிங்கிறது ரொம்ப சின்ன அமவுண்ட்டு சாட்டர்ஜி சார்!!! சரி, வழக்கமா நம்மாளுங்க பிஸினஸ் க்ளாஸ்லதான் போவாங்க, அதுனால அமவுண்ட்டுல இன்னும் ஒரு 30% சேத்துக்கோங்க….

கரெக்ட், அது மட்டுமில்ல, வழக்கமா நம்மாளுங்க வெளிநாடு போனா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவாங்க…அதுனால அதையும் கொறைச்சா மாசம் ரெண்டு கோடி வருது…அப்ப வருசத்துக்கு அப்ராக்ஸிமேட்டா 25 கோடி செலவு கம்மியாகும்!!!

ம்ம்ம், ஆனா 25 கோடி ரொம்ப கம்மியாச்சே?

ஆமால்ல,…………. ஒண்ணு பண்ணுங்க, நீங்க வோர்ல்டு மேப்பை எடுத்துட்டு வாங்க, நான் லேப்டாப்பை எடுக்கறேன், இன்னும் சில நாட்டைச் சேத்தலாம்…

ம்ம்ம், ஆங், ஜப்பானை சேத்துங்க, அப்புறம் சீனா, கொரியா, இத்தாலி….சுவிட்சர்லாந்து

யோவ் அறிவிருக்கா? சுவிட்சர்லாந்தை சேத்தச் சொல்றீங்க, அப்புறம் வெயில் காலத்துல நாம எங்க போறதாம்? இந்த சுவிட்சர்லாந்து, தாய்லாந்துலாம் சேத்த வேணாம்…வேணும்னா சிங்கப்பூர், மலேசியா, துபாய்லாம் சேத்துக்கலாம்….

ஆனா சட்டர்ஜி சார், இங்கல்லாம் நம்மளோட டெவலப்மெண்ட்சுக்கு ஏத்த மாதிரி கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கே?

நீல்சிங்ஜி, அதெல்லாம் கம்பெனியோட தலையெழுத்து!!! நமக்கென்ன வந்துது? நாம இந்த திட்டத்தை சொல்ற மாதிரி சொன்னா, நாம நல்லவங்களா போயிடலாம், இப்போதைக்கு அடுத்தா வாரம் நாம ஆப்பிரிக்கா போக வேண்டிய திட்டத்தை கேன்சல் பண்ணிடலாம், அந்த ஊருக்கெல்லாம் போறதுல எனக்கு முன்னமே புடிக்கலை, இதை சாக்கா வெச்சு கட் பண்ணிட்டம்னா நமக்கு நல்ல புகழ் கிடைக்கும், …இப்ப எக்சல்ல கணக்கு போடுங்க…கூட வேணும்னா இன்னும் நிறைய நாடு சேத்திக்கலாம், ஆனா நம்ம டார்கெட் 200 கோடி வருசத்துக்கு சேமிக்கிற மாதிரி கணக்கு காமிக்கனும் நாளைக்கு, என்ன சொல்றீங்க?

சூப்பர் ஐடியா சட்டர்ஜி சார்!!!

ஓகே, நான் சொல்ற நாட்டையெல்லாம் சேத்துங்க…

டொக் டொக்

என்ன அது?

நாம ஆர்டர் பண்ண சரக்குதான் வந்திருக்கு, ஆனா ஊறுகாய்தான் மறந்துட்டேன்…

பராவாயில்லை, பராவாயில்லை விடுங்க, அதான் திட்டமே ரெடியாயிருச்சே, இனிமே எதுக்கு ஊறுகாய்?

———————————————————————————————————————————————————————————————

அது சுமார் 15 வருடங்களேனும் முந்தைய காலகட்டம். பொருளாதரச் சீர்திருத்தக் கொள்கையால் பல இந்திய நிறுவனங்கள் புதுப்புது போட்டிகளையும் சவால்களையும் சந்தித்துக்கொண்டிருந்தன. இதனை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. வாகனதயாரிப்புத் துறையில் இருந்த மாருதிசுசூகி நிறுவனமும் அப்போது இதே வகையானச் சவாலைத்தான் சந்தித்தது.

பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனத்தின் விற்பனையை / சேவையை அதிகரிக்க இரு வகையானச் தத்துவங்களைக் கையாள்வார்கள். ஒன்று காம்பிடிட்டிவ் அட்வாண்டேஜ் (Competitive advantage – தனது பொருளை / சேவையை மற்றவையுடன் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுபவை), மற்றொன்று ப்ரடக்டிவ் அட்வாண்டேஜ் (Productive advantage – மற்ற பொருட்களை விட தனது பொருட்களை குறைந்த விலையில் விற்றல்). விலையைக் குறப்பது என்றால் சும்மாவாக குறைத்து விடவிடியாது.

தனது வாகனங்களை குறைந்த விலைக்கு விற்க மாருதி நிறுவனம் அமல்படுத்திய முதல் விஷயம் லீன் மேனேஜ்மெண்ட் (Lean management). இந்த முறையில், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் அனைத்து பொருட்கள், செயல்கள் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினர் – அதன் தேவை என்ன, செலவு என்ன, எவ்வாறு குறைக்க முடியும் என்று. இந்த முறையில் அவர்கள் மாற்றம் ஏற்படுத்திய முதல் விஷயம் – ஒரு தொழிலாளி அசம்ப்ளிங் யூனிட்டில் வேண்டிய டூல்சை எடுக்க நடக்க வேண்டிய தூரத்தை 15 அடிகளிலிருந்து 6 அடியாகக் குறைத்தனர் (இதற்காகச் செலவு செய்து, ராக் சிஸ்டத்தை இடம் மாற்றி, அதனுடன் ஒரு கண்வேயர் சிஸ்டத்தை இணைத்தார்கள்). மிகச் சாதாரணமாகக் காணப்படும் இந்தச் செயலின் மூலம் அவர்கள் அடைந்த பயன், ஒரு நாளில் 20 நிமிடங்களை அவர்களால் சேமிக்க முடிந்தது. இந்த 20 நிமிடங்களில் அவர்கள் கூடுதலாக இரண்டு கார்களை தயாரித்தனர் (மாசம் சுமாராக 60 கார்கள் – ஒரு காருக்கு அடிப்படை லாபம் ரூபாய் 20,000 எனில், அதே நிலையானச் செயல்களுக்கு அவர்கள் அடைந்த கூடுதல் லாபம் (60*20000*12) வருடத்திற்கு ரூ 14,400,000 (ஒரு கோடியே நாற்பத்து நான்கு லட்சம்). அப்படி ஆரம்பித்த அவர்களது சீர்திருத்தம், வெண்டார் மேனேஜ்மெண்ட், டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம் என்று பல தளங்களுக்கும் கொண்டு சென்றதன் விளைவுதான், குறைந்த விலையில் அவர்களால் காரினை விற்க முடிந்தது.

———————————————————————————————————————————————————————————————

ஆக ’காஸ்ட் கட்டிங்’ என்ற இந்த தாரக மந்திரம் இந்திய துணைக் கண்டத்தின் நிறுவனங்களில் ஒன்றும் புதிய விஷயம் இல்லை. சில நாட்களாக காணமல் போயிருந்த இந்த தாரக மந்திரம் மீண்டும் பழைய உத்வேகத்துடன் பலருடைய வாயிலிருந்தும் உதிரத்துவங்கியிருக்கிறது. ரிசஷன், பொருளாதார மந்தம் என்று பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியச் சந்தையில் இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை என்றாலும், நிறுவனங்களில் மட்டுமே உதிர்க்கப்பட்ட இந்த மந்திரத்தை இந்த முறை பல அரசியல்வாதிகளும் உதிர்த்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்…

காஸ்ட் கட்டிங் என்ற தாரக மந்திரத்தை அரசியல்வாதிகள் உதிர்த்தாலும், அதனைத் தொடர்ந்து செய்த காமெடிதான், இதுவரை எந்த திரைப்படத்திலும் வந்த்தை விட மிகப் பெரிய காமெடியாக இருக்கிறது… செலவுகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த முதல் நடவடிக்கை தனது அமைச்சர்களை, பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளும்படியும், விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் படியும் அறிவுறுத்தியுள்ளது இது தவிர பிரணாப் கேட்டுக்கொண்ட இன்னொரு விஷயம், அமைச்சர்கள் தங்குவதும், செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்துவதையும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்பதுதான், ஏனெனில் அது தேவையற்ற செலவு என்பதுதான் காரணமாம்!!! அப்படி என்றால் இத்தனை நாள் அத்தகைய தேவையற்ற செயல்கள்தான் செய்யப்பட்டனவா என்ற கேள்வி யாரும் கேட்கவுமில்லை, அதற்கு பதிலுமில்லை.

அறிவிப்பு வந்தவுடன் சொல்லி வைத்தாற் போன்று சசி தாரூரும், எஸ்.எம். கிருஷ்ணாவும் தங்களது விடுதி அறையை காலி செய்து விட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு ஜாகையை மாற்றினார்கள்… அவர்களுக்கென்று அரசு மாளிகை இருக்கும் போது இத்தனை நாள் ஏன் நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கினார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!!! சரி போனாவர்கள் சும்மா சென்றார்களா? அவர்கள் விடுதியில் தங்கியிருந்த பொழுது சொந்த செலவிலதான் தங்கினோம் என்றும், இருந்தும் பிரணாப்ஜியின் வேண்டுகோளுக்காக காலி செய்கிறோம் என்று அறிக்கை வேறு!!! எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், அவர்களுடைய சொந்த காசுன்னா யாரு சொன்னா என்னான்னு அங்கேயே தங்கலாமே!!! எதற்காக இதை செலவைக் கம்மி பண்ணும் விஷயத்தில் செய்தியாகக் கொண்டு வரவேண்டும்? இதுதான் போகட்டும் என்றால், இந்த வேண்டுகோளை ஏற்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், நார்வேக்கு போறதா இருந்த பயணத்தை ரத்து செய்கிறேன்னு பெருமையா அறிக்கை விடுகிறார்!!! எனக்கு தலையே சுத்துது, இந்தியாவோட பஞ்சாயத்து முறைக்கும், நார்வேக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே கூவத்தை சுத்தம் பண்ண ஐடியா கற்றுக் கொள்கிறோம் என்று அமெரிக்காவிற்கு சுற்று பயணம் சென்று வந்த நம்மாட்கள் காதில் இது போன்ற ஐடியாக்கள் விழுந்தால் என்னாவது?

என்னதான் நகைச்சுவைக்கென்று தனித்தனி சானல்கள் வந்தாலும் அரசாங்கத்தின் செய்திகளில் அல்லது அறிவுப்புகளில் தருகின்ற காமெடிக்கு இணையே இல்லைதான். கூட்டணி அரசு என்பதால் ஒன்றாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு காமெடி செய்வதில் மாநில திமுக அரசோ அல்லது மத்திய காங்கிரசு அரசோ சளைப்பதில்லை… மத்திய அரசுக்கு செலவுகள் அதிகமாகிறது என்று அமைச்சர்களை விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்யுங்கள் என்று பிரணாப் சொன்னதன் மூலம் தமிழ் செய்தி ஊடகங்கள் உட்பட அனைத்தும் அவரை மொய்த்ததை காணப் பிடிக்கமாலோ என்னமோ, மாநில அரசின் அத்தனை அமைச்சர்களும், அதிகாரிகளும் வேலை வெட்டியை விட்டு விட்டு கருத்தரங்கு நடத்துகிறார்கள், நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக விருதினை வழங்குகிறார்கள், உலகத் தமிழ் மாநாடு நடத்துப் போகிறோம் என்று அறிக்கை விடுகிறார்கள்…

தாமதமாக செயல்படுத்திவருவதால் பொதுத்துறையின் 54 திட்டங்களில் (தெர்மல் மற்றும் ஹைட்ரோ) ஏற்பட்டுள்ள நட்டம் மட்டுமே சுமார் ரூ 29,000 கோடிகள். இந்த லட்சணத்தில்தான், இன்னும் வாழ்க்கைத்தரத்தில் மற்ற முன்னேறிய மாநிலங்கள் அளவுக்கு முன்னேறாத உத்திரபிரதேசத்தில் ரூ 2,500 கோடிக்கு சிலைகளை அமைக்கும் திட்டம் கனஜோராக நீதிமன்ற உத்தரவையும் மீறி நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் செலவை ஈடுகட்ட, அமைச்சர்களிடமிருந்து மட்டுமல்ல எல்லாரிடமிருந்தும் சம்பளத்தில் 20% வாங்கினாலும் வாங்குவார்கள் (ஆனால் அமைச்சர்களிடம் சொன்னது போல் கண் துடைப்பாக இல்லாமல், நம்மிடம் உண்மையாக வாங்கி விடுவார்கள்)

என்னதான் ஜனநாயகம், மக்கள் அரசு என்று பெயருக்குச் சொன்னாலும், அரசின் பல நடவடிக்கைகளை விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும், கேள்விக்குட்படுத்தும் உரிமையோ அல்லது தெளிவோ மக்களுக்கு இருப்பதில்லை. தப்பித்தவறி தெளிவடைந்து விடக் கூடாது என்றுதானோ என்னமோ பல விஷயங்களில், அரசுக்கும், பயனாளர்களுக்கும் இடையே பெருத்த இடைவெளியே இருக்கிறது……காஸ்ட் கட்டிங் என்ற விஷயத்தில் மாருதி முதல் இன்றைய நேனோ வரை பல நிறுவனங்கள் முன்னுதாரணமாக இருந்தது மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர். ஒரு காலத்தில் இந்தியாவில் பொருளாதார்ச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்திய ஒருவருடைய தலைமையில் அமைந்த ஒரு அரசில்தான் இது போன்ற பொறுப்பற்ற, விளம்பரத்தை மட்டுமே தேடுகின்ற, ஆதாயமளிக்காத வெட்டி விஷயங்கள் நடந்தேறுகின்றன என்பது வேதனையை மட்டுமல்ல, நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது….

தொடர்புடைய பதிவு:

http://www.nesamudan.com/blog/2009/09/16/austerity/ 

Categories: அரசியல் குறிச்சொற்கள்:

அட்டென்ஷன் டூ பீட்டர்ஸ்………..

செப்டம்பர் 17, 2009 நரேஷ் 11 பின்னூட்டங்கள்

இந்த மடலும், மெயிலில் வந்தது..சும்மா சொல்லக் கூடாது அனுபவிச்சு எழுதியிருக்காங்க…………………..

எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
——————————————————————————————————————————————————————————————————————–

எப்ப பாரு, கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாமாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க (இந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்னு பெரிய கம்பெனியில வேலை பாக்குறவனுங்க, பரங்கிமலை ஜோதி, விஜயா தியேட்டரு மாதிரி மொக்கை தியேட்டருல கூட டேகை கழட்ட மாட்டாங்களே அந்த மாதிரி!!!!!) ..
(10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க..(நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது….(பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்களேன்!)

கையேந்தி பவன்ல கூட கிரடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தைப் பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல, டாலர்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது...(அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. கொடுத்த பணம், டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல! இதுல வர்றப்பவே ஹெட்ஃபோனு, டிஷ்யூ பேப்பருல்லாம் சுட்டுட்டு வந்துடறது)

நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடுவாங்க….

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…
எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் துபாய்ல…”, “இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப… ” ன்னு ஆரம்பிப்பாங்க!!

Categories: காமெடி குறிச்சொற்கள்:

சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ்

செப்டம்பர் 15, 2009 நரேஷ் 12 பின்னூட்டங்கள்

டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டி  என்னதான் மிகப் பெரிய ஒன்றாக இருந்தாலும், வருடா வருடம் நடைபெறும் போட்டி என்பதால் அதில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வே. நேற்று (14.09.09) நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வென்று இந்த வருடக் கோப்பையை கிம் கிளிஸ்டர்ஸ் கைப்பற்றியதும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்திருக்கக் கூடும்…..

கிளிஸ்டர்ஸுக்கு இந்த வெற்றி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2005ல் இதே யுஎஸ் ஓபன் கோப்பையை வென்றவர்தான். ஆனால் இந்த இரண்டு வெற்றிகளுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஏன் இதுவரை நடந்த அத்தனை போட்டிகளையும், சாதனைகளையும் விட இந்த வெற்றிக்கு பின் ஒரு பெருந் தனிச்சிறப்பு இருக்கிறது. ஆம், இந்த போட்டியின் வென்றதன் மூலம் 1980 க்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ‘அம்மா’ என்கிற வார்த்தைதான் இந்த வருட வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் தனிச் சிறப்பு (முதல் வைல்டு கார்டு சேம்பியனும் கூட)

எந்த ஒரு ஆணுடைய வாழ்விலும் திருமணமோ, இல்லற வாழ்வில் சம பங்கு வகித்தாலும், குழந்தைகளின் வரவோ அவனது முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை திருமணம் என்கிற விஷயமே பலரது வாழ்வில் தடைக் கல்லாக இருக்கக் கூடிய சமூக அமைப்புதான் நிலவுகிறது. இந்த அமைப்புதான் சினிமா போன்ற துறைகளில், தனக்கு பேத்தியோ அல்லது பேரனோ வந்தாலும் அந்த ஆணை இன்னொரு பெண்ணுடன் டூயட் பாடவைத்து அழகு பார்க்கும் சமூகம், 18 வயதிலேயே திருமணம் செய்தால் கூட, பெண்ணை துறையை விட்டே விலக்கிவைக்கிறது.

திருமணம் என்கிற விஷயமே இந்த நிலையில் இருக்கும் போது, குழந்தை விஷயத்தைச் சொல்லவா வேண்டும். தகவல் தொழில் நுட்பம் போன்ற நிறுவனம் சார்ந்த வேலைகளுக்குச் செல்லக் கூடிய பெண்கள் கூட, இயற்கையின் இந்த படைப்பு முறையின் மூலம் தங்களது கேரியர் வாழ்க்கையில் சின்னச் சின்னச் தியாகங்களோ அல்லது ஒட்டு மொத்தமாக விட்டுக் கொடுக்கவேண்டியச் சூழலே இருந்து வருகிறது. அந்தக் காலத்தைப் போன்று பெண்கள் பலசாலிகளாக இல்லை (அந்தக் காலத்தைப் போன்று ஆண்களும் பலசாலிகளாக இல்லையெனினும், அதை யாரும் சொல்வதில்லை) என்ற அங்கலாய்ப்புகளை கேட்கின்ற அதே சூழலில்தான் தனது ஒன்பதாவது மாதம் வரையிலும் வேலைக்குச் சென்று கொண்டும், குழந்தை பெற்ற பின்பு மிகக் குறைந்த காலத்திலேயே அலுவலகத்திற்கு திரும்பி, அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் இடையே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகிறது….

இப்படி சமூகமும், இயற்கையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முட்டுக்கட்டைகளுக்கு நடுவில், டென்னிஸ் போன்ற உடல் வலு அதிகம் தேவைப்படுகின்ற ஒரு துறையில் கலந்து கொண்டு, அதுவும் குழந்தை பிறந்த இரண்டு வருடங்களிலேயே இந்தக் கோப்பையை வென்றது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனைதான். தனது அப்பா ஒரு கால்பந்து வீரராகவும், அம்மா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாகவும் இருந்ததாலேயே, கால்பந்து வீர்ர்களின் உறுதியான கால்களும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களின் வளைந்து கொடுக்கும் உடலமைப்பும் கொண்டுள்ளார் என்று புகழப்பட்ட கிளிஸ்டர்ஸ், அதே உத்வேகத்தை குழந்தை பெற்ற பின்பும் கொண்டு வந்திருப்பது அரிய விஷயமே!!!!

கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)

கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)

ஏற்கனவே 2003ல் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், 2005ல் யுஎஸ் ஒபன் முதற்கொண்டு, திருமணத்திற்கு முன் 34 கோப்பைகளை வென்றிருந்தாலும், குழந்தை பெற்ற பின் தனது விளையாட்டுத் திறனையும்,  வாழ்க்கையையும் பூஜ்யத்திலிருந்துதான் அவர் ஆரம்பிக்கவேண்டியிருந்தது. அதிலும் தனது இரண்டாவது வாழ்வை ஆரம்பித்த முதல் 15 முதல்தர போட்டிகளுக்குள்ளேயே இந்த பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார்….

இந்தப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மோதும் போது கிளிஸ்டர்ஸ், தர வரிசைப் பட்டியலிலேயே இல்லை. ஆனால் இந்தக் கோப்பையைப் பெற, தர வரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்திற்குள் இருக்கும் 5 பேரை அவர் தோற்கடிக்க வேண்டியிருந்தது. இரண்டாவது சுற்றில் 14ஆம் இடத்தைப் பெற்ற மேரியன் பர்டோலியையும், நான்காம் சுற்றில் உலகின் மூன்றம் இடத்திலுள்ள வீனஸ் வில்லியம்சையும், காலிறுதியில் 18வது இடத்திலுள்ள நா லி யையும், அரையிறுதியில் இரண்டாம் இடத்திலுள்ள செரீனா வில்லியம்சையும், இறுதிப் போட்டியில் 9 ஆம் இடத்திலுள்ள கரோலினையும் வென்றுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சின் கோபமும், நடுவரிடம் நடந்து கொண்ட முறையும், போட்டியை விட்டு வில்லியம்சை வெளியேற வைத்தது போன்ற செயல்கள்  கிளிஸ்டர்சின் விளையாட்டுத்திறனை பத்திரிக்கைகள் கவர் செய்யாமல் மறைத்தது எனலாம். ஏனெனில் அந்த போட்டியில் கிளிஸ்டர்ஸ் வெற்றிபெறக் கூடியச் சூழலில்தான் (6–4, 7–5) இருந்தார். ஒரே போட்டிச் சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் இருவரையும் வென்ற முதல் பெண் இவரே என்ற பெருமையையும் பெற்றுள்ளார்!!!! யு எஸ் ஒப்பன் போட்டி வரலாற்றில் முதல் வைல்டு கார்டு சேம்பியன் என்ற பெருமையையும் பெற்றார்.

இயற்கை பெண்களுக்கு மட்டும் அளித்திருக்கும் நிர்ப்பந்தமா அல்லது நிகரற்ற அற்புதமா என்று எளிதில் சொல்லிவிட முடியாத ஒரு நிதர்சனம்தான் இந்த குழந்தையைப் பெறக் கூடிய உடலமைப்பு முறை. பெரும்பாலும் வரமாகவும், கிடைத்தற்கரிய பேறாகவும் கருதப்பட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சமூக அமைப்புகளும் இதையே சாபமாகவும் சிலருக்கு மாற்றியதுண்டு. எந்த ஒரு ஆணும் தன் வாழ்விலோ, துறையிலோ வெற்றி பெற, சமூகம் முதற்கொண்டு பல காரணிகளை எதிர் கொண்டு போராடுகிறான் என்றால், ஒரு பெண் வெற்றி பெறவோ இவை எல்லாவற்றையும் தவிர இயற்கையையும் சேர்த்து எதிர்கொண்டு போராட வேண்டியிருக்கிறது…..

அப்படிப்பட்ட ஒரு சூழலில் கிம் கிளிஸ்டர்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, பலருக்கு முன்னுதாரனமும் கூட (இதே பெல்ஜியத்தைச் சேர்ந்த, தர வரிசையில் முதலிடத்தில் இருந்த, ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜஸ்டின் ஹெனினும் மீண்டும் விளையாட வரக்கூடும் என்கிற பேச்சு நிலவுகிறது)………

வாழ்த்துக்கள் கிம் கிளிஸ்டர்ஸ்………………………

பின்குறிப்பு:

என்னதான் போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், வெற்றி பெற்ற பின் கிளிஸ்டர்ஸ் அடைந்த மகிழ்ச்சி நமக்கும் பரவினாலும், போட்டியைக் காண வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினர்தான் எனது கவனத்தை மட்டுமல்ல, அங்கிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தார். போட்டி முடிந்த பின் காமிராக்கள் அவரை பல முறை காட்டினாலும், அவரையோ அல்லது அல்லது கிளிஸ்டர்ஸையோ காட்டும் போது அவர் காட்டிய உற்சாகம் நம்மையும் தொற்றியது. வெறுமனே பார்வையாளர் கூட்டத்தில் மட்டுமே இருக்காமல், கிளிஸ்டர்ஸ் கோப்பையை வாங்கிய பின் மைதானத்திற்கு வந்து கிளிஸ்டர்சுடன் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி….

அந்த சிறப்பு விருந்தினர் இவர்தான் (Jada Ellie)…..

Kim with kid

நான் வேணுமா? கப்பு வேணுமா?

குழந்தையின் உற்சாகம்

குழந்தையின் உற்சாகம்

இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!

இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!

உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு

உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு

எனக்கு வெக்கமா இருக்கு!!!!

எனக்கு வெக்கமா இருக்கு!!!!

Categories: சாதனை குறிச்சொற்கள்:

நினைத்தாலே இனிக்கும் – திரைப்பார்வை

செப்டம்பர் 9, 2009 நரேஷ் 16 பின்னூட்டங்கள்

சன் டிவியின் திரைப்படம் என்றாலே பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடும் நான் துணிந்து அவர்களுடைய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை பார்க்கச் சென்றேனென்றால் அதற்குக் காரணம் நண்பர் மூலமாக இந்தத் திரைப்படத்தைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேள்விப்பட்டிருந்ததும், படத்தின் இயக்குநர் கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா போன்ற மிகச் சிறந்த திரைப்படங்களை அளித்த ரங்கராஜன் அவர்களின் புதல்வர் என்பதும், ஏற்கனவே வெளியாகியிருந்த இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும்தான்…

மற்ற படங்களையும், பாடல்களையும் அப்படியே காப்பி+பேஸ்ட் செய்து விட்டு இயக்குநர் என்ற இடத்திலும், இசையமைப்பாளர் என்ற இடத்திலும் தனது பெயரை போட்டுக் கொள்ளும் ஆட்களுக்கு மத்தியில், படத்தின் பெயர் ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் படம் மலையாளத்தின் ’கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது (பல மாற்றங்கள் செய்து வந்திருந்தாலும்) என்று அறிவித்ததற்காகவே  இயக்குநரை தாராளமாகப் பாராட்டலாம் (எனக்கு தெரிந்து இதுதான் இப்படி வருவது இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன்)….

படத்தின் பெயர் போடும் போது, கறுப்பு வெள்ளையில், மென்மையான இசையின் பிண்ணனியில் காமிராக்கள் கல்லூரிக் கட்டிடங்களினூடே மெல்ல நம்மை அழைத்துச் சென்று, இறுதியில் மழைநீரில் மேலிருந்து ஒரு வண்ணப் பூ உதிர்ந்து விழும் இடத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இயக்குநர் குமரவேல் (முதல் படம்!) என்று பெயர் போடும் போது மெல்லிய புன்னகையையும், சற்றே எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்துகிறது…

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இது ஒரு ’லோ பட்ஜெட் படம்’ என்பது மிகத் தெளிவாக உணர்ந்தாலும், ஒளிப்பதிவின் நேர்த்தியும், அழகும் அதனை ஒத்துக் கொள்ளவைக்க மறுக்கிறது. ’இது மாணவர் உலகம்’ பாடலை காட்டும் போதே ஒளிப்பதிவின் நேர்த்தி மனதில் அழுத்தமாகப் பதிகின்றது.

'இது மாணவர் உலகம்; பாடம்

'இது மாணவர் உலகம்; பாடல்

நட்பையும், கல்லூரி நினைவுகளையும் சொல்லும் படமென்றால், கல்லூரி கலாட்டாக்களையும், அட்டகாசங்களையும், நெகிழ்வுகளையும், மென்மையான காதலையும் சொல்லி அசத்தியிருக்க வேண்டாமா??? மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, முதல் பாதி முழுக்க ஆமை வேகத்திலேயே செல்கிறது. இடைவேளைக்கு சற்று முன்பு வரை படத்தில் கவனத்தை ஈர்க்கும் சம்பவங்களோ, காட்சிகளோ, வசனங்களோ இல்லவே இல்லை….அதிலும் முதல் பாதியில் சில காட்சிகள் ஏனோ ஒரு முழுமையாக இல்லாதது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் திரைப்படம் என்பதனால் இது பராவாயில்லையாகத் தோன்றினாலும், கமலஹாசன், பாலுமகேந்திரா போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தவரிடம் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பாக்யராஜ் வசனம் பேசுவதற்காகவும், சக்திக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே ஒரு கால்பந்து போட்டியை வைத்தது போலிருந்தது, சமீப காலங்களில் இவ்வளவு மோசமாக ஒரு விளையாட்டுப் போட்டியைக் காட்டி நான் பார்த்த்தில்லை….அதற்கு முந்தைய காட்சிகளிலெல்லாம் பயங்கரமாக சண்டை போட்டு விட்டு திடிரென்று கல்லூரி கலாட்டாவின் போது, பிரியாமணியை பிருத்விராஜ் காப்பாற்றியவுடன், அவரது பர்சில் தனது புகைப்படம் இருக்கக் காரணம் தன்னைக் காதலிப்பதுதான் என்று உணர்ந்தவுடன் காதலை ஒத்துக் கொள்ளும் போது ’இந்த மேட்டருல உன் டோடல் ரியாக்‌ஷனே அவ்ளோதானா???’ என்றுதான் பிரியாமணியைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது”…

ஆமை வேகத்தில் செல்லும் திரைக்கதைக்கு மத்தியில் முதல் பாதியிலேயே நான்கு பாடல்கள் வருவது சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும், அனைத்து பாடல்களையும் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அழகு…’செக்சி லேடி’ பாடல் (யாருங்க அந்த அம்மிணி???) அருமையாக இருந்தாலும், அந்தப் பாடல் எதற்காக அங்கு வருகிறது என்பது தியேட்டரில் இருக்கும் யாருக்குமே புரியவில்லை… எடிட்டிங் கோளாறா, என்ன பிரச்சினையென்று தெரியவில்லை, முழு படமுமே இரண்டே கால் மணி நேரம்தான் என்றாலும், மூணு மணி நேரம் ஓடிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது…

'அழகாய் பூக்குதே' பாடல்

'அழகாய் பூக்குதே' பாடல்

முதல் பாதியில் ரொம்ப லேசானதாக இருந்த்தாலோ என்னமோ இரண்டாவது பாதியில் வரும் திடுக்கிடும் திருப்பங்களோ, வேகமோ, காட்சிகளோ எதுவுமே மனதில் பதிய மறுக்கிறது. ’அழகாய் பூக்குதே’ பாடல் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை என்றாலும், பாடல் வரும் போது தியேட்டரில் பலருக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இறுதிக் காட்சியில் பாக்யராஜ் அனைவரையும் நிற்க வைத்து வசனம் பேசும் போது நாடக பாணியாகத் தோன்றுகிறது.

இறுதிக் காட்சியில் வரும் ‘உங்க எல்லார்கிட்டயும் நான் ஃப்ரெண்ட்சா பழகுனேன், ஆனா என் பையன்கிட்ட நான் வெறும் அப்பாவா பழகிட்டேன்”, கால்பந்து போட்டியின் போது பேசும் வசனம் என்று சில இடங்களைத் மற்ற இடங்களிலெல்லாம் வசனம் மிகச் சாதாரணம். சன் டிவி படம் என்பதை, பிரித்விராஜ் மற்றும் நண்பர்கள் தியேட்டரில் திருநங்கைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியின் மூலம்தான் நிரூபிக்க வேண்டுமா??? ராம்கி திரைப்படம், ஈரமான ரோஜாவே முதற்கொண்டு இன்னும் எத்தனைக் காலத்துக்கு திருநங்கைகளை அவமானப் படுத்த வேண்டும்????

லோ பட்ஜெட் படமாக இருந்தாலும், காட்சிகளை மிக அழகாக காட்டுவதில் இயக்குநர் பட்ட மெனக்கெடல், நுட்பமாக அமைப்பதில் படவில்லை என்றே தோன்றுகிறது.

கல்லூரி திரைப்படங்கள் என்றாலே, ஒற்றைத் தூணாய் நாயகன், அவனைச் சுற்றி அல்லக்கையாக நண்பர்கள் என்று காட்டும் வழக்கத்தை தாண்டி எல்லாருக்கும் சமமான பாத்திரங்கள் உள்ள திரைப்படமாக இருப்பது பெரிய ஆறுதல். படத்தின் நாயகன் பிரித்விராஜ் என்பதை விட, படத்தின் நாயகர்கள் என அனைவரையும் சொல்லலாம். அந்தளவு பிரித்விராஜை விட நடிப்பில் நம்மைக் கவர்வது சக்தி, புதுமுகம் விஷ்ணு மற்றும் கார்த்திக் தான்.

அமெரிக்க மாப்பிள்ளை, சாஃப்ட் கேரக்டரில் பார்த்து பழகிய கார்த்திக், எதிர்மறை வேடம் என்றாலும், சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது வாய்ப்பினை மிக அருமையாக (தப்பு பண்ணிட்டேன்னு பாக்யராஜிடம் வார்த்தைகள் நடுங்கியவாறே பேசுவது அருமை!!!) பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், நல்ல பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்ட சக்தியின் நடிப்பு மிக இயல்பாக இருந்த்து. யாருப்பா இந்த ஆளு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நடிப்பு புதுமுகம் விஷ்ணுவுடையது (நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு…..). பிரியாமணியை விட தோழியாக வரும் அனுஜா மிக அழகாக இருக்கிறார், அதிலும் கடைசிக் காட்சியில் பிரித்விராஜிடம் விடை பெற தலையசைக்கும் போது அவர் மட்டுமல்ல, அந்த காட்சியமைப்பும் மிக அழகாக அமைந்துள்ளது….

நாயகர்கள்

நாயகர்கள்

இயக்குநர்கள் முதற்கொண்டு டான்ஸ் மாஸ்டர்ஸ் வரை எல்லாரும் ஹீரோ ரோலுக்கே அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல் செய்வதற்கும், சப்போர்டிவ் ரோல் செய்வதற்கும் ஏற்பட்டிருக்கும் வெறுமையை கார்த்திக், விஷ்ணு போன்றோர் மிக அழகாக நிறைவு செய்யலாம்…

வெறுமனே ஒளிப்பதிவோடு இல்லாமல், வண்ணமயமான காட்சிகளை படம் முழுக்க்க் கொடுத்திருப்பதும், அருமையான பாடல்களை உள்ளடக்கியிருப்பதும், பாடல்காட்சிகளை படமாக்கியிருக்கும் அழகும் படத்திற்கு மிகப் பெரிய பலம் (அழகாய் பூக்குதே பாடல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு!!!) என்றால், முதல் பாதியின் மிகச் சாதாரணமான காட்சியமைப்புகளும் (இதே திரைப்படம் முதல் பாதியில் கவனமாக கையாளப்பட்டிருந்தால் அடைந்திருக்கும் வெற்றியே வேறு!!!), குறைந்த பட்சம் ஒரு ஐந்து வருடத்திற்கும் முந்திய ‘ஸ்கிரிப்டோ’ என்ற உணர்வைத் தரும் திரைக்கதையும் இதன் பலவீனங்கள்…

மாசிலாமணி போன்ற திரைப்படங்களையே வெற்றிப்படமாக்கிய சன் டிவிக்கு ’நினைத்தாலே இனிக்கும்’ ஒரு நல்ல வெற்றியாக அமையும் என்பதிலோ, லோ பட்ஜெட் படத்தையே அழகாக கொடுத்ததனால் அடுத்த வாய்ப்பு இயக்குநருக்கு எளிதில் கிடைக்கலாம் என்பதிலோ ஆச்சரியப்பட அதிகம் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தவிர்த்து ஒரு நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுப்பதற்கு இயக்குநர் நிரூபிக்கவேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது!!!

மொத்தத்தில் சிரிப்பை வரவழைக்கும் பஞ்ச் டயலாக்குகளோ, முகத்தைச் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, அதே சமயம் புருவத்தை உயர்த்த வைக்கும் அற்புதக் காட்சிகளோ இல்லாமல் வெளிவந்திருக்கும் ஒரு சராசரி, வண்ணமயமான திரைப்படம் இந்த ‘நினைத்தாலே இனிக்கும்’.

சன் டிவி பாணியில் சொல்வதென்றால் நினைத்தாலே இனிக்கும் – சுகர் குறைவு!!!!

தொடர்புடைய மற்ற பதிவுகள்

சரவணகுமரன்

பரிசல்காரன்

Categories: சினிமா குறிச்சொற்கள்:

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

செப்டம்பர் 2, 2009 நரேஷ் 11 பின்னூட்டங்கள்

முகத்தில் அறைந்தார் போன்றே இருந்தது அந்த உண்மை நிகழ்ந்த போது….நிலையின்மை மட்டுமே நிலையானது என்று நன்கு தெரிந்திருந்தாலும், சில நிதர்சனங்கள் நடந்தேறும் போது தாங்கிக்கக் கூடிய மனநிலையோ, திடமோ ஏனோ நமக்கு வாய்க்கப் பெறுவதில்லை….

யாருக்குத்தான் அதிர்ச்சியாய் இருக்காது அந்த செய்தியைப் பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ???? சன் டிவியின் டாப் டென் நிகழ்ச்சியில் முதலிடத்திலிருந்த மாசிலாமணி திரைப்படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டதாக போன வாரம் கேள்விப்பட்ட போது யாருக்காவது அதிர்ச்சி ஏற்படாதிருக்குமா???? உலகத்தரமான நடிப்பு, இயக்கம் திரைக்கதை என்று பல தரங்கள் இருந்ததனாலேயே அதன் தராதரம் சாதாரண ரசிகர்களுக்கு தெரியாதிருந்தாலும், வழக்கமாக தரமான படங்களை அரவணைத்துச் செல்லும் சன் டிவி, மாசிலாமணியை அரவணைத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லைதான்

மற்ற குப்பை படங்களான நாடோடிகள், பசங்க எல்லாம் தேவையில்லா விளம்பரங்கள், பில்டப்புகள் மூலம் எதிர்ப்பார்ப்பையும் வெற்றியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் மாசிலாமணியோ எந்த வித ஆரவாரமுமின்றி விண்னைத் தொடும் வெற்றியை அடைந்தது.

என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால் சன் டிவி நடுவில் வந்த ஐந்தாம் படை என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஏன் விட்டார்கள் என்பதுதான், இது போன்ற நல்ல தரமான படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குங்க ஆஃபீசர்!!!!……..

ஆனா ஒண்ணு, உலகத் தரமான படங்களை கொடுப்பது மட்டுமல்ல, திருட்டு விசிடியை ஒழிப்பதிலும் சன் டிவியின் பங்கு அளப்பறியதுதாங்க…சும்மாவா!!!! இவிங்க படம்னா திருட்டு விசிடில வாங்கி பாக்குறதுக்கு கூட பயமா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!!

——————————————————————————————————————————————————————————————————————

முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் இந்த பேப்பர்காரங்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடவே முடியாது……..

சினேகாவிற்கு குறுஞ்செய்தி மூலம் தொல்லை கொடுத்த ஆளை எப்புடி மடக்கி புடிச்சாங்க, இதே மாதிரி ரம்பா வீட்டுல தகராறு பண்ண ஆளை எப்புடில்லாம் விரட்டுனாங்க, பிரபுதேவாவுக்கும் நயந்தாராவுக்கும் எப்படி அந்த தெய்வீகக் காதல் மலர்ந்தது, சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் ஏன் விவாகரத்து நடக்குது இப்படி எல்லாத்தையும் விலாவரியா சொல்றதுனாலத்தான் நாட்டுல மக்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ்ன்னு ஒண்ணே இருக்கு!!! இவங்க இல்லாமப்போனா நாட்டுல மக்களுடைய நிலையோ, அரிப்போ என்னவாகியிருக்கும்னே சொல்ல முடியலியே????

இதுல தினத்தந்தில கட்டம் கட்டி சில செய்திகளைப் போடுவாங்க பாருங்க, அந்தச் செய்திகள் ஒவ்வொண்ணும் அப்படியே அரிப்புப் (மன்னிக்கவும்) அறிவுப் பொக்கிஷங்கள்……என்னா இதே மாதிரி அந்த பத்திரிக்கைகாரங்க குடும்பத்துலியும் யாரு யாரோட ஓடிப் போனாங்க, யாருக்கு விவாகரத்து நடந்தது, ஏன் நடக்குதுன்னு போட்டாங்கன்னா இன்னும் இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்

என் சந்தேகம் என்னான்னா, பிரபுதேவா, நயந்தாராவிற்கு இடையே காதல் மலர்ந்தது எப்புடி, அந்தக் காதலோட ஆழம் என்ன, நீளம் என்ன, அகலம் என்னான்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சாங்களே எல்லாஞ் சரிதான்…………ஆனா எங்க ஊர்லல்லாம், புருஷனோ, பொண்டாட்டியோ இருக்கறப்பவே, ஒருத்தர் இன்னொரு ஆளு கூட ஊர் சுத்துனா கள்ளக் காதல்னுதான் சொல்லுவாங்க, ஆனா இவனுங்க என்னான்னா, அம்பிகாவதி அமராவதிக்கப்புறம் இதுதான் தெய்வீகக் காதல்ங்கிற ரேஞ்சுக்கு காமிக்குறானுங்க……….

என்னமோ போங்கப்பா, சினிமாவுல வர்ற காதல் ரேஞ்சுக்குதான் இருக்கு பத்திரிக்கைக்காரங்களோட கவரேஜூம்…..

——————————————————————————————————————————————————————————————————————

நடிகர் விஜய்யோட செலக்‌ஷன் எப்பவுமே பிரமாதமாத்தான் இருக்கும், அவருடைய படங்களும் சரி, அதில் வரும் காட்சிகளும் சரி சிறப்பானதாகவே இருக்கும். அவரது திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது அந்த சந்திப்புக் காட்சியும். போனவாரம் ராகுல் காந்தி சென்னை வந்தப்ப விஜய் போய் அவரைப் பார்த்திட்டு வந்ததுமில்லாம, அந்தக் கட்சியிலியே சேரப்போறதா பேச்சு வந்ததன் மூலம் தனது செலக்‌ஷன் எப்பொழுதும் ‘சோடை போகாதுன்னு இன்னொரு முறை நிரூபிச்சிருக்காரு….

இந்தப் பேச்சு அடங்கி முடியறதுக்குள்ள விஜய்யோட வேட்டைக்காரன் படத்தை சன் டிவியே ரிலீஸ் பண்ணப் போதுன்னு இன்னொரு அறிவிப்பும் வேற வந்திருக்கு!!! சும்மா சொல்லக் கூடாது ரெண்டு மேட்டருமே குட் காம்பினேஷன்!

விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!

————————————————————————————————————————————————————————————

மகாபாரதப்போர் – சில நிர்வாகப் பாடங்கள் (நிறைவு)

போர்களின் தன்மையும், மகாபாரதப் போரில் அறிவியலும்

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

மகாபாரதப் போரில் நிர்வாகப் பாடம் (போருக்கான தூண்டுதல், ஆயத்தம், துணைகள்)

மகாபாரதப் போர் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் – 2)

மகாபாரதப் போரில் நிர்வாகப் பாடம் (தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை, குறிக்கோள்கள், பெண்ணுரிமை)

குருசேத்ரம்நிர்வாகப் பாடங்கள் (பாகம் மூன்று)

நிர்வாகப் பாடம் தொடர்கிறது……

7. அர்ப்பணிப்பு (Commitment)

ஏற்கனவே சொன்னது போல் கவுரவர்களின் நான்கு முக்கிய தளபதிகள் (பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், ஷல்யா) போரை விரும்பாததாலும், பாண்டவர்கள் மீதிருந்த பாசத்தாலும் முறையான அர்ப்பணிப்பைத் தரவில்லை…..இன்னும் சொல்லப் போனால் பாண்டவர்களுக்கு ஓரளவு உதவியும் செய்தனர்

  • பீஷ்மர் வெறுமனே வீரர்களை மட்டும் கொன்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தது போக பாண்டவர்களிடம் தன்னைக் கொல்லக் கூடிய ரகசியத்தை தானாகவே ஒப்புவித்தார். தான் தலைமை தாங்கும் வரையில் கர்ணன் போரில் ஈடுபடக் கூடாது என்றதன் மூலம் பாண்டவர்களுக்கு சுமையைக் குறைத்தார்
  • தன் கையில் ஆயுதம் இருக்கும் வரை தனக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்கிற ரகசியத்தை துரோணரும் தானாகவே பாண்டவர்களுக்கு தெரிவித்தார். அந்த ரகசியம் தெரிந்ததனாலேயே, அவரது மகன் அஸ்வத்தமா இறந்தான் என்கிற தவறானச் செய்தியைப் பரப்பி, துரோணரின் ஆயுதத்தை கீழேப் போட வைத்தனர் பாண்டவர்கள்
  • கர்ணனோ தருமனையும், பீமனையும் கொல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தும் அதனைச் செய்ய வில்லை. தவிர போருக்கு முன்பே தனது கவச குண்டலத்தை தானம் செய்தது, பல சமயங்களில் போரில் அடிப்பட்டு அவனை ஓய்வெடுக்க வைத்தது. துச்சாதனனை பீமன் கொல்லும் போதும் கூட கர்ணனால் காப்பாற்ற முடியவில்லை
  • ஷல்யாவோ கர்ணனைப் போர்க்களத்தில் தொடர்ந்து அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான்…

மொத்தத்தில் ஏறக்குறைய அது ஒரு துரோகிகளின் கூடாரமாகத்தான் இருந்த்து

பாண்டவர்களின் அர்ப்பணிப்போ அளப்பறியதாக இருந்த்து. போரில் சில இடங்களில் அவர்கள் தோற்றாலும், சிலர் உயிரிழந்தாலும், உயிரிழக்கும் போதும் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றவர்களை எழுச்சி கொள்ளவும், தூண்டும் வகையிலும் அமைந்தது

  • 16 வயதே நிரம்பிய அபிமன்யு தனி ஆளாக சக்கராயுத வியுகத்தினுள் சென்றது மிக வீரம் வாய்ந்தச் செயலாகவும், எதிரி அணியினராலேயே மதிப்புடனும் பார்க்க வைத்தது. தற்கொலைக்குச் சமமான இந்தச் செயலில், அபிமன்யு உயிரிழந்தாலும் தனி ஆளாக பல வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல், பல இடை மட்டத் தலைவர்களைக் கொன்றான் (துரியோதனனின் மகன் லட்சுமன், ஷல்யாவின் இளைய சகோதரன், ஷல்யாவின் மகன், திருகலோச்சனா, சுஷேனா என்று பல…..). வில் வித்தையில் அர்ஜுனனைப் போலவே திறமை பெற்றிருந்த அபிமன்யு, கர்ணனையே காயப்படுத்தி சிறிது நேரம் போர்க்களத்தை விட்டு துரத்தியடித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு பிரமித்து போய், கவுரவர்களின் ஒட்டுமொத்த வீரர்களையும் வைத்து அபிமன்யுவை தாக்கச்செய்தாலும், அதுவும் முடியாமல் கர்ணனால் பின்னாலிருந்து தாக்கப்பட்டு (போர் விதியை மீறி) வில்லை இழந்த பின்னும் கையில் கிடைத்த ஆயுதங்களின் மூலமாக போராடினான். கடைசியில் மீண்டும் போர்விதியினை மீறி துச்சாதனனின் மகன் மூலமாக இறந்தாலும் இறக்கும் தருவாயிலும் அவனையும் கொன்று விட்டுதான் உயிரை விட்டான்
  • பீமனின் மகனான கடோத்கஜன் கர்ணனின் கையால் உயிரை விட்டாலும், கவுரவர்களின் படையில் பெரும்பாலானோரைக் கொன்றான். சாகும் போது கூட தன் உருவத்தை பல மடங்கு பெரிதாக்கி அவர்கள் மேல் விழுந்தன் மூலம் மேலும் பலரைக் கொன்றான். தவிர அர்ஜூனனைக் கொல்வதற்காகவே கர்ணன் வைத்திருந்த திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதத்தை உபயோகப்படுத்த வைத்ததன் மூலம், இனி அர்ஜுனனுக்கு ஆபத்தில்லை என்றச் சூழலை உருவாக்கினான். இன்னும் சொல்லப் போனால் கர்ணன் கடோத்கஜனைக் கொன்ற பின் கிருஷ்ணரே சற்று நிம்மதியடைந்தார் எனலாம்
  • எல்லாராலும் மதிக்கப்பட்ட கிருஷ்ணரே, இரண்டு முறை போரில் ஈடுபடமாட்டேன் என்கிற சத்தியத்தையும் தாண்டி, தனது ஆயுதத்தை ஏந்தி போரில் இறங்க முற்பட்டாலும், அர்ஜுனனால் தடுத்து நிறுத்தப்பட்டார் (பாண்டவர்கள் மேல் அவருக்கிருந்த பாசத்தை அனைவருக்கும் உணர்த்தினார்)
  • தருமரோ கர்ணனை வெல்ல முடியாது என்று தெரிந்த போதும், ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டார்

இப்படிப் பல சூழல்களில் பாண்டவர்களில் ஒவ்வொருவரும் தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர். சரியான அர்ப்பணிப்பு இல்லாத தலைமையைக் கொண்டிருந்தது கவுரவர்களின் அழிவிற்கு வித்திட்டது மட்டுமல்லாமல், அபிமன்யுவைக் கொல்வதற்காக கவுரவர்களின் ஒரு முறை போர் விதியை மீறியச் செயலால், பாண்டவர்கள் அடைந்த கோபம்தான், விதிகளை மீறி கர்ணன், துரோணர், துரியோதனன் ஆகியோரின் மரணங்களுக்கு காரணமாக அமைந்தது.

இங்கு அபிமன்யுவும், கடோத்கஜனும் வீர மரணம் அடைந்தாலும் அவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு (living by example) எல்லாரையும் வெறி கொள்ளச் செய்தது. ஒரு வேலைக்கு தகுதி வாய்ந்தவர் என்பது வெறுமனே சரியான திறமை வாய்ந்தவர் என்பது மட்டுமல்ல, உயர்ந்த அர்ப்பணிப்பும் கொண்டிருக்கக் கூடியவரே (The best man for a Job is not the one with the best capabilities but one with the greatest commitment). ஒரு குழுவின் தனிப்பட்ட ஒருவரின் விருப்பங்களும் கிடைக்கக் கூடிய நலன்களும் அந்த ஒட்டு மொத்தக் குழுவின் நலனையும் விருப்பத்தையும் மீறி அமைதல் கூடாது (The interests of the Individual should never exceed the Team interest)

8. சரியான நிர்வாகமும் தந்திராத்மமான செயல்களும் (Right management and strategies)

ஏற்கனவே பல தலைப்புகளில் பாண்டவர்களின் வேறுபட்ட தந்திராத்மமான செயல்களைக் கண்டிருந்தோம்.

கிருஷ்ணரைப் போன்ற ஒரு மிகச் சிறந்த சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய நிர்வாகியை (Greatest Crisis Manager) நாம் கண்டிப்போமா என்பது சந்தேகமே!!!! அபிமன்யுவைக் கொன்றதற்காக அடுத்த நாள் போர் முடிவதற்கு முன்னர் ஜெயத்ரதனைக் கொல்வேன் என்ற அர்ஜூனனின் சபதத்தை நிறைவேற்ற கிரகணத்தை கொண்டு வந்து கவுரவர்களை தவறாக கணிக்க வைத்ததாகட்டும், துரியோதனன், காந்தாரி மூலமாக யாராலும் வெல்ல முடியாத சக்தியைப் பெறக் கூடிய நிலை வந்த போது அவனைச் சற்றே திசை திருப்பியதாகட்டும், துரோணரைக் கொல்ல திட்டமிட்டதாகட்டும் என்று பல சிக்கல்களை தீர்த்தது கிருஷ்ணர்தான்….

தருமரோ, போர்கலையில் அர்ஜூனன், பீமனை விட திறன் குறைந்தவராக இருந்தாலும், அவர்செய்த உளவியல் ரீதியான செய்கைகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை!!! முதல் நாள் போர் ஆரம்பிக்கும் முன்பு நிராயுதபாணியாய் எதிர் படைக்குச் சென்று மூத்தவர்களிடம் ஆசியை வாங்கியதன் மூலம் அவர்களுக்கிருந்த குற்ற உணர்ச்சியை மறைமுகமாகத் தூண்டினார், அவர்களுடைய நன்மதிப்பை அதிகரித்துக் கொண்டதன் மூலம் மறைமுகமாக ஒவ்வொருவருடைய உதவியும் பாண்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தினார்……திரும்ப வரும் போது மிகவும் யோசித்து அவர் செய்த ஒரு அறிவிப்பு (Calculated risk) யாரும் எதிர்பார்த்திராதது, அதாவது எந்த ஒரு பக்கத்திலிருந்தும் தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் எதிரணிக்குச் செல்லலாம் என்று அறிவித்ததன் மூலம், கவுரவர்களின் பக்கமிருந்து யுயுட்சுவை (10,000 வீர்ர்களை ஒரே சமயத்தில் எதிர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த 11 பேரில் ஒருவனாக கருதப் பட்டவனும், துரியோதனனுக்கு இளையவனும், மற்ற கவுரவர்களுக்கு மூத்தவனுமானவன்) தங்கள் பக்கம் வரவைத்தார் (ஆரம்பத்திலிருந்தே யுயுட்சு கவுரவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், பாண்டவர்கள் மேல் அன்பாகவும் இருந்தவன். இதற்குப் பலனாக போர் முடிந்த பின்பு தருமர் அஸ்தினாபுரத்தில் முடி சூண்ட போது, யுயுட்சி இந்திர பிரஸ்தத்தின் மன்னனாக முடி சூட்டப்பட்டான்)

இங்கு தருமர் செய்த அறிவிப்பு ஏற்கனவே படைபலத்தில் குறைந்திருந்த பண்டவர்கள் பக்கமிருந்து யாராவது கவுரவர்கள் பக்கம் சென்று இன்னும் பாண்டவர்களின் திறனைக் குறைத்திருக்கக் கூடும், மாறாக தமது படையின் அசாத்திய ஒற்றுமையையும், எதிரணியில் இருந்த பலவீனத்தையும் நன்கு உணர்ந்ததாலேயே நன்கு யோசித்து இந்த அபாயகரமான முடிவில் அவர் ஈடுபட்டார். தமது குழுவின் பலத்தையும், எதிரியின் பலவீனத்தையும் முழுதாக உணராமல் எந்தச் செயலிலும் யாராலும் வெற்றியடைய முடியாது என்பதைக் காட்டினார் (Know your enemies weaknesses and exploit them, Take Calculated risks, Inspire, invigorate, counsel your own team in moments of need)

9. அடிப்படை (The Root)

கவுரவர்கள் ராஜகுமாரர்கள். வாழ்வின் பெரும்பகுதி மாளிகைகளிலும், அதிகாரத்தின் நிழலிலுமே வாழ்ந்தவர்கள் (குரு குலத்தைத் தவிர). அடித்தர மக்களின் வாழ்வு நிலை, உண்மை நிலை (Ground reality) என்று எதையும் அறிந்திருக்கவில்லை

பாண்டவர்கள் வாழ்வில் 13 வருடங்கள் வறுமையிலும், காட்டிலும் செலவளித்தார்கள். குழந்தைப் பருவமோ இமாலய மலைகளிலும், குருகுல வாழ்க்கையிலும் கழிந்தது. உண்மை நிலையை (Ground reality) நன்கு உணர்ந்திருந்தார்கள். முனிவர்கள், ஆச்சார்யர்கள், பிராமணர்கள், அடித்தட்டு மக்கள் என்று சமூகத்தின் பல்வேறு பட்ட மக்களிடமும் பழகியிருந்தனர். ராட்சஸ்ர்கள், காந்தர்வர்கள், அப்சரா, நாகர்கள், தேவர்கள் என்று பல்வேறு சமூகத்தாரிடமும் பழகியிருந்தனர் (horizontal and vertical levels). எல்லாரிடமும் ஒரு சகோதரத்துவத்தை பகிர்ந்திருந்தார்கள்…..

வாழ்வின் எந்த ஒரு கல்வியும் அனுபவத்திற்கு ஈடாகாது என்பார்கள்….எந்த ஒரு நிறுவனத்திலும் அடிமட்ட நிலை வரை (Ground reality) உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வெற்றியை அடைதல் எனபது மிகக் கடினமே. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு, அந்நிறுவனத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் தங்களது கருத்துக்களை பகிர்தல் என்பது மிக மிக முக்கியகரமானச் செயல் (Share your ideologies)

பின்குறிப்பு

மகாபாரதப் போர் உண்மையிலேயே நடைபெற்றதா, நடை பெற்றிருக்கக் கூடுமா, நடந்தது என்றால் எந்தக் காலக் கட்டத்தில் நடந்த்து என்றெல்லாம் பல ஆய்வுகளும் விவாதங்களும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கதையோ, நிகழ்வோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் அதிலிருந்து கற்க்க் கூடிய விஷயங்களை கற்பதற்கு அதன் படைப்பு நிலை என்ன என்பது நமக்கு தேவையில்லை. அனுபவம் தரும் பாடம் போன்று வேறு எதுவும் இல்லை என்பார்கள், அதே போல் எல்லாப் பாடங்களும் நம்முடைய சொந்த அனுபவத்தில் பட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை (Its always better to learn from other’s experience). வெறும் ’அன்பு’ என்று மூன்றெழுத்து வார்த்தைக்குப் பஞ்சம் வந்ததன் விளைவுதான் குருஷேத்ரம் என்ற மாபெரும் போரும் அதில் நடந்த மாபெரும் மனித அவலங்களும். போருக்கு முன்னும், பின்னும் பல விளைவுகள் ஏற்பட்டாலும், அதிலிருந்து பல விஷயங்களை நாம் கற்றாலும், ஒட்டு மொத்தப் போரும் ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொடுக்கிறது. அது எல்லாரையும் அன்பு செய்யுங்கள் என்பதுதான், ஏனோ அதைத்தான் தனி மனிதனும் சரி, நாடுகளும் சரி புரிந்து கொள்ள மறுக்கின்றன.

உதவிய தளங்கள்

குருசேத்ரம் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் மூன்று)

போர்களின் தன்மையும், மகாபாரதப் போரில் அறிவியலும்

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

மகாபாரதப் போரில் நிர்வாகப் பாடம் (போருக்கான தூண்டுதல், ஆயத்தம், துணைகள்)

மகாபாரதப் போர் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் – 2)

நிர்வாகப் பாடம் தொடர்கிறது……………………………………

3. தலைமை (Leadership)

கவுரவர்கள் தங்களது ஆட்சிக் காலத்தின் போதும் சரி, போரின் போதும் சரி ஒற்றைப் புள்ளி தலைமை முறையிலேயே இயங்கினர் (Centralized leadership). அவர்களுடைய 11 அக்‌ஷகினிகளுக்கும் ஒருவர் மற்றுமே தளபதியாக இருந்தனர். ஒருவர் இறந்தாலோ அல்லது காயம்பட்டாலோ மட்டுமே இன்னொருவர் அந்த இடத்தை நிறைவு செய்தார் அவ்வளவே. 18 நாட்கள் நடந்தப் போரில் பீஷ்மர் – 10 நாட்கள், துரோணர் – 5 நாட்கள், கர்ணன் – 1.5 நாட்கள், தளபதியே இல்லாமல் – 0.5 நாள், ஷல்யா – 1 நாள், 18வது நாள் இரவு (அஷ்வத்தமா) என்று தலைமை தாங்கினர். தனிப்பட்ட முறையிலேயே பீஷ்மர் பாண்டவர்களின் படைக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணினாலும் அவரது வீரமோ, கணைகளோ பாண்டவப் படைகளின் முக்கியத் தலைவர்களை நோக்கிப் பாய வில்லை. அதேசமயம் அந்த முக்கிய வீர்ர்களை சந்திக்கக்கூடிய தைரியமும், சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கியிருந்த கர்ணனோ, பீஷ்மர் தலைமை தாங்கும் வரை போருக்குள் நுழையக் கூடாது என்ற கட்டளைக்கு உள்ளாகியிருந்தான். இன்றும் பீஷ்மரும், கர்ணனும் இணைந்து நின்று போரைச் சந்திருந்தால் போரின் நிலையே மாறியிருக்கும் என்போரும் உண்டு, ஆனால் அது நடைபெறவில்லை…

பாண்டவர்களோ பொறுப்புகளையும், கடமைகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு அக்‌ஷகினிக்கும் ஒருவர் என 7 படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டனர், அவர்கள் அந்தப் படையினை திறம்பட நிர்வாகிக்க வழிவகை செய்தனர். சுப்ரீம் கமாண்டராக அர்ஜூனனும், அர்ஜூன்னுக்கு தேராட்டியாக மட்டுமன்றி முக்கிய ஆலோசகராகவும் கிருஷ்ணர் விளங்கினார். எல்லாராலும் மதிக்கப்பட்டவரும், மிக மூத்தவருமாக தருமன் இருந்தாலும், போர் விஷயங்களில் வல்லமை வாய்ந்த அர்ஜூனனே போரை நடத்தினான்

கடமைகளைப் பகிர்ந்து கொள்வதும், தகுந்த தலைமை அமைவதும்தான் எந்த நிறுவனத்தின் அல்லது குழுவின் வெற்றிக்கும் அடிப்படையாக இருக்க முடியும். பொதுவாக எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக்குழுவிற்கும் (Leadership team) நான்கு பண்புகள் தேவைப்படுகின்றன. தந்திராத்மமான செயல்திறன் (Strategic Leadership), வழிகாட்டும் செயல்திறன் (Directive Leadership), குழு முயற்சி வளர்ப்புத்திறன் (Team-building Leadership), இயங்குதிறன் தலைமைப் பண்பு (Operational Leadership). எந்த ஒரு தனிப்பட்ட மனிதனாலும் இந்த நான்கு பண்புகளிலும் சிறந்து விளங்குவதென்பது மிக அரிதான செயலே! ஏனெனில் உளவியல் ரீதியாக இவை நான்கு திறன்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணநலன்களைக் கொண்டவை. இந்தச் செயல்களில் ஏதாவது ஒன்றில் மிக திறன் வாய்ந்த ஒருவர் கண்டிப்பாக மற்றொன்றில் திறன் குறைந்தவராக இருக்கக் கூடும். ஆக இந்த பலவீனங்கள் எப்பொழுது முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு, அதனைச் சுற்றி, நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு குழு அமைகின்றதோ அந்தக் குழுவே செயல்திறன் கொண்டதாக மாறக் கூடும். எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக் குழுவும் அவ்வாறே அமையப்பெறும். பாண்டவர்கள் விஷயத்தில் கிருஷ்ணர் போர் நடவடிக்கைகளில் (Operations) ஈடுபடாவிட்டாலும் போர்திட்டங்களை அமைப்பதிலும், வியூகங்களை அமைப்பதிலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஆலோசகராகவும் இருந்தார் (Strategic and Directive Leadership). அர்ச்சுனனோ இயங்குதிறனிலும், வழிகாட்டுத் திறனிலும் (operational and Directive leadership) சிறந்து விளங்கினான். தருமன் போன்றவர்கள் குழு வளர்ப்புத் திறனில் ஈடுப்பட்டிருந்தனர்….இங்கு பாண்டவர்கள் தகுந்த தலைமையை அமைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளும் கடமைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன (shared responsibilities), கவுரவர்கள் பக்கமோ எல்லாச் செயல்களும் தலைமை வகித்தவர் மட்டுமே நிர்வாகிக்க வேண்டியிருந்தது மட்டுமின்றி வள நிர்வாகம் (Resource Management) அவர்கள் சரியாகச் செயல்படுத்தவில்லை….

கிருஷ்ணரின் கோபம்

கிருஷ்ணரின் கோபம்

4. குழு மனப்பான்மை (Team Spirit)

கவுரவர்களுக்குள் குழு மனப்பான்மை இருந்ததேயில்லை. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று தனிப்பட்ட வழிமுறைகளை (approach) வைத்திருந்தனர். அஸ்தினாபுரத்திற்கு வரும் ஆபத்து எத்தகையதாக இருந்தாலும் எதிர்ப்பேன் என்று சபதம் செய்திருந்த காரணத்தினால் பீஷ்மரும், அதே உறுதிமொழியைக் கொடுத்திருந்ததால் துரோணர் மற்றும் கிருபாச்சாரியரும், துரியோதனின் தந்திரத்தால் ஏமாற்றப்பட்டதால் ஷல்யாவும் என முக்கிய தளபதிகள் பலர் போரில் விருப்பமில்லாவிட்டாலும் ஈடுபட்டார்கள். கர்ணனோ துரியோதனின் நட்பிற்காகவும், அர்ச்சுனனுக்கெதிராக வில் திறமையை நிரூபிக்க வேண்டியும் மட்டுமே போரில் ஈடுபட்டான். இது தவிர அவர்களுக்குள் பல பூசல்கள் இருந்தன. பீஷ்மருக்கும் கர்ணனுக்குமிடையே இருந்த வெறுப்பு, கர்ணனை பீஷ்மர் இருக்கும் வரையில் போர்களத்திற்குள் அனுமதிக்க வில்லை, பீஷ்மருக்கும் சகுனிக்கும் ஆகாது, கர்ணனுக்கும் சகுனிக்கும் ஆகாது, கர்ணனுக்கும் ஷல்யாவிற்கும் ஆகாது, ஷல்யாவிற்கும் பீஷ்மருக்கும் ஆகாது இப்படி முக்கிய தளபதிகளுக்குள்ளே ஒரு ஒத்துழையாமை இருந்தது…

பாண்டவர்களோ ஓரணி, ஒரே குறிக்கோள் என்று இயங்கினர். கிருஷ்ணரும், தருமரும் சொல்லும் வார்த்தைகள் அங்கே வேதமாகக் கருதப்பட்டது, படை வீரர்களோ அர்ச்சுனன் மற்றும் பீமனின் வீரத்தைக் கண்டு தூண்டப்பட்டிருந்தனர், போரில் ஈடுபட்ட அனைவருமே அதை தங்களுடைய போராகக் கருதினார்கள், தளபதிகள் அனைவரையும் முடிவெடுக்கும் விவகாரங்களில் பங்கேற்கச் செய்தது (Brainstorming) அவர்களுக்குள் நல்ல ஒத்துழைப்பையும், அனைவருக்கும் தூண்டுகோலாகவும் இருந்தது…

எந்த ஒரு நிறுவனத்திலும், தலைமையிலிருந்து அடிமட்ட தொழிலாளி வரை, அமைகின்ற குழுவைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் செயல்திறன் அமையும். அப்படியிருக்கையில் அந்தக் குழுவில் குழு மனப்பான்மை இல்லாது போவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தலைமைக் குழுவில் குழு மனப்பான்மை இல்லாவிட்டால், நிறுவனம் முதற்கொண்டு கட்சிகள் வரை முதலுக்கே மோசம் வரும். பெரும்பாலும் இது போன்ற குழுவை நம்பி இயங்குவதால்தான் மென்பொருள் நிறுவனங்கள் முதற்கொண்டு பல நிறுவனங்கள் குழு முயற்சி வளர்ப்பிற்கான (Team building  workshops) பயிற்சிகளை இடைநிலை மேலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குகின்றனர். என்னதான் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களும், செயல்முறைகளும் இருந்தாலும் ஆன்மா இல்லாத ஒரு குழுவைக் கொண்டு சாதிப்பதென்பது மிக மிகக் கடினமே!!!

5. தனிப்பட்ட குறிக்கோள்கள் (Individual targets)

கவுரவப் படையில் இருந்த நான்கு முக்கிய தளபதிகளும் பாண்டவர்களுக்கு எதிராக போரிடவேயில்லை. பீஷ்மரைப் பொறுத்தவரை பாண்டவர்களை தாக்கவே இல்லை, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்களை தாக்குவதில் மட்டுமே முனைந்தார், துரோணரோ தான் பாண்டவர்களை கொல்லப் போவதில்லை என்றும் அவர்களை பிடிக்க மட்டுமே முனைவதாகக் கூறினார், ஷல்யாவோ துரியோதனனால் ஏமாற்றப்பட்ட கோபமும், பாண்டவர்கள் பக்கம் நிற்க முடியவில்லை என்ற வருத்தமும் இருந்ததால் முழு மனதோடு போரில் ஈடுபடவில்லை, இன்னும் சொல்வதென்றால் போர்களத்தில் கர்ணனை அவமானத்திக் கொண்டேயிருந்ததன் மூலம் மறைமுகமாக பாண்டவர்களுக்கு சிறிது உதவியும் செய்தார், கர்ணனோ அர்ஜுனனைத் தவிர மீதிப் பாண்டவர்கள் யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தான்

பாண்டவர்களோ போர் ஆரம்பித்த உடன் பின்வாங்கவோ, தயங்கவோ இல்லை, எல்லாருக்கும் பொதுவான இலக்குகளும், தனித்தனி இலக்குகளும் கொடுக்கப்பட்டன. திருஷ்டாயுதம்னாவிற்கு துரோணரும், சிகண்டிக்கு பீஷ்மரும், அர்ஜூனனுக்கு கர்ணனும், பீமனுக்கு துரியோதனனும் அவனது சகோதர்களும், சகாதேவனுக்கு சகுனியும் அவனது மகன்களும், நகுலனுக்கு கர்ணனின் மகன்களும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டனர். அந்த இலக்கை நோக்கியே அவர்களும் செயல்பட்டனர்…

ஒரு தொழிலாளியின் முழுமையான வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்தே முழுமையடைகிறது (Growing along with the organization). எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு பார்வையையும், இலக்கினையும் கொண்டிருக்கின்றன (Vision and mission) , அந்த கொள்கைகளுக்கேற்றவாறே மற்ற துறைகளுக்கும், குழுக்களுக்கும் தனித்தனி இலக்குகளும், செயல்பாதைகளும் நிர்ணயிக்கப் படுகின்றன. பல சமயங்களில் இந்த இலக்குகளே நம்முடைய பாதைகளை அமைத்துத் தந்து விடுகின்றன. சரியான குழு என்பது சரியான தனி மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது (The Right team is made by selecting the Right Individuals. Get the right man for the right job)

6. பெண்ணுரிமை (Women Empowerment)

கவுரவர்கள் ஏறக்குறைய பேட்ரியார்ச்சல் (Patriarchal) முறையை பின்பற்றினர். போரின் போதும் சரி அதற்கு முன்பும் சரி பெண்கள் முடிவெடுக்கும் செயலிலோ, மற்ற முக்கிய விவகாரங்களிலோ  அனுமதிக்கப்படவேயில்லை. கவுரவர்களின் தாயாரான காந்தாரியின் வார்த்தைகள் கூட மதிப்பின்றி தொலைந்துதான் போனது

பாண்டவர்களோ ஏறக்குறைய மேட்ரியார்ச்சல் (Matriarchal)  முறையை பின்பற்றினர். குந்தி சொல்லும் வார்த்தைகள் அங்கே வேதவாக்காகக் கருதப்பட்டது. அதே குந்தியால்தான் கர்ணனிடம் அர்ஜூனனைத் தவிர மற்றவர்களைக் கொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்க முடிந்தது. பாண்டவர்களின் எல்லா முடிவுகளின் பின்பும் திரவுபதியின் பங்கு இருந்தது. மற்ற முக்கிய தளபதிகளான அபிமன்யு, கடோத்கஜன், இராவண் ஆகியோரின் வீரம் மற்றும் குண நலன்களின் பின்புலமாக அவரவர்களுடைய தாயாரின் பங்கு பெரிதாக இருந்தது

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையடைவதற்கும் பெண்களின் துணை மிக அவசியமாகிறது (Women = Better Half. Any man who doesn’t have women in his side is considered to be unfulfilled, for the Masculine traits of aggression and dominance should be balanced by the Feminine traits of harmony and sustenance)